வியாழன், 7 மார்ச், 2019

பாதிரிகளை பதறவைத்த சங்கிலி!! மன்னார் புதை குழி எலும்புகள் கூறுவதென்ன?? (புகைப்படங்கள்)

ஆதாரபூர்வமாக மீண்டெழும் தமிழர் வரலாறு!
எழுதப்பட்டுள்ள தமிழர்களின் வரலாறுகள் புனைவுகள் அல்ல என்பதை ஆதாரபூர்வமாக நிறூபித்திருக்கிறது மன்னார் புதைகுழி! வரலாற்றோடு தொடர்பு பட்ட பல சம்பவங்களுக்கும் மன்னார் புதைகுழிக்கும் தொடர்புகள் இருப்பது இதனூடாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
எதேச்சையாக மன்னார் சதோச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப்புதைகுழியின் எலும்புக்கூடுகளின் காபன் அறிக்கை அது கி.பி 1400 தொடக்கம் கி.பி 1700 வரையான காலப்பகுதிக்குறியதென்று வந்திருக்கின்றது. இதன் மூலம் தமிழர் வரலாறு மீண்டெழ சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது.
போர்த்துக்கேயர் காலம் தொடக்கம் ஆங்கிலேயர் காலம் வரை யாழ் இராசதானி மீதும் வன்னி ராஜ்யங்கள் மீதும் பல்வேறு போர்கள் இடம்பெற்றிருந்தன அவை வெறுமனே வரலாற்று கதைகள் என்ற ரீதியிலேயே இதுவரை பார்க்க்கப்பட்டது இப்போது இந்த புதைகுழி அவைகள் கதைகள் அல்ல நிஜங்கள் என தெரியவந்திருக்கிறது.
இதே காலப்பகுதியில் மன்னாரோடு தொடர்பு பட்ட வரலாற்று சம்பவங்கள் சில:-

No photo description available.
1) 1540ல் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாகிய மன்னாரில் போர்த்துக்கேயக் குருமாரின் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக முதலாம் சங்கிலி எடுத்த தீவிர நடவடிக்கைகளால் மதமாற்றம் செய்யப்பட்ட 800 மன்னார் குடிமக்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போர்த்துக்கேயக் குருமார், யாழ்ப்பாண அரசனைத் தண்டிக்கும்படி கோவாவில் இருந்த போர்த்துக்கேய அரசப்பிரதிநிதிக்கு அழுத்தங்களைக் கொடுத்துவந்தனர். இந்தியாவில் இருந்த போர்த்துக்கேயரின் ஆட்சிப்பகுதிகளைச் சுற்றியிருந்த தாயக அரசுகளின் பயமுறுத்தல்களை எதிர்கொள்ளவேண்டி இருந்ததாலும், அவர்களின் வணிக நோக்கங்களுக்கு யாழ்ப்பாண இராச்சியம் எவ்வித வாய்ப்புகளையும் வழங்காததினாலும், யாழ்ப்பாணத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில் அவர்கள் உற்சாகம் காட்டவில்லை. சளைக்காத குருமார் போர்த்துக்கேயப் பேரரசன் வரை இந்த விடயத்தை எடுத்துச் சென்றனர். பேரரசனும் யாழ்ப்பாண அரசனைத் தண்டிப்பதற்கான ஆணையை கோவாவில் இருந்த அரசப் பிரதிநிதிக்கு அனுப்பியிருந்தான். எனினும் குருமார் விரும்பிய அளவு வேகமாக எதுவும் நடக்கவில்லை.







1558ல் டொம் கான்சுட்டன்டீனோ டி பிரகன்சா போர்த்துக்கேய அரசப்பிரதிநிதியாக கோவாவுக்கு வந்தான். புறப்படுமுன், யாழ்ப்பாண இராச்சியம் தொடர்பில் போர்த்துக்கேய அரசன் மூன்றாம் ஜோன் முன்னைய அரசப் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய ஆணை வேறு போர்களில் கவனம் செலுத்தவேண்டி இருந்ததனாலோ, பிற காரணங்களாலோ நிறைவேற்றப்படாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கிறித்தவத்துக்கு வேண்டிய ஆதரவை வழங்குவதில் மெத்தனம் காட்டப்படுவது குறித்து குருமார் முறைப்பாடு செய்வதாகவும் கூறிய போர்த்துக்கேய அரசி கத்தரீனா, இந்த விடயத்தில் சிறப்புக் கவனம் எடுக்குமாறு பிரகன்சாவைக் கேட்டுக்கொண்டிருந்தார். யாழ்ப்பாண அரசன் மன்னாரில் செய்த கொடுமைகளுக்காகவும், தொடர்ந்து கிறித்தவத்துக்கு எதிரான அவனது நடவடிக்கைகளுக்காகவும் அவன் இன்னும் தண்டிக்கப்படாமல் இருப்பது வருத்ததுக்கு உரியது என்றும் அரசி எடுத்துக்கூறி இருந்தார். எனவே இந்தியாவுக்கு வந்த பிரகன்சா தானே யாழ்ப்பாணத்துக்குப் படையெடுத்துச் சென்று போர்த்துக்கேய அரசனின் ஆணையை நிறைவேற்றத் தீர்மானித்தான்.

2) போர்த்துக்கேயரின் இரண்டாம் படையெடுப்பு:- 1591 அக்டோபர் இறுதியில் மன்னாரில் இருந்து, 1400 போர்த்துக்கேயரும், 3000 சிங்களவரும் அடங்கிய பெரும் படையுடன் அந்தரே பூர்த்தாடோ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டான். இந்தப் படையெடுப்புக்காக மன்னார்ப் பகுதியில் முத்துக்க்ளிப்பினால் பெறப்பட்ட 30,000 பர்தாங்கும், மன்னார்க் கத்தோலிக்கரிடம் கடனாகப் பெறப்பட்ட 20,000 பர்தாங்கும் பயன்படுத்தபட்டதாகத் தெரிகிறது 43 கப்பல்களிலும், 200க்கு மேற்பட்ட தோணிகளிலும் இப்படைகள் சென்றன. யாழ்ப்பானத்து அரசன் இப்படைகள் ஊர்காவற்றுறையில் இறங்கும் என எதிர்பார்த்து அங்கே பாதுகாப்பைப் பலப்படுத்தியிருந்தான். ஆனால், போர்த்துக்கேயப் படைகள் கொழும்புத்துறையை அடைந்தன. கப்பல்களில் இருந்து கனரகப் பீரங்கிகள் தாக்குதல் நடத்த முதலில் 150 போர்த்துக்கேயரும், 200 சிங்களப் படையினரும் கரையில் இறங்கினர். எதிர்த்தாக்குதல் நடத்திய யாழ்ப்பாணப் படைகள் கடுமையான தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோல்வியைச் சந்தித்தன. முதலியார் பிராங்கோவும் 250 பேரும் இறந்தனர். ஏராளமான ஆயுதங்கள் போர்த்துக்கேயர் வசமாயின. பின்னர் போர்த்துக்கேயரின் படைகள் முழுவதும் கரையிறங்கின. கரையோரமாக நடந்துவந்த படைகள் பண்ணைக்கருகில் முகாமிட்டன. இப்பகுதியில் இருந்த முசுலிம்களின் வணிக நிலையில் இருந்த களஞ்சியங்களில் சேமிக்கப்பட்டிருந்த அரிசி, நெல் ஆகியவற்றையும் அவர்கள் கொள்ளையிட்டனர்.

3) மூன்றாவது யாழ் இராசதானி மீதான படையெடுப்பு:-
யாழ்ப்பாணத்தின் முடிக்குரிய வாரிசான எதிர்மன்னசிங்கனின் மகன் சிறுவனாக இருந்ததால் அவன் சார்பில் அரசை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பில் பிரச்சினை எழுந்தது. இறுதியில் சங்கிலி குமாரன் அரச நிர்வாகத்தைக் கைப்பற்றிக்கொண்டான். உள்நாட்டுப் பிரச்சினையாக உருவான இது போர்த்துக்கேயரின் தலையீட்டினால் தீர்த்துவைக்கப்பட்டது. சங்கிலியைப் பகர ஆளுனனாகப் போர்த்துக்கேயர் ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் விரைவிலேயே சங்கிலி ஒழுங்காகத் திறை செலுத்தவில்லை என்றும் 3 ஆண்டுகளுக்கான திறை நிலுவையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டினர். அதே வேளை ஒப்பந்தங்களுக்கு எதிராக சங்கிலி தமிழ்நாட்டில் இருந்து படைகளையும் ஆயுதங்களையும் பெற்று வருவதாகவும் ஐயங்கள் எழுந்தன.[1]

இலங்கையில் போர்த்துக்கேயரின் கட்டளைத் தளபதியாக இருந்த கான்சுட்டன்டினோ டி சா டி நோரஞ்ஞா யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பிலிப்பே டி ஒலிவேராவை தலைமைத் தளபதியாக இப்பணியில் ஈடுபடுத்தினான்.

கொடுக்கவேண்டியிருந்த திறையை அறவிடுவது என்ற போர்வையில், 1619ம் ஆண்டில் தளபதி ஒலிவேரா தலைமையிலான படைகள் மன்னாரில் இருந்து தரைப்பாதை ஊடாகபூநகரிக்கு வந்தன. இப்படையில் மூன்று கப்பித்தான்களின் தலைமையில் மூன்று கம்பனி போர்த்துக்கேயப் போர்வீரர்களும், இன்னொரு கப்பித்தானின் தலைமையில் 500 சிங்கள வீரர்களும் உட்பட 5,000 படை வீரர்கள் வரை இருந்தனர். இப்படைகள் சிறிய தோணிகளில் நீரேரியைக் கடந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் நுழைந்தன. அங்கிருந்து பண்ணைப் பகுதியில் இருந்த புதுமைமாதா தேவாலயப் பகுதிக்கு வந்த ஒலிவேராவின் படைகள் அங்கே முகாமிட்டன. உண்மையில், போர்த்துக்கேயர் கோரும் பணம் முழுவதையும் யாழ்ப்பாண அரசன் செலுத்தாவிடின் அவனைக் கைது செய்வதற்கும், எதிர்த்தால் கொல்வதற்குமான இரகசிய ஆணையுடனேயே ஒலிவேரா யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தான். ஒலிவேரா தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் அந்தோனியோ டி எஸ். பேர்னாடினோ என்பவரைச் சங்கிலியிடம் தூது அனுப்பினான்.

திறை நிலுவையைச் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், யாழ்ப்பானத்தில் இருந்த வடக்கர் படைகளையும், கரையார் தலைவன் வருணகுலத்தானையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. வடக்கர் படைகளையும், வருணகுலத்தானையும் போர்த்துக்கேயரிடம் ஒப்படைப்பது துரோகம் என்பதால், அதை ஏற்றுக்கொள்ள மறுத்த சங்கிலி, ஒலிவேரா யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்ற மூன்று நாட்களுக்குப் பின் அவர்களைத் திருப்பி அனுப்புவதாக வாக்களித்தான். முதலில் பணத்தைத் தருவதாக ஒப்புக்கொண்ட சங்கிலி, சில நாட்களின் பின்னர், ஒலிவேரா படைகளுடன் பூநகரிக்குத் திரும்பிச் சென்றால் 5,000 பர்தாவ் பணம் அனுப்புவதாகவும், மூன்று மாதங்களுக்குப் பின்னர் அதேயளவு பணம் தரப்படும் என்றும் அதற்கு மேல் இப்போது தரமுடியாது என்றும் தெரிவித்தான். சங்கிலியின் பதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமையாததால் ஒலிவேரா யாழ்ப்பாணத்தை தாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கினான்...

இவ்வாறான பல வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளோடு மன்னார் தொடர்புபட்டிருக்கிறது. இந்த புதைகுழி அந்த வரலாற்றின் உண்மைக்கு சான்றாதாரமாக இருக்கிறது. இது குறித்து மேலும் ஆய்வுசெய்து தமிழர்களின் வரலாற்றை ஆதாரபூர்வமாக நிறூவவேண்டியது தமிழ் பேசும் வரலாற்று ஆய்வாளர்களின் கடமையாகும். மன்னார் புதைகுழி உங்களுக்கு வரலாற்றின் ஒரு கதவை திறந்துவிட்டிருக்கிறது.

சங்கிலி மன்னால் கொலை செய்யப்பட்டவர்களின் எலும்புக்கூடுகளே மன்னாரில் மீட்கப்பட்டன? வெளியாகியது அதிர்ச்சித் தகவல்!!

மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 300 தொடக்கம் 500 ஆண்டுகள் முற்பட்டவை என்று காபன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரிகளின் அறிக்கையில் 1499 தொடக்கம் 1719ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் புதைக்கப்பட்ட மனித உடலங்களின் எச்சங்களே இவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், தெரிவு செய்யப்பட்ட 6 எலும்பக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு, புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக நேற்று முன்தினம் மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகியுள்ளது.

மன்னாரில் போர்த்துக்கேயர் காலத்தில் கிறீஸ்தவ மதத்துக்கு மாறிய தமிழர்களை சங்கிலி மன்னன் நல்லுாரில் இருந்து படைகளை அனுப்பி கொன்று குவித்தான் என்பது வரலாறு.... 

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் 1499 தொடக்கம் 1719ஆம் ஆண்டுவரையானது என்று கார்பன் அறிக்கை சொல்லி இருக்கிறது.. அக்காலப் பகுதியில்தான் -1544 ஆம் ஆண்டு கிறிஸ்தவத்தை தழுவிய 600 - 700 பேரை சங்கிலி மன்னன் படுகொலை செய்திருந்தான்

யாழில் கஞ்சா விற்கின்றார்கள் என தகவல் கொடுத்தவரை கைது செய்த காவாலி பொலிஸ்!!

யாழில் கஞ்சாக்கடத்தல்காரர்கள் குறித்து தகவல் வழங்கிய ஒருவரை, கஞ்சா விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் காவல்துறையினர் கைது செய்தது சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. பொய்க்குற்றச்சாட்டு கூறியே, தகவல் வழங்கியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி அதிக அக்கறை காண்பித்து வரும் நிலையில், அண்மைக்காலமாக போதைப்பொருள் ஒழிப்பில் காவல்துறையினரும் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் கஞ்சா கடத்தல்காரர்கள் பற்றிய தகவல் வழங்கியமைக்காக, கிளிநொச்சி மாணவன் ஒருவர் தாக்கப்பட்ட சர்ச்சை தோன்றியது.

இப்பொழுது யாழிலும் இதேவிதமான சர்ச்சை தோன்றியுள்ளது. யாழில் கஞ்சாக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் வழங்கிய ஒருவரே கைதானதாக கூறப்படுகிறது. ஓய்வுபெற்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மூலம், எழுத்து மூல முறைப்பாடு வழங்கினார்.

முற்பகல் அவர் முறைப்பாடு வழங்க, பிற்பகலில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

அவரது உந்துருளியில் இருந்து திடீரென கடதாசி சுருள் ஒன்றை பொலிசார் மீட்டு, அதில் கஞ்சா இருந்ததாக கூறினார்கள் என்றும், சோதனை எதுவும் செய்யாமல் தாமே வைத்தவர்களை போல எடுத்தார்கள் என்றும் கைதானவர் தெரிவித்துள்ளார். அந்த சுருள் எப்படி தனது மோட்டார்சைக்கிளில் வந்ததென்று தனக்கு தெரியாதென்றும் அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் தான் ஈடுபடுவதில்லை, தேவையானால் வைத்திய பரிசோதனைக்கும் தயாராக இருக்கிறேன் என அவர் தர்க்கித்துள்ளார்.

நீண்ட இழுபறியின் பின்னர், ஓரிரு மணித்தியாலயத்தின் பின்னர் அவரை காவல்துறையினர் விடுவித்தனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களிற்கு சார்பாகவே காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்தார்களா என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார்.


சாவகச்சேரி பொலிசாரின் துணையுடன் ஒளித்துத்து திரிந்த ஆவா குழு ரவுடிக்கு நடந்த கதி!! (Photos)

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புடையவா் ஒருவா் கடந்த 1 வருடமாக தேடப்பட்டுவந்த நிலையில், இன்று அதிகாலை தனங்கிள ப்பு பகுதியில் வைத்து வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளாா்.
கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தலைமறைவாகியிருந்த இந்தச் சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர் என்றும் பொலிஸார் கூறினர்.
“ஆவா குழுவிலிருந்து செயற்பட்ட இந்தச் சந்தேகநபர், மானிப்பாய் தனுறொக் என்பவர் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் வீடுகளைத் தாக்கி வந்த கும்பலைச் சேர்ந்தவர்.
அத்துடன் கடந்த ஆண்டு மருதனார்மடம் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரால் வாள்களுடன் கைது செய்யப்பட்ட கும்பலில் இருந்த இந்த நபர் தப்பித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் தனங்களப்பு பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருக்கின்றார் என்று யாழ்ப்பாணம் சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அந்தப் பிரிவுக்குப் பொறுப்பான ரஞ்சன் எதிரிசிங்க தலைமையிலான அணியினர் நேற்று நள்ளிரவு சந்தேகநபர் மறைந்திருந்த வீட்டைச் சுற்றிவளைத்தனர்.

பொலிஸார் சுற்றிவளைத்ததை அறிந்த சந்தேகநபர் தப்பிக்க முயற்சித்த வேளை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வாள்கள் இரண்டு, முகமூடிக் கப்புகள் மூன்றும் கைப்பற்றப்பட்டன.

சாவகச்சேரி, சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் தலா 2 குற்றச்செயல்களிலும் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 3 குற்றச்செயல்களிலும் சந்தேகநபருக்கு எதிராக வழக்குகள் உள்ளன.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி பொலிஸார் சந்தேகநபருக்கு அடைக்கலம்
இதேவேளை, சாவகச்சேரி பொலிஸாரால் சந்தேநபர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்ட வாள்களை நீதிமன்றில் சமர்ப்பிக்காமல்
அவரை பிணையில் விடுவிப்பதற்கான சாவகச்சேரி பொலிஸாரால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் பெறப்பட்டுள்ளது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேகநபர் கைது செய்யப்படாமல் மறைந்திருப்பதற்கு சாவகச்சேரி பொலிஸார் உதவினர் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனாலேயே யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிலுள்ள தனங்களப்புக்குச் சென்று சந்தேநபரைக் கைது செய்து வந்தனர் என்றும் தெரிகிறது.



யாழில் மாணவிகளின் “பின்பகுதியை” தட்டும் ஆவா குழு காவாலிகள்..!! (Photo)

யாழ் மானிப்பாயில் ரீயூசன் வகுப்பு செல்லும் பிள்ளைகளுக்கு பின்னாலும் , அந்தோனியார் கோயிலுக்குச் செல்லுகின்ற பெண்களுக்கு பின்னாலும்,  நீதிமன்றால் ஆவா குழு என தண்டனை பெற்ற காவலிகள் சென்று தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் சென்று பின்பகுதியை தட்டிவிட்டு செல்வதும், தகாத வார்த்தைகளால் பெண்களை வர்ணிப்பதும் பெண்பிள்ளைகளின் பெற்றோர் தட்டி கேட்பதற்கு பயப்படுவதும் சர்வ சாதாரணமாக நடை பெறுகின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றர். இதற்கு மானிப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தா விடின் அசம்பாவிதம் நடப்பது உறுதி


வடக்கு கல்வி செயலாளருக்கு எந்த நேரமும் அந்த சிந்தனையா? (Photos)


நாட்டில் பல பிரதேசங்களில் பெயர்ப்பலகைகளில், அறிக்கைகளில் என பல வழிகளில் தமிழ் எழுத்துக்களும் வசனங்களும் பிழையாக எழுதப்படுவதை தொடர்ச்சியாக அவதானித்து வருகின்றோம்.
எழுத்துப்பிழையானது பல சந்தர்ப்பங்களில் பாரதூரமான கருத்துப்பிழைகளையும் ஏற்படுத்துவதை அவதானிக்கின்றோம்.
அண்மையில் சிவராத்திரி விடுமுறை தொடர்பாக வட. மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் சகல வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் இரண்டு இடங்களில் இவ்வாறு பிழைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் வடக்கு கல்விப் பணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழை வளர்க்க அதிக கரிசனையுடன் செயற்படும் வடக்கு மாகாணத்தில் இவ்வாறான பாரதூரமான பிழைகள் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென மக்கள் தெரிவிக்கின்றனர். வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒருவர் செயற்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் அவர் இதுகுறித்து கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுகின்றனர்.

சுவிஸில் வாழும் இலங்கையர்கள் பலருக்கு ஆபத்து அமுலாகும் புதிய நடைமுறை!!

சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரியாளர்கள் தொடர்பான புதிய விதிகளை அறிமுகம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நடைமுறை குறித்து புதிய விதிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக, சுவிட்சர்லாந்து நீதியமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய சட்ட விதிகளின் மூலம், புகலிடம் பெற தகுதி உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. அவர்களுக்கு புகலிடம் வழங்கப்படவுள்ளது. ஆனால் சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு தேவையில்லை என அடையாளம் காணப்படுவோர் உடனடியாக நாடு கடத்தப்படவுள்ளனர். புதிய விதிகளுக்கு அமைய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் முதல் நாளிலிருந்து இலவச சட்ட ஆலோசனையை பெறுவதற்கு உரிமையை பெற்றுள்ளனர். இது அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும். அந்த ஆலோசனைக்களுக்கான விடயங்கள் சுவிட்சர்லாந்து மத்திய அரசிடம் வழங்கப்படும். அற்குமைய புகலிடம் கோருவோருக்கு சட்ட ஆதரவாளர்களால் வழங்கப்படும் சட்ட ஆலோசனைக்களுக்கமைய செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் 140 நாட்களுக்குள் ஃபெடரல் புகலிட கோரிக்கை மையங்களில் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. சுவிட்சர்லாந்தில் பெருமளவு இலங்கையர்கள் புகலிடம் கோரியுள்ளனர். அவர்களில் பலரின் விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் சாரதியின் அசாத்திய திறமை!! மயிரிழையில் உயிர்தப்பிய தாயும் பிள்ளையும்!! (Video)

சாரதியின் திறமையினால் இரு உயிர்கள் காப்பாற்றப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக குறித்த காட்சி சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றது.

இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (07.03.2028)


மேஷம்
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும்.கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

ரிஷபம்
இன்று குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

மிதுனம்
இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்ப பிரச்சனை தீரும். பிரச்சனை என்று வரும் போது அதில் சிக்காமல் சாமர்த்தியமாக நழுவுவது நல்லது. மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். பெண்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

கடகம்
இன்று மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

சிம்மம்
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும். குடும்பங்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள் அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கன்னி
இன்று தொழிலதிபர்கள்: புதிய வாடிக்கையாளர்களை நிரம்ப பெற்று நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

துலாம்
இன்று புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெற்று தங்கள் தொழிலில் வளம் காண்பார்கள். உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

விருச்சிகம்
இன்று தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
ராசி பலன்கள்

தனுசு
இன்று உத்தியோகஸ்தர்கள் அரசு தனியார் துறைகளில் உள்ளவர்களும் இது வரை இருந்த ஆடம்பர செலவினங்களை தவிர்த்து தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபமங்களச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும் அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும்.. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மகரம்
இன்று உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மீனம்
இன்று கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

புதன், 6 மார்ச், 2019

லண்டன் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழன்!! நடந்தது என்ன?

ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து இலங்கை தமிழர் ஒருவர் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளர். 36 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ஜெனிவாவிற்கு செல்லவிருந்த நிலையில் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட கொடி ஒன்றினையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வாகீசன் தங்கவேல் மற்றும் அவரின் நண்பர் ஒருவரும் பயங்கரவாதிகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, எர்ல்ஸ் கோர்ட்டில் அமைந்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு தலைமையகத்திற்குக் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து வாகீசன் வீட்டில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் போது அவரின் மடிக்கணினி உள்ளிட்ட சில ஆவணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த நபர் இரவு 11 மணியளவில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாகீசன் தங்கவேல் சுதந்திரத்திற்கான பறையின் குரல் எனும், இசைக்குழுவின் உறுப்பினராக இருந்து வருகின்றார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடர் தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், பேரவைக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடுவதற்கு சென்ற போதே வாகீசன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் ஆயரை எச்சரித்து அடக்கினார் மன்னார் ஆயர்!! மீண்டும் மறுப்பறிக்கை!!

யாழ்ப்பாண மறை மாவட்டமும் மன்னார் மறைமாவட்டமும் சகோதர மறைமாவட்டங்களாக தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பது எங்கள் எல்லோருடைய விருப்பம் ஆகும்.

எனவே மன்னார் மறைமாவட்ட குருக்களே, துறவிகளே, இறைமக்களே நான் வெளியிட்ட அறிக்கையில் ஏற்பட்ட தவறுகளுக்காகவும், அதனால் தங்கள் மனங்களை புண்படுத்தியதாகவும் நான் மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுகிறேன்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ் மறைமாவட்டத்தின் கண்டன அறிக்கை கடந்த சில தினங்களின் முன்னர் வெளியானதும், மன்னார் மறை மாவட்த்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருந்தது. யாழ் மறைமாவட்டத்திற்கும், ஆயர் மற்றும் குரு முதல்வருக்கும் எதிராக மன்னார் கத்தோலிக்கர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள். மன்னார் மறைமாவட்டத்தின் பேஸ்புக் பக்கத்திலும் பகிரங்கமாக கண்டனங்களை, பலர் பதிவிட்டிருந்தனர்.
இந்த எதிர்ப்புக்களிற்கு பணிந்தே யாழ் மறைமாவட்டம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வட மாகாணப் பாடசாலைகள் எதிர்வரும் சனிக்கிமை (09.03.2019) நடைபெறும்!!

சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் பாடசாலைகள் நடைபெறாததால் பதில் பாடசாலை நாளாக எதிர்வரும் 09.03.2019 சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

No photo description available.

தமிழா்கள் மீதான இன அழிப்பை நியாயப்படுத்த ஜெனிவா செல்கிறாரா வடமாகாண ஆளுநா்..??

ஜெனிவாவில் ஸ்ரீலங்கா தமது முரண்பாடுகளை தாமே தீர்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை கோருவதற்கான மூவர் அடங்கிய குழுவில் அன்மையில் வடமாகாண ஆளுனராக நியமனம் வழங்கப்பட்ட தமிழரென அடையாளப்படுத்தப்படும் சுரேன் ராகவன் மைதிரிபால சிறீசேனாவினால் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளார்.

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் உள்ளடங்கலாக 3 போ் கொண்ட குழுவை ஐ. நா.சபைக்கு அனுப்பவுள்ளதாகவும், இந்த குழு இலங்கைக்கு மேலும் கால அவகாச ம் வழங்கும் கோாிக்கையினை ஐ.நாவில் சமா்பிக்கும் எனவும் ஜனாதிபதி மைத்தி ாிபால சிறிசேனா கூறியுள்ளாா்.

இன்று காலை இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் பத்திாிகை ஆசிாியா்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கலாநிதி சரத் அமுனுகம, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் இந்தப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கவுள்ளனர்.

ஜனாதிபதியைக் கொலைச் சதியில் நாலகவிற்கு எதிராக போதுமானளவு சாட்சிகள்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்த திட்டம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவிற்கு எதிராக போதுமான அளவு சாட்சிகள் இருப்பதாக சட்டமா அதிபரிற்கு பதிலாக ஆஜரான பிரதி சொலிஸ்டார் ஜெனரல் தீலிப பீரிஸ் கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று (06) கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பிரபல பாதாள உலக தலைவரான மாகந்துர மதூஷ் மற்றும் பிரபல பாடகர் அமல் பெரேராவுடன் தொடர்பில் இருந்துள்ளதாகவும் அவர் அதனை மிகவும் இரகசியமான முறையில் மேற்கொண்டுள்ளதாகவும் பிரதி சொலிஸ்டார் ஜெனரல் தீலிப பீரிஸ் கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

குறித்த கருத்துக்களை விசாரித்த கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க, அடுத்த விசாரணையின் போது நாலக டி சில்வாவிற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள சாட்சிகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை நீதிமன்றத்திடம் சமர்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் நாலக டி சில்வாவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு சத்துருகொண்டானிலும் மீட்கப்படுகின்றன எலும்புக்கூடுகள்!!(Photos)

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டானில் மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) காலை குழியொன்று தோண்டப்பட்டபோதே மேற்படிமனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சத்துருக்கொண்டானில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்ட பகுதியிலேயே இந்த எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அப்பிரதேசத்தில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறித்த எச்சங்கள் சுமார் 25 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






மன்னார் ஆயரின் அறிக்கைக்கு திருகேதீஸ்வர நிர்வாகம் கொடுத்த பதிலடி இதோ!!

மன்னார் ஆயர் பச்சைப் பொய்யான அறிக்கை கொடுத்திருப்பதாக கூறி திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம் கொடுத்த அறிக்கை இது.

https://scontent-sjc3-1.xx.fbcdn.net/v/t1.0-9/53374350_10213686101963190_656909282213625856_n.jpg?_nc_cat=105&_nc_ht=scontent-sjc3-1.xx&oh=1efa14fa60428dc98994957111ab4e6a&oe=5CE35A49

பாக்கிஸ்தானில் இந்திய விமானி அபிநந்தன் பிடிபட முன் செய்த மயிர்கூச்செறியும் வீரச்செயல்

தன் செத்தாலும் பரவாயில்லை எதிரி நாட்டுக்கு ஆவனம் சிக்கிவிட கூடாது என்பதற்காக செய்யும் நடவடிக்கையைப் பாருங்கள்...

வீடியோவைப் பார்வையிடுவதற்கு முதல் கீழே உள்ள இணைப்பை அழுத்தி இந்த subscribe செய்த பின்னரே குறித்த வீடியோவைப் பார்வையிடுங்கள்.

https://www.youtube.com/channel/UCxugrQ-AB9MY-s18YlwMZZQ?view_as=subscriber



ஊரெழுச்சி திட்டத்தில் கொள்ளையடிக்கும் வன்னி நாட்டாமை சிறிதரன்!!

கம்பரெலிய( ஊரெழுச்சி) திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் வீதிகள் செப்ப னிடும் பணிகளில் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள் ளனா்.

கிளிநொச்சியில் கம்பரெலிய திட்டத்தை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குத்தகைக்கு எடுத்துள்ளார். கடந்த ஒக்ரோபர் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சின் போது ரணிலுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்ததற்கான வெகுமதிகளில் ஒன்றாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீதி உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளுக்கு எனக் கூறி கம்பரெலிய திட்டம் ஊடக பெருந்தொகை பணம் சன்மானமாக வழங்கப்பட்டிருந்தது.

அப் பணித்தில் முடிந்தவரையான கொள்ளையடிப்புக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கிளிநொச்சியில் சிறிதரனின் ஊழல் முறைகேடு உச்சம் பெற்றுத் திகழ்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வீதித் திருத்தப் பணிகளின் போது, முறையான தொழிநுட்ப மேற்பார்வை இல்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட நியமங்களுக்கு அமைவாகபணிகள் மேற்கொள்ளப் படாது, தரமற்ற அபிவிருத்திப் பணிகளை ஒப்பந்தகாரர்கள் முன்னெ டுத்து வருகின்றனர்.

வீதி அபிவிருத்திப் பணிகளின் தரம் தொடர்பில் முறையான தொழிநுட்ப மேற்பார் வை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, மாவட்ட உயரதிகாரிகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில் வீடுபுகுந்து தாக்குதல்!! முகமூடியணிந்த நபர்களால் பதற்றம் (Photos)



முகங்களை மூடிய மூன்று பேர் கொண்ட குழு வீடொன்றில் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடித்து நொருக்கியதுடன், மூதாட்டி ஒருவைரயும் குழு தாக்கியது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

புதன்பெயர்ச்சியால் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் 6 ராசிகள்!

எங்கயோ வானத்தில் இருக்கும் கிரக நிலை எப்படி நம் வாழ்க்கையை பாதிக்கும் என்பது இன்றளவும் ஆச்சர்யமாகவே இருக்கிறது. ஆனால் ஜோதிட கூற்றுப்படி பார்த்தால் அந்த மாற்றங்கள் நம் வாழ்விலும் நடக்கத்தான் செய்கிறது.

ஏழரைச் சனியிலிருந்து, ராகு கேது பெயர்ச்சி வரை ஜோதிட கணிப்பும் முன்கூட்டியே நம் ராசிக்கான அனுகூலங்களை சரியாக சொல்லத் தான் வருகிறது.

அந்த வகையில் இந்த வருடம் மார்ச் 5-28 ஆம் தேதியில் ஏற்படும் புதன் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு விளைவை ஏற்படுத்த போகிறது. பாதிப்பை சந்திக்க போகும் அந்த 6 ராசிக்காரர்கள் யார் யார் என்று இங்கே காண்போம்.
மிதுனம்

உங்கள் ஆளும் கிரகமே புதன் தான். அப்படி என்றால் புதனின் பார்வை இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? மற்றவர்களுடன் ஏற்படும் தொடர்பில் இடையூறு ஏற்படலாம். மக்கள் தொடர்பு தான் உங்கள் பலம் ஆனால் தற்போது அதில் பாதிப்பு வரக் கூடும். எனவே உங்கள் நாவையும் பேச்சையும் கவனமாக பயன்படுத்துவது நல்லது. இல்லையென்றால் வீண் சண்டைகள், எதிரிகள் உருவாக வாய்ப்புள்ளது. புதன் பார்வை அகலும் வரை பேச்சை குறைத்து கொள்ளுங்கள்.
கடகம்

இதுவரை அமைதியாக இருந்த கடக ராசிக்காரர்களால் இனி அமைதியாக இருக்க முடியாது. அதிக கோபம், உணர்ச்சி வசப்படுதல் போன்றவை தென்படும். எந்த காரணமும் இல்லாமல் கோபம் தலைக்கேறும். எனவே பேசுவதற்கு முன் பொறுமையாக இருந்து செயல்படுங்கள்.
சிம்மம்

ஒரு அறையில் இருந்தால் கூட சிம்ம ராசிக்காரர்கள் எப்பொழுதும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். ஆனால் இந்த மார்ச் மாதம் உங்களுக்கு அப்படி அமையாது. எனர்ஜி குறைந்து காணப்படுவீர்கள். சோம்பேறித்தனம், விருப்பமின்மை எல்லாம் தொற்றிக் கொள்ளும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் குழப்பமான பேர்வழிகள். இந்த வருடமும் அதிக குழப்பத்தில் இருப்பீர்கள். எனவே அதிகம் யோசிக்க வேண்டாம். முடிந்ததை பற்றி யோசிக்காமல் பொறுமையாக இருங்கள். சிக்கல்கள் சீக்கிரம் சரியாகி விடும்.
துலாம்

தங்கள் மனதில் உள்ளதை யாரும் அறியாமல் மறைப்பதில் வல்லவர்கள் துலாம் ராசிக்காரர்கள். ஆனால் அதே நேரத்தில் உங்களுக்குள் திறமை முழுவதையும் வெளிக்கொணர முயற்சி செய்யுங்கள். கூலாக எதையும் டீல் பண்ணுங்க. மற்றவர்களை வார்த்தைகளால் காயப்படுத்த வேண்டாம்.
கும்பம்

இந்த புதன் பார்வையால் தேவையற்ற விரக்தி உங்களை தாக்கும். வித்தியாசமான பார்வை முயற்சியை கையாளுங்கள். நேர்மறையாக யோசிப்பது உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மோசமான விளைவை தள்ளி வைக்கும்.

வீதியை பல நாட்களாக மூடி சீட்டாடும் காவாலிகள்!! (Photos)

நான்கு நாட்களாக பகல் இரவாக வீதி ஒன்று மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இம் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இவ்வீதியில் மரண வீட்டு நிகழ்வொன்றிறற்காக நிழல் குடை ஒன்று வீதியின் குறுக்காக போடப்பட்டுள்ளது.
இதனால் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன் அவ்வீதியினால் பயணம் செய்வோர் மாற்று வீதியை பயன்படுத்துகின்றனர்.
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி நற்பிட்டிமுனை கிராமத்தை இணைக்கும் இவ்வீதி மூடப்பட்ட நிலையில் அந் நிழல் குடையில் கரம், சீட்டாட்டம் போன்ற விளையாட்டுக்களில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் குறித்த வீதியால் செல்வோரை மாற்று வீதியால் செல்லுமாறு அச்சுறுத்துகின்றனர்.
இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை தொடர காரணமாக அமையும்.
எனவே இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


பிரான்ஸ் வந்த கிளிநொச்சி பொம்பிளை காதலனுடன் ஓட்டம்!! கணவனின் கதறல் இதோ!! (Video)

கடந்த ஓகஸ்ட் மாதம் பிரான்சிலிருந்து வந்து கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதியை திருமணம் முடித்துள்ளான் முல்லைத்தீவு இளைஞன். பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தனது இளம் மனைவியை கடந்த மாதம் பிரான்சிற்கு அழைத்துள்ளான். பிரான்ஸ் வந்த மனைவி இரு கிழமையே குறித்த இளைஞனுடன் குடும்பம் நடாத்திவிட்டு அதன் பின்னர் தான் காதலித்து வந்த காதலனுடன் மாயமானதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பான முழு விபரங்களையும் தெரிவிக்கின்றார் பிரான்ஸ் இளைஞன்.

 வீடியோவைப் பார்வையிடுவதற்கு முதல் கீழே உள்ள இணைப்பை அழுத்தி இந்த subscribe செய்த பின்னரே குறித்த வீடியோவைப் பார்வையிடுங்கள்.

https://www.youtube.com/channel/UCxugrQ-AB9MY-s18YlwMZZQ?view_as=subscriber

மட்டக்களப்பிலிருந்து கல்விச் சுற்றுலாவுக்கு சென்ற பேரூந்து கவிழ்ந்து ஒருவர் பலி!! (Photos)

க்கரைப்பற்று - அட்டாளைச்சேனையிலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கண்டி - மாவனல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த விபத்து கடுகண்ணாவில் இன்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பேருந்து நடத்துனரே உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்திற்குக் காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Image may contain: one or more peopleImage may contain: one or more people and nightImage may contain: one or more people and people standing

இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (06.03.2028)

மேஷம்
இன்று எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

ரிஷபம்
இன்று அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பெண்கள் தொழில் மேன்மை பெறுவார்கள். நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3

மிதுனம்
இன்று போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங் களை படிப்பது வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6

கடகம்
இன்று தடை தாமதம், வீண் அலைச்சல் இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது. எல்லோரும் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வீர்கள். திடபுத்தியும், பலவழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமையும் மேலோங்கும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6

சிம்மம்
இன்று பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7

கன்னி
இன்று பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7

துலாம்
இன்று பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5

விருச்சிகம்
இன்று பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும் சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5

தனுசு
இன்று கெட்டதை ஆராய்ந்து செய்வது நல்லது. பயன் தராத முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3

மகரம்
இன்று தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள் காரிய தடைகள் விலகி அனுகூலமான பலன் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும். எதிர்ப்புகள் நீங்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கும்பம்
இன்று வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதில் உள்ள நல்லது எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மீனம்
இன்று தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

செவ்வாய், 5 மார்ச், 2019

பகிடி வதையால் தனது படிப்பைக் கைவிட்டான் யாழ் பல்கலைக்கழக மாணவன்!! (Photos)


பகிடிவதையால் பட்டப்படிப்பை கைவிட்ட யாழ். பல்கலைக்கழக மாணவன்!
யாழ். பல்கலைக்கழகத்தின் பகிடிவதை காரணமாக உடலியல் ரீதியான துன்புறுத்தல் வன்கொடுமைகளால் மனித உரிமை மீறப்பட்டு தனது பல்கலைக்கழகக் கல்வியை இடைநிறுத்துவதாக பாதிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் ப.சுஜீபன் வேதனையுடன் கூறியுள்ளார்.
குறித்த மாணவன் இது தொடர்பில் தனது முகநூல் வாயிலாக பகிரங்கமாக தனது வேதனைகளையும், பிரச்சினைகளையும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதையால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டும் , அவமானப்படுத்தப்பட்டும் உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட முதலாம் வருட மாணவன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பது தனது உயிருக்கே ஆபத்தானது என்னும் நிலையில் தனது பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை இடைநிறுத்தியுள்ளார்.
கஸ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்து கஸ்டப்பட்டு பாடசாலைக் கல்வியைக் கனவுடன் கற்ற போதிலும் தொடர்ந்தும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை சிரேஸ்ட மாணவர்களது மனித உரிமை மீறல்களால் தொடர முடியவில்லையே தான் கண்ட கனவு வீணாகியுள்ளதாக வேதனையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த யுத்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பகுதியில் வாழ்ந்து பல்வேறுபட்ட வளப்பற்றாக்குறைகளுடன் பல கஸ்டங்களை எதிர்நோக்கி கல்வி கற்றவர் என்பதும், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்து அனைத்தையும் இழந்து கஸ்டப்பட்டு அவலங்களை எதிர்நோக்கிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களின் அடித்துத் துன்புறுத்தல் தாங்க முடியாது ஏன் எனக்கு அடிக்கிறியள்? நான் என்ன குற்றம் செய்தேன் என்று வினவிய போது திருப்பிக் கதைக்காதை எனக்கூறி மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளதாகவும், வீதியில் வைத்து அவமானப்படுத்தியுள்ளதாகவும் தனது முகநூலில் இம்மாணவன் ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார்.
மற்றும் சிரேஸ்ட மாணவர்கள் சிலரால் இம்மாணவனது முகநூல் போன்று இன்னொரு முகநூலை உருவாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவனது ஒழுக்கத்திற்குப் பங்கம் ஏற்படும் வகையில் சில பதிவுகள் இடப்பட்டுள்ளது.
மேற்படி மாணவனை பல தடவைகள் தாக்கி வன்கொடுமைப்படுத்தியுள்ளார்கள். அதனால் யாழ்.போதனா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளார்.
யுத்த காலம் உட்பட தற்போது வரை ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களே யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர்களை மிருகத்தனமாகத் தாக்கி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்மாணவன் மீது வதை புரிந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பல்கலைக்கழக மாணவர்களைப் பாதுகாக்க உரிய பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்வருவதுடன். பாதுகாப்புடன் தனது பட்டப்படிப்பை மேற்கொள்ள உயர்கல்வி அமைச்சு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் கால் வைக்கும்போது நான் கண்ட கனவுகள் இலட்சியப் பாதைகள் அனைத்தும் என் கண்முன்னே வந்தது! அவை அனைத்தும் வந்த சில நொடிகளில் என் கன்னத்தில் இடி விழுந்தது போன்று சத்தம். யார் என்று பார்த்தால் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களாம் அடித்ததற்கும் காரணம் எதுவும் சொல்லாது நகர்ந்து சென்றார்கள் என பாதிக்கப்பட்ட மாணவன் கண்ணீருடன் பதிலளித்துள்ளார்.
இவை அனைத்திற்கும் மேலாக பகிடிவதை என்னும் போர்வையில் தாங்கள் தங்கும் அறைகளில் எங்களை கூட்டிச்சென்று இரக்கம் இன்றி தாக்குகின்றனர்.
எனினும் பல்கலைக்கழகம் சென்றால் எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று எனக்கே தோன்றுகின்றது. எனது கனவுகள் அனைத்தும் புதைந்தது பகிடிவதையால் பட்டப்படிப்பும் இடையில்முற்றுப்பெற்றது. எனவும் தெரிவித்துள்ளார்.
Image may contain: textImage may contain: textNo photo description available.Image may contain: text

புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு கோடிரூபா கடன் வழக்குகின்றது இலங்கை அரசு!!

 மக்களை வலுவூட்டி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை வலுப்படுத்துவதற்காக அனைவரினதும் தேவைகளை நிறைவேற்றும் நோக்கிலான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சமர்பிக்கப்பட்டது.

சுதந்திர இலங்கையின் 73 ஆவது வரவு செலவுத் – திட்டத்தை, நாட்டின் 24 ஆவது நிதியமைச்சர் என்ற ரீதியில் மங்கள சமரவீர சமர்ப்பிக்கின்றார். நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிக்கும் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வர்த்தக மற்றும் ஆளணி வளங்களை வலுப்படுத்தும் நோக்கில் இது சமர்ப்பிக்கப்படுகின்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை மேலும் வலுவூட்டுவது இதன் நோக்கமாகும்.

இதன்போது வரவு செலவத்தித்திட்டத்திற்கான தொடக்க உரையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கௌரவ சபாநாயகர் அவர்களே, எனது இரண்டாவது வரவு செலவுத்திட்டத்தினை இச் சபைக்கு சமர்ப்பிப்பதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

2018 இன் இறுதியில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலைமை முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் பொருளாதாரமானது உறுதிப்படுத்தப்பட்டு வளர்ச்சியை நோக்கி நகர்வதினை நாம் காணலாம் என்பதனை இச்சபைக்குத் தெரிவித்துக் கொள்வதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையின் சுதந்திரத்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில் மிகவும் இருண்ட 52 நாட்களின் பின்னர் ஸ்திரநிலைமையினை மீண்டும் அடைந்து கொள்வதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டியேற்பட்டது.

தொடர்ச்சியான பல வருடங்களாக ஏற்பட்ட பல வரட்சியினால் கிராமிய வருமானம் வீழ்ச்சியடைந்து முழுப் பொருளாதாரமும் பாதிப்படைந்த நிலையில் 2018 ஒக்டோபர் 26 ஆந் திகதி இடம் பெற்ற நிகழ்வு பொருளாதாரத்தினை மேலும் மோசமாகப் பாதித்தது. உலக எண்ணெய் விலை இரட்டிப்பாகியதுடன் ஐக்கிய அமெரிக்க பெடரல் ரிசேவ் ஆனது வட்டி வீதங்களை மிக விரைவில் அதிகரித்தது. இவ்வாறான உள்நாட்டு வெளிநாட்டு சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்த அதே வேளை எமது அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மையினையும் ஏற்படுத்தியுள்ளது.

2018 ஒக்டோபர் இறுதியிலிருந்து உலக எண்ணெய் விலையானது பாரியளவு வீழ்ச்சியடைந்திருந்ததுடன் ஐக்கிய அமெரிக்க பெடரல் ரிசேவ் ஆனது குறைந்த வட்டி வீதங்களுக்கான சமிக்ஞையினைக் காட்டியதுடன் நுகர்வானது பழைய நிலைமைக்குத் திரும்பியது. இந்நிலைமையினால் இலங்கை பெற்றுக் கொள்ளமுடியுமாகவிருந்த பொருளாதார வளர்ச்சியினை 2019 வரையில் அனுபவிக்க முடியாது போனது. துரதிஷ்டவசமாக, நாம் அரசியல் சதியொன்றிற்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதால் மேற்குறித்த நன்மைகளின் விளைவுகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பினை இழந்தோம்.

இலங்கையின் மீதான நம்பிக்கை இழந்ததன் விளைவாக, அந்த 52 நாட்களுக்குள் எமது கடன் மற்றும் பங்குச் சந்தையிலிருந்து மூலதன வெளியேற்றம் பாரியளவு இடம்பெற்றதுடன் மிகவும் கடினமான உழைப்பின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட எமது வெளிநாட்டு ஒதுக்குகளிலிருந்து பல பில்லியன் டொலர்களை இழக்க வேண்டியேற்பட்டது. இக்காலப்பகுதியல், ஏனைய வளர்ந்துவரும் சந்தைகளின் நாணயங்கள் மதிப்பேற்றமடைந்த அதேவேளை, எமது நாணயத ;தின் பெறுமதியானது வரலாற்றில் மிகக் குறைந்த மட்டத்திலான வீழ்ச்சியினை பதிவுசெய்தது.

இலங்கையின் கடன் தரப்படுத்தலானது கீழ் மட்டத்திற்குத் தள்ளப்பட்டதன் விளைவாக எமது வெளிநாட்டுக் கடன் பெறுகைச் செலவினம் இரட்டை இலக்க மட்டத்திற்கு அதிகரித்துள்ளது. 2019 இல் வெளிநாட்டுப் படுகடன் மீள் கொடுப்பனவாக 5.9 பில்லியன் ஐ.அ. டொலரினை மீள் நிதியளிக்க வேண்டியிருப்பதனால் மிகவும் சாதகமற்ற தன்மை உருவாகியுள்ளது. இலங்கை சிறந்த பிரயாணம் செய்யக்கூடிய இடமாக ´லோன்லி பிலனற்´ சஞ்சிகையினால் தரப்படுத்தப்பட்டதன் பின்னரும் கூட, அப்போது காணப்பட்ட அரசியல் நிலமையின் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகையானது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையின் நிவர்த்தி செய்யும் பொருட்டு புதிய பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நிலைமை இவ்வாறிருக்க, 2018 டிசெம்பர் 17 ஆம் திகதி நாம் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தோம். எமது வெளிநாட்டுத்துறைக் காரணிகளுக்கு ஏற்பட்ட சேதத்தினை நாம் தற்பொழுது சீர்படுத்தியுள்ளதுடன் சந்தைகள் கடந்த இரண்டு மாதங்களில் நம்பிக்கை தரக்கூடிய வகையில் மீள் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இன்று எமது வெளிநாட்டுக் கடன் பெறுகை செலவினமானது 200 அடிப்படை புள்ளிகளுக்கு மேலாக வீழ்ச்சியடைந்துள்ளது.

எமது பொருளாதாரத்தினை நோக்கி வெளிநாட்டு மூலதனமானது நகர்ந்துள்ள அதேவேளை சனவரியிலிருந்து அரசாங்க பிணையங்கள் மீது ரூபா 3,400 மில்லியன் வெளிநாட்டு நிதியானது உட்பாய்ச்சப்பட்டுள்ளதுடன் இன்றுவரை ரூபாவானது 1.5 சதவீதத்தினால் மதிப்பேற்றம் அடைந்துள்ளது.

எனவே, அரசியல் சதியினால் ஏற்பட்ட பல்வேறுபட்ட பாதிப்புக்களை நிவர்த்திசெய்ய வேண்டியுள்ளதுடன், பொருளாதாரம் மீண்டும் ஸ்திரப்படுத்தப்பட வேண்டியுள்ளது. வரவு செலவுத்திட்ட உரை 2019 ´என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா – மக்களை வலுவூட்டலும் வறியோரைப் பராமரித்தலும்´ பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொண்ட பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான வாய்ப்பினை தற்பொழுது நாம் பெற்றுள்ளோம்.

அரசிறை முகாமைத்துவம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றது. ஐந்து தசாப்தங்களில் முதல் முறையாக 2017 இல் ஆரம்ப மிகையினை நாம் அடைந்துள்ளதுடன், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீத வளர்ச்சியாகும். 2015 இல் காணப்பட்ட -2.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2018 இல் இது பாரியதொரு முன்னேற்றமாகும். பிரதான உலக நுகர்வுப் பொருட்களின் விலைகள் அதிகரித்த போதிலும் பணவீக்கமானது கட்டுப்பாட்டுக்குள் முகாமை செய்யப்பட்டுள்ளது. 2017 இல் என்றுமில்லாத சிறந்த ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டினை நாம் அடைந்துள்ளதுடன் 2018 இல் அதற்கான உத்வேகம் அதிகரித்துள்ளது. இந்நிலைமை பொருளாதாரத்தினை பாரிய வெளிநாட்டு உட்பாய்ச்சலினை நோக்கி மீள் ஒருமுகப்படுத்துகின்ற எமது அரசாங்கத்தின் நோக்கத்துடன் இணைந்ததாகக் காணப்படுகின்றது.

கௌரவ சபாநாயகர் அவர்களே, 2015 ஆம் ஆண்டில் நாம் எச்சந்தர்ப்பத்திலும் வெடித்துச் சிதரக்கூடிய குண்டைப்போன்ற பொருளாதாரமொன்றினையே அனந்தரமாகப் பெற்றோம். எவ்வாறாயினும் நாம் வெற்றிகரமாக ஸ்திரத் தன்மையினையும் மீள் சமநிலையினையும் அடைந்துள்ளோம். முன்னைய அரசாங்கமானது படுகடனை மீளச்செலுத்துவதற்கான எவ்வித நியாயமான திட்டமும் இல்லாது செலவு மிக்க வெளிநாட்டுப் கடன்கள் மூலம் வீண்விரையம் மிக்க செலவினங்களை செய்துகொண்டிருந்தது. 2014 இல் வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருந்ததுடன் ஏற்றுமதியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதமாக சரிவடைந்து காணப்பட்டது. இது இரண்டு தசாப்த காலத்தில் ஏற்பட்ட பின்னடைவாகும். விசேடமாக 2000 ஆம் ஆண்டில் வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாகக் காணப்பட்டதுடன் ஏற்றுமதிகள் 30 சதவீதமாக இருந்தது. இது பொருளாதாரமானது ஸ்திரமற்ற நிலையை அடைந்து சிதைவடைந்ததென்பதை காண்பிக்கின்றது.

இந்த அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியானது தனியார் தொழில் முயற்சிகளினால் வழிப்படுத்தப்படுகின்றது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. இதுவே, முன்னைய நீல மற்றும் பசுமை வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ´என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா´ எண்ணக்கருவாகும். எவ்வாறாயினும், நியாயமான சந்தையே இலங்கையின் வர்த்தக மற்றும் வாணிபத்தின் உயிரோட்டமாகும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபார தொழில் முயற்சிகள் மற்றும் சா்வதேச மட்டத்தில் போட்டியிடக் கூடிய இலங்கை கம்பனிகளின் வளர்ச்சிக்காக தனது புத்திக் கூர்மையினை பயன்படுத்தும் உண்மையான தொழில் முயற்சியாளரையே தனியார் தொழில் முயற்சி என நான் நம்புகின்றேன்.

இதற்கு மாற்றமாக தனியார் துறையில் இன்னுமொரு வகுதியினர் காணப்படுகின்றனர். அவர்கள் போட்டித்தன்மை மற்றும் நியாயமான சந்தைகளுக்கு உடன்பாடற்ற ஊழல்களை ஊக்குவிக்கின்ற முன்னைய அரசாங்கத்துடன் தொடர்புவைத்து தம்மை வளர்த்துக் கொண்டவர்களாவர். இவர்கள் 20 மில்லியன் மக்களின் மீது செலவினத்தின் சுமையினை ஏற்படுத்தி மக்களின் வரித் தீர்வைகளின் மூலம் தம்மை வளர்த்துக் கொண்டவர்களாவர். மேலும் இன்றுவரை நாம் செலுத்திவருகின்ற அதிகரித்த செலவினங்களை ஏற்படுத்திய பெருமளவு அரசாங்க ஒப்பந்தங்களின் மூலம் நன்மை அடைந்தவர்களாவர். இவர்களில் சில சுயநலவாதிகள் தமது கம்பனிகள் மற்றும் தனிப்பட்ட கணக்குகளுக்கு அதிகளவான செல்வத்தினை இறைக்கின்ற சர்வாதிகாரத்தினை நோக்கிச் செல்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இக்குழுவினர் தனியார் துறையில் சிறியதொரு வகுதியாயினும் அதிகாரமும் செல்வாக்கும் மிக்கவர்களாவர். பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாக நாம் காண வேண்டிய தனியார் துறை இதுவல்ல. ஆனால், இவை கடந்த கால ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற எச்சங்களாகும்.

நாம் தனியார் தொழில் முயற்சிகளின் அடிப்படை விதிகளை பின்பற்றுகின்ற சிறந்த சந்தை தொழிற்படுத்தலில் வெற்றியடையக்கூடிய புதிய நிறுவனங்களை உருவாக்குகின்றோம். எமது நாட்டின் அபிவிருத்தி மற்றும் நவீன மயப்படுத்தலினை தொடர்ந்து பின்னடையச் செய்கின்ற பாதுகாப்புச் சிந்தனைகளிலிருந்து விடுபட்ட தனியார் துறையொன்று இலங்கைக்குத் தேவை. பொருளாதார தாராளமயமாக்கல், பாதுகாப்பு வலையமைப்புக்கான ஆதரவளிப்பு மற்றும் சந்தை நெருக்கடிகளை நீக்குவதற்கான அரச தலையீடு மற்றும் சமூக நீதியினை உறுதிப்படுத்தல் என்பவற்றினை கடந்த வருட வரவு செலவுத்திட்டத்தில் நான் சமர்ப்பித்தேன். இந்த வேலைச்சட்டகத்தினை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக அதன் பிரதான காரணிகளை வலுப்படுத்துவோம்.

தாராளப் பொருளாதாரத்தினை நோக்கிய எமது தீர்மானங்கள் என்றுமில்லாதவாறு விரைவானதாகும். இதன் முடிவாக துணைத் தீர்வைகளை ஒழிப்பதுடன் வர்த்தக தடைகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம் அதேவேளை, போட்டித்தன்மை சவால்களை எதிர்கொள்வதில் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு சட்டவாக்கத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் வர்த்தக மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தினை உருவாக்கலுடன் பாதுகாப்பான ஏற்பாடுகளை நாம் முன்னெடுப்போம்.

சமூக உட்கட்டமைப்பு மற்றும் சமூக பாதுகாப்பு வலையமைப்பில் நாம் மேலும் முதலீடு செய்யவுள்ளோம். கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிக நிதி வழங்கும் அதேவேளை அவற்றின் தரம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். உபாய ரீதியாகவும் வினைத்திறனிலும் வீழ்ச்சிப் போக்கினைக் கொண்டுள்ள எமது சமூகப் பாதுகாப்பு வலையமைப்பினை மீளெழுச்சி பெறச் செய்வதற்கான நேரம் இதுவாகும். எமது கவனமானது, பயனாளிகளை படிப்படியாக தன்னிறைவு பெற்ற வலுவூட்டப்பட்ட பிரசைகளாக மாற்றுவதனை நோக்கிச் செலுத்தப்பட வேண்டியுள்ளது. எமது பிரஜைகளை வலுவூட்டுவது எமது அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும். இது அரசியல், சமூக பொருளாதார வலுவூட்டல் என்பவற்றின் ஊடாக இடம்பெறும். ´என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா – மக்களை வலுவூட்டல்´ என்ற இவ்வருட வரவு செலவுத்திட்டத் தொனிப்பொருளானது, எமது மக்கள் தாமாகவே முன்னேற்றப் பாதையில் சென்று நாட்டினை வளமடையச் செய்யும் வகையில் அவர்களுக்கான உதவியை வழங்குகின்ற அதேவேளை, சமூகத்தில் காணப்படும் வறிய மற்றும் பலவீனமான மக்களை நிலைபேறான மற்றும் இலக்கிடப்பட்ட சமூகப் பாதுகாப்பு வலையமைப்பினூடாக பாதுகாப்பதுமாகும் என நிதி அமைச்சர் தனது வரவு செலவு திட்டத்திற்கு முன்னராக தொடக்க உரையில் தெரிவித்திருந்தார்.

பின்னர் வரவு செலவு திட்டம் தொடர்பான தீர்மானங்களை அவர் பாராளுமன்றத்தில் சமர்பித்திரந்தார்.

குறித்த தீர்மானங்கள் உள்ளடங்கிய அறிக்கை பின்வருமாறு,



4.10 PM – சிகரட் மற்றும் பீடியின் விலை அதிகரிப்பு
4.05 PM -கொழும்பை அழகுபடுத்தும் திட்டத்திற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
3.46 PM – அரச ஊழியர்களின் சம்பள உயர்விற்காக 40 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. ஜூலை முதலாம் திகதி முதல் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு.
3.43 PM – ஓய்வூதிய முரண்பாடுகளை சரி செய்ய 12 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
3.41 PM – இலகு ரயில் திட்டத்திற்கு 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
3.39 PM – இலங்கை போக்குவரத்து சேவைக்கு 250 புதிய பஸ்கள், இத்திட்டத்திற்கு 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
3.36 PM – பொது போக்குவரத்து சேவை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் பஸ் சேவை அபிவிருத்தி திட்டம்..
3.35 PM – போகம்பரை சிறைச்சாலை பொது இடமாக அபிவிருத்தி செய்ய 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
3.34 PM – மாத்தளை – பெர்னார்ட் அலுவிஹாரே விளையாட்டரங்கும் கொலன்னாவை மல்லமராச்சி விளையாட்டுத் திடலும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
3.32 PM – கல்முனை, வாழைச்சேனை, தலைமன்னார் உள்ளிட்ட நகரங்களின் அபிவிருத்திக்காக மேலும் பல ஒத்துழைப்புகளை வழங்குதல்
3.30 PM – காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வரவு வெசவுத் திட்டத்தின் ஊடாக விசேட கவனம்
3.28 PM – தேசிய தொழில் தகுதியுடனான (NVQ) தொழிற்பயிற்சித் திட்டங்களை இலங்கை இராணுவம் நடத்தவுள்ளது.
3.25 PM – சுவசெரிய போக்குவரத்து சேவைக்காக 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 300 தரிப்பிடங்கள் அபிவிருத்தி
3.22 PM – க.பொ.த உயர் தரத்தில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு வௌிநாட்டில் பயில நிதியுதவி வழங்கப்படும்
3.20 PM – தமிழ் மொழி ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
3.17 PM – பல்கலைக்கழக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 25000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
3.016 PM – 400,000 டொலர்களுக்கும் மேல் முதலீடு செய்த வௌிநாட்டவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு குடியிருப்பு விசா
3.16 PM – பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 32000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
3.14 PM – பொது பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெறும் மாணவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் கற்பதற்கான வாய்ப்பு..
3.12 PM – வெளிநாட்டு மாணவ சுற்றலாப் பயணிகளுக்கான நுழைவுச் சீட்டு கட்டணம் 50% குறைப்பு
3.09 PM – SLTDA இல் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மாத்திரம் 2020 ஏப்ரல் முதலாம் திகதி முதல் online பதிவுகளை மேற்கொள்ள முடியும்
3.07 PM – பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு வௌிநாட்டு நாணய பற்றுச்சீட்டுகளுக்கு NBT நீக்கம்.
3.05 PM – பிங்கிரிய அபிவிருத்தி வலயத்திற்கு ரூபா 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
3.02 PM – இயந்திரங்களுக்கான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் வரி விதிப்பு 2.5% குறைக்கப்படும்.
3.02 PM – தேசிய ஏற்றுமதி மூலோபாயத்திற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
2.59 PM – புதிதாக திருமணமான தம்பதியினரக்கு 6% வீத வட்டி அடிப்படையில் HOME SWEET HOME விசேட கடன் திட்டம் 25 ஆண்டுகளில் செலுத்தப்பட வேண்டும்.
2.52 PM – சிறுநீரக நோயாளர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கு 1,480 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
2.52 PM – போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்காக வீரவில மற்றும் அபேபுஸ்ஸ ஆகிய பகுதிகளில் சீர்திருத்த நிலையங்கள்
2.48 PM -வேலைத்தளத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 3 மாதங்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும்.
2.48 PM -விசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை 3000 ரூபாவிலிருந்து 5000 ரூபா வரை அதிகரிப்பு
2.45 PM – கழிவறை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க 4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
2.41 PM – எமது அரசாங்கக் காலம் முடிவுறுவதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை பணிகளை நிறைவு செய்வோம்.
2.37 PM – பருத்தித்துறை மற்றும் பேசாலையில் மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதற்கு 1300 மில்லியன் ரூபா
2.35 PM – பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார்.
2.33 PM – இலங்கை கறுவாப்பட்டை பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. ஏற்றுமதிக்கு முன்னதாக அனைத்து பொருட்களின் தரமும் பரிசோதிக்கப்படும். கறுவாப்பாட்டை பயிற்சி நிலையத்திற்கு 75 மில்லியன் ரூபாஒதுக்கீடு
2.30 PM – இறப்பர் உற்பத்தி அபிவிருத்திக்காக 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
2.29 PM – இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைகள் வழங்குவதற்கு Enterprise Sri Lanka-வினை விரிவுபடுத்த வேண்டும்.
2.28 PM – சிறிய ட்ரக் வாகனங்களுக்கான வரியை குறைக்க திட்டம்
2.24 PM – மத வழிப்பாட்டுத் ஸ்தளங்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் தொகையானது 5 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பு
2.22 PM – கம்பெரலிய அபிவிருத்தித் திட்டத்திற்காக 48.000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
2.21 PM – உலக சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து காணப்பட்ட போதும், எமது பணவீக்கத்தை 4 வீதமாகப் பேண முடிந்தது.
2.16 PM – 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் பின்னர் எண்ணெய் விலை குறைவடைந்தது. அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக அதன் பயனை அனுபவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
2.15 PM – அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 1.5 வீதத்தால் தற்போது வலுவடைந்து வருவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
2.07 PM – நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் வரவு செலவுத்திட்ட உரை சபையில் வாசிக்கப்படுகின்றது.

2.04 PM – சபாநாயகரின் உரை ஆரம்பமானது






யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.