ஞாயிறு, 10 மார்ச், 2019

இலங்கையின் ஒரு பகுதியில் கடும் மழை!! மறுபகுதியில் கடும் வெப்பம்!!

நாட்டில் பல பகுதிகளில் நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கு நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பத்துடனான வானிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் வரையில் வெப்பத்துடனான வானிலை நீடிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் வடக்கு கிழக்கில் 15-25 வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை இரத்தினபுரி. காலி, மாத்தறை மற்றும் களுத்துறை பகுதிகளில் இடி அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.

சவேந்திர சில்வா மீது உள்ளக விசாரணை நடத்த இராணுவம் மறுப்பு

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்ளக விசாரணைகளை நடத்த இராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இதனை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை இராணுவம் மீது எதற்காக போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்ற காரணத்தை கண்டறிவதற்காக, உண்மை கண்டறியும் ஆய்வு ஒன்று நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை கடந்த வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டது. அந்த அறிக்கையில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணைகளை நடத்த இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

மதம் மாற்ற வந்த பெண்களுக்கு மட்டக்களப்பு இளைஞர்கள் அதிரடி!! (Video)

மதம் மாற்ற வந்த பெண்களுக்கு மட்டக்களப்பு இளைஞர்கள் அதிரடி!! (Video)

மன்னார் புதைகுழி முஸ்லீம்களின் மயானமாம்!! இது எப்புடி??

மன்னார் புதைகுழிக்கு முஸ்லீம்கள் உரிமை கோரி தங்களது பல்லாண்டுகால இலங்கை வரலாற்றை கூறி முற்பட்டுள்ளனர் போல தெரிகின்றது. இதோ ஒரு முஸ்லீம் பல்கலைக்கழக பேராசிரியர் தெரிவித்த கருத்துக்கள்.... 

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று ஆதாரங்களுக்கான ஆதார, மையங்களாக,
மீஸான்களும்,சியாறங்களுமே மிஞ்சி உள்ளன, அந்த வகையில் எலும்புக்கூடுகளும், புதைகுழிகளும் கூட வரலாற்றை ஒரே நாளில் புரட்டிப் போடக்கூடிய பலமான ஆதாரங்களாக உள்ளன,

அந்த வகையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் அண்மைக்காலமாக மன்னார் சதொச பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக் கூடுகள் தொடர்பாக பல ஊகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன, ஆனாலும் அவை தொடர்பான காலப்பகுதி ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டாலும், சம்பவம் பற்றிய,உறுதியான வரலாற்று ஆதாரங்கள் முன்வைக்கப்பட வில்லை,ஆனால் அவை முஸ்லிம்களுக்குரியதாக உள்ளன என்பதை நிரூபிப்பதற்கான ஊக ஆதாரங்களை முன்வைக்கும் பதிவே இதுவாகும்,

#மன்னார்_மாவட்டம்,

மன்னார் மாவட்டம் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக குடியிருப்புக்களில் முக்கியமான இடம், அறபுக்கள், இந்திய, ஆபிரிக்க, முஸ்லிம்களும், வியாபாரிகளும் நீண்டகால வரலாற்றைக் கொண்டிருந்த இடமாகும், இதன் அத்தாட்சிகளாக இன்றும் அங்குள்ள பெருக்க மரங்களையும், அறபுக்கள் பயன்படுத்திய துறைகளையும், நீண்ட புராதன 40 முழ சியாறங்களான கப்றுகளையும் காண முடியும்,

#மன்னார் #புதைகுழியும், #அறிக்கையும்,

மன்னார் புதை குழியில் இதுவரை 323 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன, அதில் 28 சிறார்களுடையதாகும், இவை களனிப் பல்கலைக்கழகப் Prof ,Raj Somadava தலைமையிலான தொல்லியல் குழுவினரால் அகழ்ந்தெடுக்கப்பட்டு காபன் அணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அதன் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது,

அறிக்கையின்படி குறித்த சடலங்கள் கி்பி,1450-கி்பி.1650 காலப்பகுதிக்குரியன என புளோரிடா வில் உள்ள பீட்டா ஆய்வு மையம் காபன் அறிக்கையினூடாக அறிவித்துள்ளது, இதனை மன்னார் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது,

#சர்ச்சைகள்

குறித்த காலப்பகுதியில் இலங்கையில் போர்த்துக்கேய (1505-1658) ஆட்சிக்காலமாகும், இக்காலத்தில் இடம் பெற்ற பாரிய இன அழிப்பு புதை குழியாக இது இருக்கலாம் என உறுதியாக நம்பலாம், ஆனாலும் இவை யாழ்பாண மன்னன் சங்கிலியன் படை எடுப்பில் கொல்லப்பட்ட கிறிஸ்த்தவர்களின் சடலங்கள் என்றும், போர்த்துக்கேய காலத்தில் கொல்லப்பட்ட சைவர்களினது எனவும் சிலரால் ஊகிக்கப்படுகின்றது,

ஆனால் போர்த்துக்கேயரின் பிரதான நோக்கம் மதமாற்றமும், வியாபாரமுமாக இருந்த்தனால் அவை முஸ்லிம்களுக்கு எதிரான இருண்டகாலம் என்பதே வரலாறாகும், ஏனெனில் தமிழர்கள் மதமாற்றத்தை ஏற்றனர், ஆனால் முஸ்லிம்கள் முற்றாக எதிர்த்தனர், அதன்படி நோக்கினால் குறித்த புதை குழி முஸ்லிம்களுடையதாக இருப்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன,

#வரலாற்று_ஆதாரங்களும்_மறுப்பும்,

1).சங்கிலி மன்னனின் அரச தண்டனை

குறித்த எலும்புக்கூடுகள் சங்கிலி மன்னனால் 1540ல் பாதிரியார் உட்பட கொல்லப்பட்ட 600 பேருடையதாக இருக்கலாம் என்ற ஊகத்திற்கு வாய்ப்பில்லை, காரணம், அது பேசாலைப்பகுதியில் ” #தோட்ட_வெளி எனுமிடத்தில் ஏற்கனவே அடையாளங்காணப்பட்டு தோட்ட வெளி வேத சாட்சிகளின் அன்னை ஆலயமும் அமைக்கப்பட்டு கத்தோலிக்கர்களால் பராமரிக்கப்படுகின்றது,

இன்னும் ஆரியச் சக்கரவர்த்தியின் வாரிசுகளும் சங்கிலி மன்னனது வரலாற்றை அறிந்தவர்களும், சில யாழ்ப்பாண வரலாற்றாய்வாளர்களும் இதனை மறுக்கின்றனர், அதன்படி சங்கிலி மன்னன் குழந்தைகளைக் கொல்ல வில்லை என மன்னனின் வாரிசான ரெமிஜியஸ் கனகராஜா குறிப்பிடுகின்றார், ஆகவே இந்தப் புதை குழிக்கும் சங்கிலி மன்னனது அரச தண்டனைக்கும் தொடர்பில்லை என்ற ஊகத்திற்கும் வர முடியும்,

அடுத்த ஊகமாக கொள்ளப்படுவது ,இது ஒரு புராதன #மயானமாக இருந்திருக்கலாம் என்பது, ஆனால் அது தொடர்பான எந்தப் பதிவுகளும் மன்னார் மாவட்ட அலுவலகங்களில் இதுவரை இல்லை ஆகவே இந்த ஊகமும் நிராகரிக்கப்பட வேண்டியதே,

அவ்வாறாயின் இது யாருடையது,??

குறித்த கேள்விக்கான பதிலை குறித்த புதை குழியில் சடலங்கள் இருந்த அமைப்பு முறையை ஆராய்வதன் மூலம் ஓரளவு விளங்கிக் கொள்ள முடியும்,

1). இங்கு காணப்பட்ட உடல்கள் தலைகள் எல்லாம் ஒரே திசையை நோக்கியும், கால்கள் எல்லாம் ஒரு திசையை நோக்கியும் முறையாக அடக்கப்பட்டிருக்கின்றன, இது இன்றும் முஸ்லிம்கள் அடக்கும் கிப்லாவை நோக்கிய முறைக்கு ஒப்பானது, அத்தோடு இரு உடல்களுக்கிடையில் இடைவெளியும் காணப்படுகின்றது,

இன்னும் சில வேறாக, எலும்புகளாக குவிக்கப் பட்டிருக்கின்றன, இவை காலப்போக்கில் ஏதோ ஒரு மாற்றத்துக்குள்ளாகி இருக்கக் கூடும், அல்லது அவை முஸ்லிம் அல்லாத ஏனைய சைவ, இந்து, பௌத்தர்களுடையதாகவும் இருக்க முடியும்,

இன்னுமொரு அடையாளமாக இவ் உடல்களோடு எவ்வித ஆடை,ஆபரண அலங்காரங்களும் இல்லை.

முஸ்லிம்கள் தமது சடலங்களை ஒரு வெற்றுத்துணியினாலேயே சுற்றுவர்,,ஆனால் ஒரே ஒரு காப்பு வடிவிலான வளையம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது, இது கைதிகளாகப் பிடிக்கப்பட்டதன் அடையாளமாகவோ, தளபதிகளின் அடையாளமாகவோ இருக்க முடியும்,

இந்த வகையில் போர்த்துக்கேயரின் மத மாற்றத்திற்கு எதிராக போராடிய மக்களின் புதை குழியாக இது இருக்க முடியும் என்ற ஊகம் இன்னும் வலுக்கின்றது, அது முஸ்லிம்களுக்கே மிகவும் பொருத்தமானதாகவும் உள்ளது, இறுதிச் சடங்கையாவது தமது சமய முறைப்படி செய்ய எஞ்சி இருந்தவர்களை அனுமதித்து இருக்கவும் முடியும்,

இந்த வகையில் மன்னார் மாவட்ட புதை குழி இலங்கை முஸ்லிம் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டதாகவும் இருக்கின்றது,

#முஸ்லிம்_வரலாற்று_ஆதாரங்கள்,

போர்த்துக்கேய காலம் இலங்கையில் முஸ்லிம்களின் இருண்ட காலமாக இருப்பதற்கு பல நிகழ்வுகளும், இன அழிப்புக்களும் காரணமாக உள்ளன, அது நாட்டின் பல பாகங்களில் இடம் பெற்றுள்ளது ,

அந்தவகையில் இலங்கையின்பல பாகங்களில் முஸ்லிம் இன அழிப்பு இடம் பெற்றதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்,

அதன்படி,
RL Brohier தனது Historical Series என்ற நூலில் முஸ்லிம்களில் பல பள்ளிவாசல்களும், புனித அடக்கஸ்தலங்களும்,போர்த்துக்கேயரால் தீயிட்டு அழிக்கப்பட்டதாகவும், அதில் Gal Baak என்ற இடத்தில் இருந்த பள்ளிவாசல் முக்கியமானது என்கின்றார்,

அதே போல சமோரியப் பேரரசின் உதவியுடன் குஞ்சலி மரைக்காய தளபதிகள் வந்து சிங்கள மன்னருடனும், மக்களுடனும் இணைந்து 1518ல் போர்த்துக்கேயரைத் தாக்கியதாகவும், அதற்கான பழி வாங்கலை போர்த்துக்கேயர் இன அழிப்புச் செய்து தீர்த்துக் கொண்டனர் எனவும் பதிவுகள் உள்ளன.

இப்பழிவாங்கல்கள் 1613, 1622,1623, 1626 போன்ற காலங்களில் இடம்பெற்றதுடன்,வடக்கின் பன்னல்துறை என்ற இடத்தில் இருந்த பள்ளிவாசல் அழிக்கப்பட்டு 1614ல் டொம் பெட்டோ எனும் தளபதி அவ்விடத்தில் தேவாலயத்தை அமைத்ததாகவும் பதிவுகள் உள்ளன,

இதே போல் 1560-1646 வரை தென்பகுதியிலும் இவ் இன அழிப்பு இடம்பெற்று இருக்கின்றது,இது முஸ்லிம் இருப்பிலும் ,சனத்தொகையிலும் அதிக வீழ்ச்சியைக்கொண்டுவந்த்தற்கான ஆதாரங்கள் உள்ளன,

அதே போல வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் யோகி சிக்கந்தர் தலைமையில் மென்டன்ஷா என்பவனின் படையை இந்துக்களுடன் இணைந்து எதிர்த்தனர், அதிலும் பலர் கொல்லப்பட்டனர், இது 1591ல் கொழும்புத்துறையில் இடம்பெற்றது,

Abeysinghe T, என்ற வரலாற்று ஆய்வாளரின் Jaffna Under the Portuguese என்ற நூலில் யாழ்ப்பாண மன்னராட்சியில் பல தேசத்தை சேர்ந்த முஸ்லிம்கள் செல்வாக்குடன் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார், அதிலும் கேரளாவைச் சேர்ந்த ” #மாப்பிள்ளை ” முஸ்லிம் குடியினர் அரச சபையில் அதிக இடம்பெற்றிருந்தனர்,

அது்போல சோனர் எனப்பட்ட அறபுக்களும், குஞ்சலிகள் எனப்பட்ட குஜராத்திகளும், பாப்பராவர் எனப்பட்ட ஆபிரிக்கர்களும், மாப்பிள்ளை எனப்பட்ட கேரளாக்களும் அக் காலத்தில் தமது குடியிருப்பை மன்னார் மற்றும் வட இலங்கையில் கொண்டு வாழ்ந்து இருந்தனர்,

#புதிய_ஆய்வுகளும்_நிரூபணங்களும்,

இலங்கை முஸ்லிம்களின் மறக்கப்பட்ட வரலாற்றை விடி வெள்ளி பத்திரிகையில் தொடராக, எழுதிவரும் பேராசிரியர் #MSM_அனஸ் தனது புதிய வரலாற்று களத் தேடல்களில் மன்னார் தொடர்பான பல புதிய உண்மைகளை முன்வைக்கின்றார், அதன்படி மன்னார் முத்துக்குளிப்பை கைப்பற்ற போர்த்துக்கேயர் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றதாக்க் குறிப்பிடுவதுடன், “அறுபது மரைக்கால் தாலி அறுபட்ட குளம்” ,மினாறா, போன்ற பகுதிகள் அதிகமாக முஸ்லிம்களை போர்த்துக்கேயர் கொன்ற இடங்கள் என்ற கருத்தையும் முன்வைக்கின்றார், இதனை ஒத்த தகவல்கள் எம் ,கே, எச் முஹம்மது (2004) அவர்களின் பதிவுகளிலும் உண்டு,

அதே போல சங்கிலியன் படைகளுடன் இணைந்து முஸ்லிம்கள் போர்த்துக்கேயரைத் தாக்கியதாகவும், படைகளுக்கான ஒத்துழைப்பை வழங்கியதாகவும், வரலாறுகள் உண்டு,

#இறுதி_முடிவுகள், ,

இந்த வகையில் பல வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து நோக்குகின்ற போது மன்னார் சதொச பகுதியில் கண்டெடுக்கப்பட்டு ஆய்வை முடிவில் போர்த்துக்கேய கால படு கொலைகள் என அகழ்வாராய்ச்சி அறிக்கை பெறப்பட்டுள்ள புதை குழி, முற்றாகவோ, பகுதியளவிலோ, முஸ்லிம்களுடைய எலும்புக்கூடுகளாக இருப்பதற்கான ஆதாரங்கள் பலமாக உள்ளன, அவை எமது மன்னார் பூர்வீக இருப்பின் பலமான அடையாளங்கள்

#நமது_பலவீனம்,

வழமை போன்று முஸ்லிம்களின் வரலாற்று அக்கறை இன்மையும், தொல்லியல் அறிவும், ஆளணியும் இல்லாமையும் இவ்வாறான ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் பற்றிய கண்டு பிடிப்பை ஏனைய சமூகத்தின் உரிமைக் கூடைக்குள் வாரி வழங்கி விடுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன,

அந்த வகையில் இது தொடர்பான இன்னும் ஆழமான வரலாற்றைத் தேடுகின்ற போது இவ் ஆதாரங்கள் எமது முன்னோரின் தியாகங்கள் என உறுதிப்படுத்தும் சான்றுகள் மிக இலகுவாக வந்தடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன, ,

#இறுதி_வேண்டுகோள், நாம் #என்ன_செய்யவேண்டும்??

1).கற்றவர்களும், ஆய்வாளர்களும் தமது அறிவையும், தேடலையும் சமூகத்தின் முன்வைப்பது கடமை. அந்த வகையில் பல ஆய்வாளர்கள் தமது சொந்த முயற்சியில் இவ்வாறான தேடல்களை மேற்கொள்கின்றனர், அவ்வாறானவர்களை பண ரீதியாகவும், மன ரீதியாகவும் ஊக்குவிப்பது ஆர்வமுள்ள சமூகத்தின் கடமை ,அவ்வாறான செயற்பாடுகளில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின், தனவந்தர்களும், உலமாக்களும் ,சமூக ஆர்வமிக்கவர்களும்,அமைப்புக்களும், ,உற்சாகமூட்டுவார்களாயின், இது போன்ற பல வரலாற்றுத் தடயங்களை எமது உரிமைக்கான ஆதாரங்களாக்கிக் கொள்ள முடியும்,

2).அடுத்தது, #தென்_கிழக்குப் #பல்கலைக்கழகத்தில் எமக்கான ஒரு தொல்லியல் துறையை (Archeology Department)உருவாக்கி, முஸ்லிம் பார்வையில் தொல்லியலை நோக்குதலும் ,வரலாற்று ஆதாரங்களை மறு பரிசீலனை செய்தலும், இது அரசியல் வாதிகள் ,குறிப்பாக தற்போது பதவியில் இருக்கும் உயர்கல்வி அமைச்சர் ரவூவ் ஹக்கீம், மற்றும் ஆளுநர் ஹிஸ்புல்லா செய்ய வேண்
டிய அவசரமான நடவடிக்கை . பதவிக்காலத்தில் இருக்கும்போதே இதனைச் செய்யவேண்டும் இதனை அனைவரும் வலியுறுத்த வேண்டும்,

3).அதே போல் எம்மிடையே இன்று எஞ்சி இருக்கும் சியாறங்களையும், மீஸான்களையும் இயக்க பேதமற்று, அனைவரும் பாதுகாப்பதே எமது இருப்பிற்கான வரலாற்று ஆதாரம், அதற்காக அமைச்சர் ரிஷாட்டின் கைளை பலப்படுத்துவோம் , பேசாலை உட்பட மன்னார் மாவட்டம் முஸ்லிம்களின் பூர்விக பூமி என்பதை அடையாளப்படுத்த அயராது பாடுபடுவோம் இன்றேல் அடையாளமற்ற சமூகமாகவே வாழ்ந்து அழிய வேண்டி வரலாம்,

MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA,


யாழில் சீருடைகளுக்குப் பயந்த காலம் போய் இப்போ பிள்ளைகளுக்கு பயந்த காலம் வந்துவிட்டது!! கூறுவது யார்?

அறத்தை போதித்த யாழ்ப்பாண மண்ணில் வாள்கள் பேசுகின்றன.முன்னொரு காலத்தில் சீருடையினருக்கு பயந்திருந்தோம். ஆனால் இன்று எமது பிள்ளைகளைப் பார்த்தே பயப்படும் நிலை உருவாகியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை ஆளுநரால் கூடக் கட்டுப்படுத்த முடியவில்லை
இவ்வாறு தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் தலைவர் ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நீராவியாடியில் இடம்பெற்ற நீதி நூல் தொகுப்புக்கள் அறிமுக விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்துக்கு மூன்று ஆளுநர்கள் மாறி மாறி பதவிக்கு வந்தனர்.ஆனாலும் அவர்களால் வாள்வெட்டு உள்ளிட்டு சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.அப்படியாயின் இது வேறு பிரதேசத்தவர்களினால் ஆற்றப்படுகின்றதா எனச் சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது.இந்து சமய அறத்தின் படி வாழ்கின்றவர்களினால் இவ்வாறான இழிவான செயல்களை செய்ய முடியாது.அறத்தை பயிலாமையினாலேயே இவர்கள் மனித நேயம் அற்று இப்படி செய்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (10.03.2028)

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்.கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள்  தாமதமாக முடியும்.பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் போராடிலாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சகஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மிதுனம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நம்பிக் கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும் படி நடந்துக் கொள்வீர்கள். இனிமையான நாள்.

கடகம்: உணர்ச்சிப்பூர் வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

துலாம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல  செய்தி உண்டு. தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தினரு டன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து  சேமிக்கத்  தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபா ரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நினைத்ததை முடித்துக்காட்டும் நாள்.

மகரம்: எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். நட்பு வட்டம் விரியும். புது வேலைக் கிடைக்கும். தாயாருக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். திடீர் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோ கத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக் கும். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத் தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

மீனம்: கடந்த இரண்டு நாட்க ளாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். தோற்றப் பொலிவுக் கூடும். தடைப்பட்ட வேலைகளை மாறு பட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டு வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் திருப்தி உண்டா கும். மகிழ்ச்சி தங்கும் நாள்.

சனி, 9 மார்ச், 2019

லொறி - பட்டா வாகன விபத்தில் கிளிநொச்சியில் ஒருவர் படுகாயம்!! (Photos)

கிளிசொச்சி ஏ9 வீதியில் இன்று பகல் நடந்த விபத்தில் பட்டா வாகனச் சாரதி படுகாயமடைந்துள்ளர். எதிராக வந்த லொறியுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

Image may contain: sky and outdoorImage may contain: outdoorImage may contain: outdoorImage may contain: sky and outdoor

யாழ் நீர்வேலியில் கோர விபத்து!! கணவன், மனைவி படுகாயம்(Photos)

யாழ்.நகரில் இருந்து நெல்லியடிக்கு சென்றுகொண்டிருந்த ஹயஸ்வாகனம் ரயர் வெடித்ததில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் உள்ள கடையின் கேற்றினை உள்ளே நுழைந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது வானில் எட்டு பேர் பயணித்துள்ளனர் இதில் கணவன் மனைவி இருவருக்கு காயமடைந்துள்ளளனர்.
காயமடைந்தவர்கள் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.





யாழ் ஈச்சமோட்டையில் பொண்ணுக்குட்டிக்கும் செல்லம்மாவுக்கும் கள்ளக்காதல்!! பிறந்த குழந்தைக்கு நடந்தது என்ன?

 85 வருசத்துக்குது முதல் மரமேறுற பொன்னுக்குட்டி சாதாரணமா செய்த வேலையைத்தான் இப்போதய மகப்பேற்று நிபுணர்கள் பெரிய பந்தா காட்டி செய்கின்றார்கள்...

இந்தச் செய்தி 85 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அந்தக்காலத்து தமிழப் பத்திரிகையில் வந்த செய்தியாகும்.

கீழே அந்தச் செய்தி தரப்பட்டுள்ளது.


இலங்கைப் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சிறிஸ்கந்தராஜா ( அதிர்ச்சிப் புகைப்படங்கள்)

கிளிநொச்சி 8 ஆம் வாய்க்கால் பகுதியில் 1998 ஆம் ஆண்டு மார்கழி இறுதி வாரத்தில் சிறிலங்கா படையினரால் பிடித்துச்செல்லப்பட்ட 22 பேரில் ஒருவரின் புகைப்படமே இங்கே பதிவேற்றப்பட்டுள்ளது. மிகுதி 21 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை.

காந்தன் என்று அழைக்கப்படும் நாகலிங்கம் ஸ்ரீறிஸ்கந்கராசா தனது சகோதரியின் கணவன் பரமேஸ்வரனுடன் வீடுபார்ப்பற்காக கிளிநொச்சி உருத்திரபுரம் 8ஆம் வாய்க்கால் பகுதிக்கு சென்றிருந்தார். அப்பகுதியை நோக்கி இராணுவம் பின்பக்கமாக வருவதை கண்டு அங்கிருந்த பலர் தப்பியோடிவிட்டனர். ஏனையோர் விடுதலைப்புலிகள் என நினைத்து அவ்விடத்திலேயே நின்றுவிட்டார்களாம். பிடித்துச்செல்லப்பட்ட 22 பேரில் காந்தன் அவர்களுடைய தலைவெட்டப்பட்ட புகைப்படம் மட்டுமே கிடைத்திருந்தது. ஏனையோர்களின் நிலை இதுவரை தெரியவரவில்லை. இவர்களது விபரங்கள் தெரிந்தவர்கள். புகைப்படங்களுடன் தொடர்புகொள்ளுங்கள். சிறைச்சாலைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள் ஒரு வேளை இவர்களையும் கண்டிருக்கலாம்.

புகைப்படம் கண்டெடுக்கப்பட்ட இராணுவமுகாம் ஒரு சித்திரவதை முகாம். இது திருநகரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சன பிரிவு இயங்கிய இரண்டு வீடுகளே படையினரின் சித்தரவதைமுகாம்களாக இருந்துள்ளது.
………

இந்தமுகாமிற்கு பிடித்துச்சென்று சித்திவதைக்குள்ளான ஒருவரின் வாக்குமூலத்தில் இருந்து…

ஸ்கந்தபுரத்தில் இருந்து வட்டக்கச்சி போவதற்காக சேவியர் கடைச்சந்திக்கு வந்திருந்த கிளிநொச்சியில் வசித்து வந்த(தற்பொழுது எங்கிருக்கின்றார் என்ற தெரியவில்லை) உந்துருளி திருத்துநரும் அவரது மருமகனும் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு இம்முகாமில் மூன்று நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டிருந்தனர். பின்னர் பளைப்பகுதியில் உள்ள ஒரு முகாமிற்கு கொண்டு சென்ற போதே அங்கு ஏற்கனவே பிடித்துச்செல்லப்பட்ட கிளிநொச்சி தபால் அதிபர் இருந்திருக்கின்றார். அரச ஊழியர் என்பதற்காக அவரை படையினர் விடுவிப்பதாக சொல்லியிருந்தார்களாம். தபால் அதிபருக்கு தங்களை நன்கு அறிமுகம் என்பதால் இராணுவத்தினருடன் கதைத்துபடியால் தங்களுக்கு விடுதலை கிடைத்தது என்று தெரிவித்திருந்தார். (இதன் முழுவிபரம் பிறிதொருநாளில் பதிவேற்றுகிறேன்) 8.3.2019



Image may contain: 3 people, people standing and text

யாழ் கொடிகாமத்தில் கோர விபத்தில் இளைஞன் பலியானது ஏன்?? (Photos)

கொடிகாமம் கச்சாய் வீதியில்  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்  துவிச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த இருவரில் இளைஞன் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. மோட்டார் சைக்களிலில் பயணித்த குலேந்திரநாதன் பிருந்தன் (வயது-19) என்பவரே உயிரிழந்தார். சம்பவத்தில் படுகாயமடைந்த எஸ்.சதீஸ்தரன் (வயது-32) என்ற பிரதேச சபை ஊழியர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

யாழ் கொக்குவிலில் வாள் வெட்டு!! 60 வயது விதாணையார் வழ வழ, கொழ கொழ

இந்தச் செய்தி 1935ம் ஆண்டு யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அந்தக்காலத்து தமிழப் பத்திரிகையில் வந்த செய்தியாகும்.

கீழே அந்தச் செய்தி தரப்பட்டுள்ளது.



யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயாம்!! பொலிசார் செய்த அலங்கோலம்!! (Photos)

கொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய கச்சாய் அம்மன் கோவிலடியைச் சேர்ந்த  மோட்டார் சைக்கிள் சாரதி, தென்மராட்சி “சாவக் குழு” வன்முறைக் கும்பலின் தலைவர் என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் எஸ்.சதீஸ்தரன் (வயது-32) என்ற பிரதேச சபை ஊழியர் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர். கே.பிரியந்தன் (வயது-19) என்பவர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள வீதியில் 800 மீற்றர் தொலைவில் இடம்பெற்ற இந்த விபத்து ஐந்து மணித்தியலங்களாகியும் பொலிஸாருக்குத் தெரியாது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நண்பகல் 12. 30 மணியளவில்  இடம்பெற்று சுமார் ஐந்து மணித்தியாலங்களின் பின்னரே பொலிஸார்  சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதுவரை விபத்திற்குள்ளான துவிச்சக்கரவண்டி சேதமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மீட்க்கப்படாது இருந்துள்ளது. துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் சாவகச்சேரி பிரதேச சபை ஊழியர்.

அவர் விடுமுறை நேரத்தில் பழைய இரும்பு , போத்தல்கள் சேகரித்து விற்பனை செய்து வருபவர். அவ்வாறு சேகரித்த பொருள்களை மூட்டை கட்டியவாறு பயணித்த நிலையில் விபத்துக்குளாகியுள்ளார்.
விபத்துக்குள்ளாகி இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் யாரும் உடனடியாக மீட்க முன்வரவில்லை. இதனால் உச்ச வெயிலில் வெகு நேரம் விபத்துக்கு உள்ளானவர்கள் வீதியிலேயே கிடந்துள்ளார்கள்.
பின்னர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இதேவேளை, விபத்து இடம்பெற்று பொலிஸார் சம்பவ இடத்திற்கு செல்லும் முன், விபத்துக்குக் காரணமான மோட்டார் சைக்கிளை இருபது பேர் கொண்ட கும்பல், அங்கிருந்து எடுத்துச் சென்றுவிட்டது.

விபத்தில் சிக்கிய துவிச்சக்கரவண்டி துண்டு துண்டாக சிதறிய நிலையில் பொலிஸார் மீட்டனர். பத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (09.03.2028)

மேஷம்
இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3


ரிஷபம்
இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் முதல்தர மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6

மிதுனம்
இன்று கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்
இன்று உத்தியோகஸ்தர்கள்: அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும். காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சனைகள் தீரும். எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் கூடாது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7

சிம்மம்
இன்று எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ள தேவையான பயிற்சி படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7

கன்னி
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5


துலாம்
இன்று குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம்
இன்று மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல் படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம். கல்வியில் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3

தனுசு
இன்று குடும்ப பிரச்சனை தீரும். ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மை தரும். பணவரவு உண்டு. ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மகரம்
இன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கும்பம்
இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்
இன்று விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம்.குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும் அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9


வெள்ளி, 8 மார்ச், 2019

தமிழீழக் கவிஞனின் திறமையைப் பாருங்கள் (Video)!! பகிர்ந்து உற்சாகப்படுத்துங்கள்!!

கட்டராசுவின் கடைப் பக்கமா கசிப்படித்தவன் தத்துவம் பேசி.... சட்டநாதர் கோவில் பக்கம்......



கிளிநொச்சி விவசாயியின் திறமையைப் பாராட்டுவீர்களா?? பகிர்ந்து கொள்ளுங்கள்!!

கிளிநொச்சி வட்டக்கச்சி பரம்பரை பரம்பரையாக விவசாயத்தை நம்பியே பலர் வாழ்ந்து வரும் ஓர் கிராமம்.

இதில் சில இளம்வயதுடையோர் விவசாயத்தை விரும்புவதில்லை ஏன் எனில் செலவு தான் காரணம் நெல்லை வயலில் விதைத்தது தொடக்கம் வெட்டி வீடு கொண்டு வரும் வரை அவர்களுக்கு சீ என்று போய் விடும் அதட்குரிய லாபம் பாேதாமை ஓர் காரணம் ஆகும்.

கடந்த காலத்தில் வயல் நிலங்களில் வெள்ளம் பாய்ந்து விவசாயிகளுக்கு கடும் கஸ்டத்தினை கொடுத்துள்ளது.

பொதுவாக உழவு இயந்திரத்தில் பெட்டி சில் சிறிதாகவே காணப்படும்.
இதனால் பல உழவு இயந்திரங்கள் புதைவது அனைவரும் அறிந்ததே.

இதனை சுலபமாக்கும் வகையில் இந்த விவசாயி பெட்டி சில்லுக்கு பதிலாக உழவு இயந்திரத்தின் பெரிய சில்லை பொருத்தியுள்ளார்.

இதனூடாக விவசாய நிலங்களில் வேலையை சுலபமாக முடிக்க முடிந்தது என விவசாயிகள் பெருமை கொண்டனர்.
Image may contain: tree, sky and outdoorImage may contain: tree and outdoorImage may contain: outdoorImage may contain: outdoorImage may contain: tree and outdoorImage may contain: outdoor

அவுஸ்ரேலியாவுக்குப் போய் தமிழ்ப் பெண் நடாத்தும் கேவலத் திருவிளையாடல் (Video)

வுஸ்ரேலியாவில உள்ள நம்ம தமிழ் அக்கா சொல்லுவது சரியா?

வீடியோவைப் பார்வையிடுவதற்கு முதல் கீழே உள்ள இணைப்பை அழுத்தி இந்த subscribe செய்த பின்னரே குறித்த வீடியோவைப் பார்வையிடுங்கள்.

https://www.youtube.com/channel/UCxugrQ-AB9MY-s18YlwMZZQ?view_as=subscriber




நெடுங்கேணி சிறுவன் கடத்தல் விவகாரம் சிறுவனின் தாயாரின் திருவிளையாடலாம்!! (Photos)

தந்தையை வெளிநாட்டுக்கு அனுப்பியமைக்கான 35 இலட்சம் ரூபா தரகுப் பணத்தை வழங்குமாறு 8 வயது மகனை வெளிநாட்டு முகவர் ஒருவரின் தரப்பினர் அழைத்துச் சென்றனர் என்று
தெரிவிக்கப்பட்டது.

“ஆஸ்திரேலியாவில் உள்ள தந்தைக்கு வதிவிட விசா கிடைப்பதற்காக சிறுவனின் தாயாரால் மகன் கடத்தப்பட்டதாக உண்மைக்குப் புறம்பாக முறைப்பாடு வழங்கப்பட்டது. அதுதொடர்பில் சிறுவனின் தாயார் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்படார்” என்று நெடுங்கேணிப் பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த திரிபரஞ்சன் தமிழவன் என்ற சிறுவனே இவ்வாறு கடத்தப்பட்டதாக முறைப்பாடு
வழங்கப்பட்டுள்ளது.

“சிறுவன் நேற்றுமுன்தினம் மாலை  தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது அப்பப்பா வீட்டிற்கு  சென்றிருந்தார். இருப்பினும் சிறுவன் அப்பப்பா வீடு செல்லவில்லை.

” இரவிரவாக உறவினர்கள் இணைந்து தோட்டம் மற்றும் தோட்ட கிணறுகள் எல்லாம் தேடிய நிலையில் சிறுவனை காணவில்லை” என்று சிறுவனின் தாயரால் நேற்றுக் காலை நெடுங்கேணிப் பொலிஸ்
நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.

சிறுவனை சிறுவனின் தந்தையை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்த  35 இலட்சம் ரூபா தரகுப் பணத்தைத் தந்தால் சிறுவனை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு காலை அழைப்பு ஒன்று வந்திருந்ததுடன்,  கடத்தப்பட்ட சிறுவனும் தொலைபேசியில் பேசினார்.

இதன்போது சிறுவன் தன்னை கூட்டிச் செல்லுமாறு தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

மாலையும் பிறிதொரு தொலைபேசியில் இருந்து 35 இலட்சம் பணம் தருமாறு கோரி தாயாருக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டது” என்றும் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.

“சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சிறுவன் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார் என்று கண்டறிப்பட்டது. சிறுவன் பணம் கேட்டுக் கடத்தப்பட்டதாக முறைப்பாட்டை வழங்கி அதன் ஊடாக பொலிஸ் அறிக்கையைப் பெற்று ஆஸ்திரேலியாவில் உள்ள தந்தைக்கு வதிவிட விசா அனுமதி பெற்றுக்கொள்வதற்காக தாயார் முயற்சித்தார் என்பது தெரியவந்த்து.

அதனால் சிறுவனின் தாயார் எச்சரிக்கப்படு விடுவிக்கப்பட்டார்” என்று நெடுங்கேணிப் பொலிஸார் தெரிவித்தனர்.


கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி சடலமாக மீட்பு… !! மகளிர் தினத்தில் நடந்த கொடூரம்..!!(Photos)

பொகவந்தலாவ டின்சின் தோட்டப் பகுதியில் உள்ள தொழிற்சாலை கொலனியில் உள்ள வீடு ஒன்றின் வெளியில் கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ டின்சின் தமிழ் மகா வித்தியாலத்தில் உயர் தரத்தில் கலைபிரிவில் கல்வி பயின்று வரும் மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சிறுமி சடலமாக மீட்கபட்டமைக்கான காரனம் இதுவரை கண்டறியப்படவில்லை.மகளிர் தினமான இன்று சிறுமியின் சடலம் மீட்கப்பட்டமை கவலையை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



முதன்முறையாக இலங்கை பெண்களால் செலுத்தப்பட்ட விமானம்! சற்று முன்னர் வெற்றிகரமாக தரையிறக்கம் (Video)

இலங்கையில் முதன்முறையாக பெண் விமானிகளினால் செலுத்தப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது.

மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கன் விமான சேவையினால் இந்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

முழுமையாக பெண் ஊழியர்களுடனான விமானம் கொழும்பில் இருந்து சிங்கப்பூர் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.

அதற்கமைய சற்று முன்னர் UL 306 என்ற விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளது.



60வயது ஜேர்மன் தமிழ்காதலனிடம் மன்னிப்புக் கேட்டார் ஓடிய காதலி!! யாழில் சம்பவம்!! (Photos)

யாழ்ப்பாணத்தில் பேஸ்புக் காதலியிடம் ஏமாந்த 60 வயது காதலனை பற்றிய செய்தி சில நாட்களின் முன்னர் வெளியாகியிருந்தது. கல்வியங்காட்டை சேர்ந்த 60 வயதான கமலநாதன் என்பவர், பேஸ்புக்கில் இளம் பெண்ணொருவரை காதலித்திருந்தார்.

ஆரம்பத்தில் சாதாரண நட்பாக ஆரம்பித்து, பின்னர் காதலனாது. காதலி தன்னை வவுனியாவை சேர்ந்தவர் என அறிமுகப்படுத்தியிருந்தார். பேஸ்புக் காதலிக்காக, காதலன் கமலநாதன் பல இலட்சம் ரூபாவை செலவிட்டார். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய தயாரான நிலையில், கள்வியங்காட்டிலுள்ள காதலனின் இல்லத்தில் யுவதியும் வந்து தங்கி நின்றார். பின்னர், காதலன் வழங்கிய பணம், நகைகளுடன் தலைமறைவானார். இது குறித்து காதலன் கமலநாதன் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதில் யுவதி முல்லைத்தீவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், யுவதி தற்போது அடையாளம் காணப்பட்டார். இந்த நிலையில், காதலன் கமலநாதனின் வீட்டுக்கு, அவரிடம் மன்னிப்பு கோர யுவதி நேற்று வந்தார். அவரை அழைத்துக் கொண்டு, பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார் கமலநாதன். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண் திருமணமானவர் என்பதும், மூன்று குழந்தைகளின் தாயார் என்பதும் தெரியவந்தது. கணவன் காலை இழந்தவர். கமலநாதன் முதல் அனுப்பிய 7 இலட்சம் ரூபா பணத்தில் காணி வாங்கி, கடன்காசு கொடுத்ததாக கூறியுள்ளார். பின்னர் அனுப்பிய பணத்தில், லோன் காசு கட்டியதாகவும், தாலியை ஒரு கடையில் விற்பனை செய்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் நகை விற்பனை செய்யப்பட்ட இடங்களிற்கு பொலிசார் விசாரணைக்கு சென்றனர். அந்த பெண்ணின் குடும்ப நிலையை அறிந்த கமலநாதன் இரக்கப்பட்டு, வறுமையிலுள்ள குடும்பம் ஒன்றிற்கு உதவிசெய்ததாக அமையட்டும், இந்த பணம் எனக்கு தேவையில்லை, ஆனால் பெண்ணிடமிருந்த தனது சில ஆவணங்களை தருமாறு கேட்டார். எனினும், கமலநாதன் வழக்கு பதிவுசெய்ததன் அடிப்படையில், இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு தாம் கொண்டு செல்ல வேண்டியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் மூலம், மிகுதி பணத்தையும் பெறலாம் என பொலிசார் குறிப்பிட்டனர். எனினும், கமலநாதன் அதை மறுத்து விட்டார். இன்று மதியம் வரை, குறிப்பிட்ட பெண்ணை நீதிமன்றத்தில் முற்படுத்தவில்லை.

வெளிநாட்டுத் தமிழனின் செத்த வீடும் பீசா சாப்பாடும்.. (Video)!! சிரிப்பதற்கு மட்டும் பார்க்கவும்.

பிரான்ஸ் லா-சப்பல் பகுதியில் தமிழ்க் காவாலிகளுக்கிடையில் மோதல்!! ஒருவர் குத்திக் கொலை!!

பரிஸ் லா-சப்பல் பகுதியில் நேற்றிரவு தமிழ் இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கழுத்துப் பகுதியில் குத்திக்கொல்லபட்டார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்தசம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லா-சப்பல் பகுதியிலுள்ள லூயிஸ்-பிளாங் வீதியில் இரவு 8:40 மணியளவில் இடம்பெற்ற இந்தசம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்

அதில் ஒருவர் கையில் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும் மற்றவர் உடலில் பின்பகுதியில் காயமடைந்ததாகவும் காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த மோதல் குறித்து அறிவிக்கபட்டதும் காவற்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். எனினும் காவற்துறையினர் வருவதைக் கண்டதும் மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் அந்த இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனர்

ஆயினும் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள காவற்துறையினர் அவர்கள் இருவரும் தடுத்து வைக்கபட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டுகுழுக்களுக்கு இடையிலான பழைய குரோதமே இந்த சம்பவத்துக்கு காரணமென குறிப்பிடப்பட்டுள்ளது

தமிழ்மக்களின் வர்த்தக மையமாக கருதப்படும் லா-சப்பல் பகுதியில் இடம்பெற்ற இந்த வன்முறைச்சம்பவத்தால் பரிஸ்வாழ் தமிழர்கள் கவலையடைந்துள்ளனர்.

உயிரிழந்துள்ள இளைஞன் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

அமெரிக்க பெண் அரசியல்வாதி இராணுவ அதிகாரி மீது பாலியல் புகார்!!



அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியபோது இராணுவ அதிகாரி ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக  பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக பாராளுமன்ற செனட் சபை உறுப்பினர் மார்தாமெக்சலி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாராளுமன்றத்தில் செனட் சபை (எம்.பி.) உறுப்பினராக இருப்பவர் மார்தாமெக்சலி. இவர் அரிசோனா மாகாணத்தில் இருந்து 2ஆவது முறை குடியரசு செனட் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.

இவர் ஏற்கெனவே அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியவர். 18 வயதில் விமானப்படையில் சேர்ந்த அவர் 26 ஆண்டுகள் பணியாற்றினார். இறுதியாக கெனெல் அதிகாரியாக இருந்தார்.

2010இல் ஓய்வு பெற்றார். அதன்பிறகு அரசியலில் இணைந்த  இவர் செனட் உறுப்பினராக இருக்கிறார். அமெரிக்க இராணுவத்தில் இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக ஏற்கெனவே புகார்கள் இருந்தன.

2017ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் 10 சதவீதம் பெண்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அங்கு நடக்கும் தவறுகள் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்க ஆயுத படைகள் செனட் துணை கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

அதில் உறுப்பினராக உள்ள மார்தாமெக்சலி கூட்டத்தில் கலந்து கொண்டபோது,  விமானப்படையில் இருந்தபோது தனக்கு மேல் உள்ள அதிகாரி ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில் புகார் தெரிவித்தால் பல சிக்கல்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதால் நான் புகார் தெரிவிக்காமல் மௌனம் காத்தேன். ஆனாலும் நடந்த சம்பவங்களை சிலரிடம் நான் கூறினேன். ஆயுதப்படைகளில் இது போல நடக்கும் தவறுகளை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வன்னி நெடுங்கேணியில் 35 லட்சம் கப்பம் கேட்டு 8 வயதுச் சிறுவன் கடத்தல்!! பெரும் பதற்றம்!!

வவுனியா, நெடுங்கேணிக் பகுதியில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த 8 வயது சிறுவன் ஒருவர் நேற்று மாலை 5 மணியளவில் காணாமல் போயுள்ளார்.

பாடசாலை சென்று வீடு திரும்பிய குறித்த சிறுவன் தனது தாயாருடன் வகுப்புக்கு சென்று வீடு திரும்பியிருந்தார். அதன்பின் தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது அப்பப்பா வீட்டிற்கு தோட்டத்தினுடாக சென்றிருந்தார். இருப்பினும் சிறுவன் அப்பப்பா வீடு செல்லவில்லை.

சிறுவன் செல்லும் போது அவுஸ்ரேலியாவில் உள்ள தனது கணவருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த தாயார் உரையாடி முடிந்த பின் சிறுவன் சென்ற வீட்டிற்கு சென்ற போது அங்கு சிறுவன் வரவில்லை என சிறுவனின் அப்பப்பா தெரிவித்துள்ளார்.

அதன்பின் இரவிரவாக உறவினர்கள் இணைந்து தோட்டம் மற்றும் தோட்ட கிணறுகள் எல்லாம் தேடிய நிலையில் சிறுவனை காணவில்லை.

இதன்பின் நேற்றையதினம் காலை கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், சிறுவனை சிறுவனின் தந்தை வெளிநாடு செல்ல காரணமான ஏஜென்சி கடத்தி வைத்திருப்பதாகவும் 35 இலட்சம் தந்தால் சிறுவனை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு காலை அழைப்பு ஒன்று வந்திருந்ததுடன்,  கடத்தப்பட்ட சிறுவனும் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதன்போது சிறுவன் தன்னை கூட்டிச் செல்லுமாறு தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். மாலையும் பிறிதொரு தொலைபேசியில் இருந்து 35 இலட்சம் பணம் தருமாறு கோரி தாயாருக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக்கொண்ட கனகராயன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  திரிபரஞ்சன் தமிழவன் என்ற 8 வயது சிறுவனே இவ்வாறு கடப்பட்டுள்ளவராவார்.


இளம் தமிழ்க் குடும்பப் பெண்ணை விஷம் வைத்துக்கொண்ட கணவன்!! அதிர்ச்சித் தகவல்கள் (Photos)

உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பயங்கர சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது., தமிழகம் குமரி மாவட்டத்தை சேர்ந்த திவ்யா (தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்) ,

பெல்லார்மினுக்கும் கடந்த 1½ வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. பெல்லார்மின் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆன 2 மாதம் வரை திவ்யா, பெல்லார்மின் ஆகிய இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அதன்பிறகு அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், சமாதானம் ஆவதும் என வாழ்க்கை இருந்ததாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தனர். இந்நிலையில் திவ்யா நேற்று காலையில் வழக்கம் போல் அவர் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சாலையோரம் வாகனத்தை நிறுத்திய அவர், அந்த பகுதியில் நின்றவர்களிடம் தனக்கு மயக்கம் வருவதாக கூறியுள்ளார். உடனே அவர்கள், ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து அயலிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே திவ்யா விஷம் வைத்து கொல்லப்பட்டதாகவும் தகவல் பரவியது. மேலும் அவருடைய உடல் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த தகவலை அறிந்த அப்பகுதி போலீசார் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் திவ்யாவின் தந்தை ஜான் அலெக்சாண்டர் தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யா கணவர் பெல்லார்மின், மாமனார் பெர்க்மான்ஸ், மாமியார் அமலோற்பவம் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில் தன்னுடைய மனைவி சாப்பிட்ட உப்புமாவில் விஷம் கலந்த அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்ததையடுத்து உடனே போலீசார் பெல்லார்மினை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



ஒரு பொம்மை காணாமல் போனதுக்காக இப்புடியாடா செய்வாய்??? (Video)

மன்னார் பாதிரியார்களே!! கட்டாயம் இந்த வீடியோவைப் பாருங்கள்!! புரிவீர்கள் (Video)

ஸ்பெயின் நாட்டில் கிறீஸ்தவ ஆலயம் முன்புற வீதியில் விநாயகர் ஊர்வலம் செல்வதற்காக அந்த கிறீஸ்தவ ஆலய நிர்வாகத்திடம் அனுமதி கேட்ட போது ஆலய நிர்வாகம் பிள்ளையாரை தமது ஆலயத்திற்குள்ளேயே அனுமதித்து வழிபட்டார்கள். அவர்களின் மன நிலை நம்ம மன்னார் கிறீஸ்தவ சமூகத்திற்கு வருமா?



இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (08.03.2028)

மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனு சரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங் கள் கைக்கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன வசதிப்
பெருகும். வியாபாரத்தில் பழைய வேலை யாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள்  கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

மிதுனம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோ சித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்
தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக் கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கடகம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள். 

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். பழைய பகை, கடன்களை நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கன்னி: உங்கள் பலம் பலவீ னத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சொந்த -பந்தங்கள் மத்தியில் செல் வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றிபெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.

விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி களை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

தனுசு: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். புது வேலைஅமையும். தாயாரு டன் வீண் விவாதம் வந்துப் போகும். பயணங்களால் அலைச்சல் இருந் தாலும் ஆதாயமும் உண்டு. தொழில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப் பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப்  பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்தி களை கையாளுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத் தாரின் ஆதரவுப் பெருகும். அழகு, இளமைக் கூடும். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

மீனம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். குடும்ப ரகசியங்களை வெளியிட வேண்டாம். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக  வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

வியாழன், 7 மார்ச், 2019

தமிழ்சிறுமி மீது தமது பாலியல் சேட்டையை!! முஸ்லிம் காவாலி நையப்புடைப்பு!! (Video)

 ஏறாவூர் முஸ்லிம் பகுதியை சேர்ந்த முஸ்லிம் காடையன் ஒருவன் போதைப்பொருளை பாவித்து ஏறாவூர் எல்லை அருகிலுள்ள ஆறுமுகத்தான் குடியிருப்பின் சவுக்கடி பாடசாலை சென்ற சிறுமியை தனது மகளுக்கு மனைவிக்கும் வித்தியாசம் தெரியாதளவு போதையை பாவித்து  இவன் வக்கிரத்தை நிறைவேற்ற முயன்றவேளை அங்குள்ள தமிழ் இளைஞர்களால் குறித்த முஸ்லிம் காமப்பிசாசுக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட்டு ஏறாவூர் போலிசில் ஒப்படைக்கப்பட்டார்.

ஏறாவூர் முஸ்லிம் பகுதியில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்தமையால் இப்பகுதியை அண்டிய எல்லை தமிழ்கிராமங்களில் பெண்கள் ,சிறுமிகள்,வயோதிபர்கள் நடமாட அச்சமான சூழ்நிலை காணப்படுகின்றது.

இப்பொழுது தமிழர் கிராமங்களில் ஏதாவது ஒரு நோக்கத்தில் நுழைந்து கிராமத்தின் கட்டமைப்பை சீர்குழைக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது,

எனவே உங்கள் கிராமங்களில் சந்தேகத்திற்கு இடமான வெளிநபர்கள் நடமாடினால் அவதானித்து அந்த அந்த கிராமத்து இளைஞர்கள் தமது ஊரை பாதுகாப்பது ஒவ்வொரு தமிழ் இளைஞர்களின் கடமையாகும்.

 வீடியோவைப் பார்வையிடுவதற்கு முதல் கீழே உள்ள இணைப்பை அழுத்தி இந்த subscribe செய்த பின்னரே குறித்த வீடியோவைப் பார்வையிடுங்கள்.

https://www.youtube.com/channel/UCxugrQ-AB9MY-s18YlwMZZQ?view_as=subscriber





Image may contain: 1 person, standing and outdoorImage may contain: 1 person, standingImage may contain: one or more people and outdoorImage may contain: one or more people, people standing and outdoor

யாழ் சங்கானையில் பெரும் எடுப்பில் நடக்கும் விபச்சாரம்!! துணை போவது யார்?

சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் விபச்சாரம் நடைபெறுவதாக குற்றம் சுமத்தியுள்ள அப்பகுதி மக்கள் அங்கு நடைபெறும் சமூக சீரழிவை தடுத்து நிறுத்துமாறு கோரியுள்ளனர்.

இச் சமூக சீரழிவு தொடர்பில் இலங்கை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சங்கானை பிரதேச செயலரிடமும் மக்கள் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

வலி.மேற்கு சங்காணை பிதேச செலர் பிரிவில் உள்ள ஜே.169 கிராம சேவையாளர் பிரிவில் தனி நபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றார்.

அத்துடன் குறித்த விப்பனையகத்தில் மதுபானங்களை நுகர்வதற்கும் அனுமதி வழங்கி வருகின்றார்கள்.மேலும் சில பெண்களை அங்கு அழைத்து வந்து விபச்சார நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார்.

இவ்வாறான சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாட்டினால் அங்கு உள்ள சிறுவர்கள் பெண்கள் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

குறித்த நபருடைய பெறுப்பற்ற செயற்பாடு அங்குள்ள இளைஞர்களும் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தூண்டுவதாக அமைந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எயுடுத்து அப்பகுதி மக்களின் பாதுபாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி ஜே.169 கிராம சேவையாளர், சங்காணை பிரதேச செயலர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அப்பிரதேச மக்கள் அனைவரும் இணைந்து கையெப்பம் இட்டு முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோவைப் பார்வையிடுவதற்கு முதல் கீழே உள்ள இணைப்பை அழுத்தி இந்த subscribe செய்த பின்னரே குறித்த வீடியோவைப் பார்வையிடுங்கள்.






யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.