ஞாயிறு, 10 மார்ச், 2019

சவேந்திர சில்வா மீது உள்ளக விசாரணை நடத்த இராணுவம் மறுப்பு

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்ளக விசாரணைகளை நடத்த இராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இதனை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை இராணுவம் மீது எதற்காக போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்ற காரணத்தை கண்டறிவதற்காக, உண்மை கண்டறியும் ஆய்வு ஒன்று நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை கடந்த வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டது. அந்த அறிக்கையில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணைகளை நடத்த இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.