வியாழன், 2 நவம்பர், 2023

ஆண் உறுப்பை பெரிதாக்கும் ஊசி யாழ் நோதேன் வைத்தியசாலை அஜந்தா டொக்டரிடம் உள்ளதா? நடப்பது என்ன?

 


இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர்ந்த ஆண்களும் வாசிக்காதீர்கள்….

இந்தப் பதிவில் பெயர்கள் மாற்றபட்டு கொஞ்சம் கற்பனையும் சொருகப்பட்டுள்ளதே தவிர சம்பவம் உண்மையானது.

நீதன் என்ர நண்பன். திருமணம் முடித்து சாதாரண அரச அலுவராக  பிள்ளைகளுடன் வாழ்கின்றான். அவனுக்கு எந்தவித கள்ளக்காதல்களோ அல்லது கள்ளத் தொடர்புகளோ அல்லது விபச்சாரிகளின் தொடர்புகளோ இல்லை. அப்படியான செயற்பாடுகளை செய்வதற்கு கனவிலும் நினைக்காதவன். மனைவியும் ஒரு அரச உத்தியோகத்தர். அவனுடனேயே அவனது வயதான தாய் பார்வதியும் இருக்கின்றார். அவனது 78 வயதுத் தாய் பார்வதிக்கு சில மாதங்களாக முழங்காலுக்கு கீழே தொடர்ச்சியாக சரியான கொதி வலி…. அரச ஆசுப்பத்திரிக்கு கொண்டு சென்று மருந்து எடுத்தும் பலனில்லை. இரவில் தாய் ஒரே முனுமுனுப்பு. ”இவனைப் பெத்து என்ன பலன்… எனர கால் கொதி வலிக்கு சரியான இடத்தில கொண்டு போய் காட்டுறானில்லை…. காசு செலவு செய்ய சரியான பஞ்சி… மனிசி சும்மா தும்மினவுடனேயே நொதேனுக்கு கொண்டு போய் காட்டுறவன்.. என்னில கவனமெடுக்கிறானில்லை..” என நீதனுக்கு மட்டுமல்ல.. நீதனின் மனைவிக்கும் கேக்குமாறு உரத்து முனுமுனுப்பதில் பார்வதி அம்மா கெட்டிக்காரி….

இரவில் தாயின் முனுமுனுப்பு தன்ர மனுசிக்கு கேட்டால் என்ன நடக்கும் என்று நீதனுக்கு தெரியும்…. இதனால் பல நாட்கள் மனிசி நீதனை கிட்ட அண்டவிடுவதில்லை…. தாய்க்கும் உந்த ராச தந்திரம் தெரிந்திருக்க வேணும்… உப்புடிச் செய்தால்தான் என்ர வருத்தத்திலும் கவனம் எடுப்பான் என்று பார்வதி அம்மா கில்லாடித்தனமா யோசிச்சிருப்பா….

மனிசியோட சேராமல் நீண்ட நாள் பட்டினி கிடந்து பொறுக்க முடியாத நீதனும் தாயை யாழ் திருநெல்வேலியில் இருக்கும் நொதேனில் புக் பண்ணி காட்ட தொடங்கினான்…. முதலில் நொதேன்  ஆசுப்பத்திரியில் ஒரு வைத்திய நிபுணரிடம் காசு கட்டி காட்டிய போது அவர் பார்வதி அம்மாவை தொட்டு கூட பார்க்காமல் ”உவாவுக்கு நரம்பு பிரச்சனை இருக்குது போல.. நரம்பு எங்கேயோ மடிபட்டு கிடக்குது… உதுக்கு அஜந்த டொக்டர்தான் பொறுப்பு” என்று கூறி அஜந்தா டொக்டருக்கு ரெக்கமன்டேசன் எழுதிக் கொடுத்திருக்கிறார்…..

இதுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் கொண்டுபோய் காட்ட முடியாதா டொக்டர் என நீதன் அந்த டொக்டரை கேட்டுள்ளான். அவரும் தாராளமாக போய் காட்டுங்கள் என கூறியுள்ளார். அவனும் யாழ் போதனா வைத்தியசாலையை நம்பி அங்கு போனான்… அங்கு பார்வதி அம்மாவின் வருத்தத்திற்கான செக்கப் செய்வதற்கு ஒரு திகதி கொடுத்திருக்கின்றார்கள். அந்த திகதியை பார்த்த போது நீதனுக்கு தலை சுற்றியது. அடுத்த வருசம் ஏப்ரல் 21ம் திகதி செக்கப் டேட் போடப்பட்டிருந்தது. அந்த பிரிவுக்கே அஜந்தா டொக்டர் என்பவர்தான் பொறுப்பு…. அவா சரியான பிசியாம்..என்று யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து பதில் வந்தது. ஆனால் அவாவை நொதேன் வைத்தியசாலைக்கு சென்றால் சந்தித்து பார்வதி அம்மாவுக்கான சிக்கலை தீர்க்கலாம் என்றும் அங்கு நின்ற சிலர் கூறினார்களாம்.

ஏப்ரல் 21ம் திகதி வரையும் நான் மனைவிக்கு கிட்டவும் போகேலாது… அதுவரைக்கும் நான் பொறுமையா இருந்தாலும் என்ர……. பொறுமையா இருக்காது என நினைத்து நீதன் ஏக்கம் கலந்த அதிர்ச்சிக்குள்ளானான்….

நல்ல பசியா இருக்கும் போது முன்னால புரியாணி இருந்தும் சாப்பிட முடியாமல் இருப்பது போல ஒரு நிலையில் இருப்பது எப்படி என்பது கலியாணம் கட்டியிருப்பவர்களுக்கு விளங்கும்…..

இனி நொதேன் வைத்தியசாலையில் அஜந்தா டொக்டருக்கும் காசு கட்டி தொலைக்க வேணுமே என்று ஏங்கினாலும் இரவில தன்னை மனைவி பட்டினியாக படுக்க விடுவது நீதனுக்கு ஞாபகம் வந்தது.

உடனே அஜந்தா டொக்டருக்கு நொதேன் கொஸ்பிட்டலில் இன்னொரு தடவை காசு கட்டி பதிவு செய்துவிட்டான்…..

அஜந்தா டொக்டர் நரம்பு சம்மந்தமான நோய் விசயத்தில வலு வீரி…சூரி என்று பலரும் சொல்லியிருக்கினம்… ஆனாலும் அஜந்தா டொக்டர் சரியான கஸ்டப்பட்ட ஆள்…. அந்த நோதேன் வைத்தியசாலையின் ஓனரான கேசவராசாவின் மனைவி என்றாலும் அவாக்கு சரியாக கஸ்டம். யாழ்பபாண போதனா வைத்தியசாலையில் அவாவும் ஒரு மருத்துவ நிபுணர். அங்கு அவாக்கு கொடுக்கிற சம்பளம், ஓவர்டைம் வாழ்க்கைச் செலவுக்கு காணாது என்றதால தனது புருசனுக்கு சொந்தமான நொதேன் வைத்தியசாலையிலும் பகுதி நேரமாக வேலை செய்கிறா… அந்த அளவுக்கு அவா பிரயாசையுடன் உழைக்கிற ஒரு சிங்கப் பெண்…. கொஞ்ச நாளுக்கு முதல் சமுர்த்தி நிவாரணம் தனக்கும் கிடைக்குமோ என்று தங்கட ஏரியா சமுர்த்தி அலுவலரை கேட்டவாவாம் என்றும் அரசல் புரசலாக கதைகள் வந்திருந்தன…. உண்மையில் அரசாங்க ஊழியர்கள் பாவம்தான்… ஆனாலும் டொக்டர்மாருக்கே இந்த நிலை என்றால் என்ன செய்யிறது??

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று ஒரு பழமொழி இருக்குது… அதுக்கான சரியான அர்த்தம் தெரியாது. இருப்பினும் அஜந்தா டொக்டர் தன்னிடம் வாறவர்களிடம் பழகிப் பார்ப்பதில் திறமைசாலி… ஒரு சில வருடங்களுக்கு முதல் தலையிடி என்று போன ஒரு குடும்பப் பெண்ணுக்கு தன்னுடைய ஆராய்ச்சியை நொதேன் வைத்தியசாலையில் செய்து பார்த்து அந்த குடும்ப்ப பெண் இறக்கப் போகின்றா என்று தெரிந்தவுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டு அங்கு வைத்தே இறக்கச் செய்த திறமை அஜந்தா டொக்டருக்கு இருக்குது. நோதேனில ஏதாவது சிகிச்சை செய்வதில் தவறு நடந்தால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அந்த நோயாளியை மாற்றிவிடும் அளவுக்கு திறமை பெற்றவா இந்த அஜந்தா டொக்டர்…..

சரி இனி நீதனின் கதைக்கு வரும்…..நீதன் தன்ர தாய் பார்வதிக்காக அஜந்தா டொக்டருக்கு காசு கட்டி விட்டான்… காசு கட்டி அதே நாளே அஜந்தா டொக்டரின் தரிசனம் தாய்க்கு கிடைத்தது. ஆனால் அஜந்தா டொக்டருடைய முக அழகைப் பார்க்க முடியாதபடி மாஸ்க்கை மூடிக் கட்டியிருந்தாவாம். அத்துடன் தன்னிடம் வருபவர்களுக்கு மாஸ்க் போடச் சொல்லி வற்புறுத்தினா. அதே நேரம் நோயாளியைத் தவிர வேறு யாரையும் உள்ளே நுழையக் கூடாது என்று சொல்லி தடை செய்துள்ளாராம்… அத்துடன் தன்னிடம் வரும் நோயாளியை கிட்டவும் அண்ட விடேலையாம்… துார இருந்தே தன்ர தாயையும் ஏனையவர்களையும் பார்த்தாராம்….

காலில் எதையோ பூட்டி தாயைப் பார்த்து முடிந்த பின்ன அஜந்தா டொக்டர் சொன்ன விடயம்தான் நண்பன் நீதனின் மனதில் இப்போதும் ஒளித்துக் கொண்டிருக்கின்றதாம்…. உங்கட அம்மாவுக்கு வயது போய் விட்டதுதானே…அதால முழங்காலுக்கு கீழே நரம்புகளைக் காணவில்லை. அதுதான் சரியான வலியாக அவாக்கு இருக்கு.நரம்புகளை வளரச் செய்வதற்கு சில ரீட்மன் செய்ய வேணும்… நரம்புகளை வளரச் செய்ய ஊசி இருக்குது. அதன் விலை ஒரு தடவை போட 65 ஆயிரம். அந்த ஊசியை சில தடவைகள் போட்டால் நரம்பு வளரும்…. அதன் பின்னர் அம்மாவுக்கு எந்த வலியும் இருக்காது என கூறினாவாம்…

ஊசியின் விலையைக் கேட்டவுடன் நீதனுக்கு தலை சுற்றியுள்ளது. எனினும் கட்டாயம் அதைப் போட வேண்டிய நிலையில் நீதன் இருக்கிறான்….. இது தொடர்பாக என்னிடம் நீதன் தொடர்பு கொண்டு இந்தச் சம்பவங்களை விளங்கப்படுத்தி அந்த ஊசி தொடர்பாகவும் உண்மையாக இருக்குமோ என்று கேட்டான்…..

எனக்கு அவன் சொன்னதில் நம்பிக்கை இல்லை.. சில வேளை நீதனுக்கு அஜந்தா டொக்டர் விளங்கப்படுத்தியதை நீதன் விளங்காமல் நரம்பை வளர்க்கும் ஊசி நினைக்கின்றானா? அல்லது நீதனுக்கு போதிய அளவு மருத்துவ ரீதியில் விளங்கப்படுத்தினால் விளங்காது என்பதற்காக நரம்பை வளர்க்கும் ஊசி என்று  விளங்குமாறு கூறினாரா? அல்லது அவ்வாறான ஒரு ஊசி அஜந்தா டொக்டரிடம் உள்ளதா? சரியான குழப்பமாக இருந்தது.

எனது இன்னொரு நண்பன் இன்னும் திருமணம் செய்யாது இருக்கின்றான்…. ஏன்டா கலியாணம் கட்டவில்லை என்று நாங்கள் கேட்டால் பல காரணம் சொல்லுகின்றான்…. ஒருதடவை என்னிடம் தாம்பத்தியத்துக்கு ஆண் குறி நீளமாக வேணுமோ என்று கேட்டதும் ஞாபகம்…

நாங்கள் வயக்கு வந்து சில வருடங்கள் ஆன நிலையில் கசூரினா கடற்கரையில் ஜட்டியுடன் நானும் இவ்வாறு கேள்வி கேட்ட நண்பன் உட்பட்டவர்களும் நீந்தியிருந்தோம்…. அப்போதே அவனுடையது தொடர்பாக எங்கட நண்பர்களுக்கும் தெரியும்… அவனுடையது மட்டுமல்ல ஏராளமானவர்களுடையது எல்லாம் அப்படியானதுதான்…..

”மச்சான் எத்தனை பெரிய ரீவியாக இருந்தாலும் ரிமோட் கொன்றோல்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தான்” என்று எனது இன்னொரு நண்பன் சொல்லுவான்….

எனக்கு ஒரு ஐடியா தோன்றியது… கலியாணம் கட்டாத எனது அந்த நண்பனை ஒருக்கா அஜந்தா டொக்டரிடம் அனுப்பினால் என்ன? என்று யோசித்துள்ளேன்…. அவனுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையை நீக்க அந்த உறுப்பை வளரச் செய்தால் சில வேளை அவன் கலியாணம் கட்டக்கூடும்….

ஆண் உறுப்பு என்பது முற்று முழுதாக நரம்புகளால் ஆனாது. ஆகவே நரம்பை வளர்க்கச் செய்தால் ஆண் உறுப்பும் சில வேளை நீளமாக வரலாம் அல்லவா????

எனக்குள் எழுந்த இந்த நியாயமான கருத்தை அஜந்தா டொக்டரிடம்  பேஸ்புக் மூ6மாக அறிவதற்காக அவருடன் தொடர்பு கொள்ள முற்பட்ட போது அவர் தனது பேஸ்புக் பக்கத்தை லொக் செய்து வைத்துள்ளார்….  சில வேளை எங்களைப் போன்ற வம்பர்களின் தொல்லையை இல்லாமல் செய்வதற்காகவும் அவர் இவ்வாறு செய்திருக்கலாம்…..

வம்பன்……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.