இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 5 மார்ச், 2019
பகிடி வதையால் தனது படிப்பைக் கைவிட்டான் யாழ் பல்கலைக்கழக மாணவன்!! (Photos)
பகிடிவதையால் பட்டப்படிப்பை கைவிட்ட யாழ். பல்கலைக்கழக மாணவன்!
யாழ். பல்கலைக்கழகத்தின் பகிடிவதை காரணமாக உடலியல் ரீதியான துன்புறுத்தல் வன்கொடுமைகளால் மனித உரிமை மீறப்பட்டு தனது பல்கலைக்கழகக் கல்வியை இடைநிறுத்துவதாக பாதிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் ப.சுஜீபன் வேதனையுடன் கூறியுள்ளார்.
குறித்த மாணவன் இது தொடர்பில் தனது முகநூல் வாயிலாக பகிரங்கமாக தனது வேதனைகளையும், பிரச்சினைகளையும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதையால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டும் , அவமானப்படுத்தப்பட்டும் உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட முதலாம் வருட மாணவன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பது தனது உயிருக்கே ஆபத்தானது என்னும் நிலையில் தனது பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை இடைநிறுத்தியுள்ளார்.
கஸ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்து கஸ்டப்பட்டு பாடசாலைக் கல்வியைக் கனவுடன் கற்ற போதிலும் தொடர்ந்தும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை சிரேஸ்ட மாணவர்களது மனித உரிமை மீறல்களால் தொடர முடியவில்லையே தான் கண்ட கனவு வீணாகியுள்ளதாக வேதனையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த யுத்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பகுதியில் வாழ்ந்து பல்வேறுபட்ட வளப்பற்றாக்குறைகளுடன் பல கஸ்டங்களை எதிர்நோக்கி கல்வி கற்றவர் என்பதும், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்து அனைத்தையும் இழந்து கஸ்டப்பட்டு அவலங்களை எதிர்நோக்கிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களின் அடித்துத் துன்புறுத்தல் தாங்க முடியாது ஏன் எனக்கு அடிக்கிறியள்? நான் என்ன குற்றம் செய்தேன் என்று வினவிய போது திருப்பிக் கதைக்காதை எனக்கூறி மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளதாகவும், வீதியில் வைத்து அவமானப்படுத்தியுள்ளதாகவும் தனது முகநூலில் இம்மாணவன் ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார்.
மற்றும் சிரேஸ்ட மாணவர்கள் சிலரால் இம்மாணவனது முகநூல் போன்று இன்னொரு முகநூலை உருவாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவனது ஒழுக்கத்திற்குப் பங்கம் ஏற்படும் வகையில் சில பதிவுகள் இடப்பட்டுள்ளது.
மேற்படி மாணவனை பல தடவைகள் தாக்கி வன்கொடுமைப்படுத்தியுள்ளார்கள். அதனால் யாழ்.போதனா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளார்.
யுத்த காலம் உட்பட தற்போது வரை ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களே யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர்களை மிருகத்தனமாகத் தாக்கி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்மாணவன் மீது வதை புரிந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பல்கலைக்கழக மாணவர்களைப் பாதுகாக்க உரிய பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்வருவதுடன். பாதுகாப்புடன் தனது பட்டப்படிப்பை மேற்கொள்ள உயர்கல்வி அமைச்சு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் கால் வைக்கும்போது நான் கண்ட கனவுகள் இலட்சியப் பாதைகள் அனைத்தும் என் கண்முன்னே வந்தது! அவை அனைத்தும் வந்த சில நொடிகளில் என் கன்னத்தில் இடி விழுந்தது போன்று சத்தம். யார் என்று பார்த்தால் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களாம் அடித்ததற்கும் காரணம் எதுவும் சொல்லாது நகர்ந்து சென்றார்கள் என பாதிக்கப்பட்ட மாணவன் கண்ணீருடன் பதிலளித்துள்ளார்.
இவை அனைத்திற்கும் மேலாக பகிடிவதை என்னும் போர்வையில் தாங்கள் தங்கும் அறைகளில் எங்களை கூட்டிச்சென்று இரக்கம் இன்றி தாக்குகின்றனர்.
எனினும் பல்கலைக்கழகம் சென்றால் எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று எனக்கே தோன்றுகின்றது. எனது கனவுகள் அனைத்தும் புதைந்தது பகிடிவதையால் பட்டப்படிப்பும் இடையில்முற்றுப்பெற்றது. எனவும் தெரிவித்துள்ளார்.
புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு கோடிரூபா கடன் வழக்குகின்றது இலங்கை அரசு!!
மக்களை வலுவூட்டி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை வலுப்படுத்துவதற்காக
அனைவரினதும் தேவைகளை நிறைவேற்றும் நோக்கிலான சம கால அரசாங்கத்தின் வரவு
செலவுத் திட்டத்தை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் 2
மணிக்கு சமர்பிக்கப்பட்டது.
சுதந்திர இலங்கையின் 73 ஆவது வரவு செலவுத் – திட்டத்தை, நாட்டின் 24 ஆவது நிதியமைச்சர் என்ற ரீதியில் மங்கள சமரவீர சமர்ப்பிக்கின்றார். நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிக்கும் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வர்த்தக மற்றும் ஆளணி வளங்களை வலுப்படுத்தும் நோக்கில் இது சமர்ப்பிக்கப்படுகின்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை மேலும் வலுவூட்டுவது இதன் நோக்கமாகும்.
இதன்போது வரவு செலவத்தித்திட்டத்திற்கான தொடக்க உரையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கௌரவ சபாநாயகர் அவர்களே, எனது இரண்டாவது வரவு செலவுத்திட்டத்தினை இச் சபைக்கு சமர்ப்பிப்பதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
2018 இன் இறுதியில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலைமை முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் பொருளாதாரமானது உறுதிப்படுத்தப்பட்டு வளர்ச்சியை நோக்கி நகர்வதினை நாம் காணலாம் என்பதனை இச்சபைக்குத் தெரிவித்துக் கொள்வதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையின் சுதந்திரத்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில் மிகவும் இருண்ட 52 நாட்களின் பின்னர் ஸ்திரநிலைமையினை மீண்டும் அடைந்து கொள்வதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டியேற்பட்டது.
தொடர்ச்சியான பல வருடங்களாக ஏற்பட்ட பல வரட்சியினால் கிராமிய வருமானம் வீழ்ச்சியடைந்து முழுப் பொருளாதாரமும் பாதிப்படைந்த நிலையில் 2018 ஒக்டோபர் 26 ஆந் திகதி இடம் பெற்ற நிகழ்வு பொருளாதாரத்தினை மேலும் மோசமாகப் பாதித்தது. உலக எண்ணெய் விலை இரட்டிப்பாகியதுடன் ஐக்கிய அமெரிக்க பெடரல் ரிசேவ் ஆனது வட்டி வீதங்களை மிக விரைவில் அதிகரித்தது. இவ்வாறான உள்நாட்டு வெளிநாட்டு சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்த அதே வேளை எமது அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மையினையும் ஏற்படுத்தியுள்ளது.
2018 ஒக்டோபர் இறுதியிலிருந்து உலக எண்ணெய் விலையானது பாரியளவு வீழ்ச்சியடைந்திருந்ததுடன் ஐக்கிய அமெரிக்க பெடரல் ரிசேவ் ஆனது குறைந்த வட்டி வீதங்களுக்கான சமிக்ஞையினைக் காட்டியதுடன் நுகர்வானது பழைய நிலைமைக்குத் திரும்பியது. இந்நிலைமையினால் இலங்கை பெற்றுக் கொள்ளமுடியுமாகவிருந்த பொருளாதார வளர்ச்சியினை 2019 வரையில் அனுபவிக்க முடியாது போனது. துரதிஷ்டவசமாக, நாம் அரசியல் சதியொன்றிற்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதால் மேற்குறித்த நன்மைகளின் விளைவுகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பினை இழந்தோம்.
இலங்கையின் மீதான நம்பிக்கை இழந்ததன் விளைவாக, அந்த 52 நாட்களுக்குள் எமது கடன் மற்றும் பங்குச் சந்தையிலிருந்து மூலதன வெளியேற்றம் பாரியளவு இடம்பெற்றதுடன் மிகவும் கடினமான உழைப்பின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட எமது வெளிநாட்டு ஒதுக்குகளிலிருந்து பல பில்லியன் டொலர்களை இழக்க வேண்டியேற்பட்டது. இக்காலப்பகுதியல், ஏனைய வளர்ந்துவரும் சந்தைகளின் நாணயங்கள் மதிப்பேற்றமடைந்த அதேவேளை, எமது நாணயத ;தின் பெறுமதியானது வரலாற்றில் மிகக் குறைந்த மட்டத்திலான வீழ்ச்சியினை பதிவுசெய்தது.
இலங்கையின் கடன் தரப்படுத்தலானது கீழ் மட்டத்திற்குத் தள்ளப்பட்டதன் விளைவாக எமது வெளிநாட்டுக் கடன் பெறுகைச் செலவினம் இரட்டை இலக்க மட்டத்திற்கு அதிகரித்துள்ளது. 2019 இல் வெளிநாட்டுப் படுகடன் மீள் கொடுப்பனவாக 5.9 பில்லியன் ஐ.அ. டொலரினை மீள் நிதியளிக்க வேண்டியிருப்பதனால் மிகவும் சாதகமற்ற தன்மை உருவாகியுள்ளது. இலங்கை சிறந்த பிரயாணம் செய்யக்கூடிய இடமாக ´லோன்லி பிலனற்´ சஞ்சிகையினால் தரப்படுத்தப்பட்டதன் பின்னரும் கூட, அப்போது காணப்பட்ட அரசியல் நிலமையின் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகையானது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையின் நிவர்த்தி செய்யும் பொருட்டு புதிய பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நிலைமை இவ்வாறிருக்க, 2018 டிசெம்பர் 17 ஆம் திகதி நாம் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தோம். எமது வெளிநாட்டுத்துறைக் காரணிகளுக்கு ஏற்பட்ட சேதத்தினை நாம் தற்பொழுது சீர்படுத்தியுள்ளதுடன் சந்தைகள் கடந்த இரண்டு மாதங்களில் நம்பிக்கை தரக்கூடிய வகையில் மீள் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இன்று எமது வெளிநாட்டுக் கடன் பெறுகை செலவினமானது 200 அடிப்படை புள்ளிகளுக்கு மேலாக வீழ்ச்சியடைந்துள்ளது.
எமது பொருளாதாரத்தினை நோக்கி வெளிநாட்டு மூலதனமானது நகர்ந்துள்ள அதேவேளை சனவரியிலிருந்து அரசாங்க பிணையங்கள் மீது ரூபா 3,400 மில்லியன் வெளிநாட்டு நிதியானது உட்பாய்ச்சப்பட்டுள்ளதுடன் இன்றுவரை ரூபாவானது 1.5 சதவீதத்தினால் மதிப்பேற்றம் அடைந்துள்ளது.
எனவே, அரசியல் சதியினால் ஏற்பட்ட பல்வேறுபட்ட பாதிப்புக்களை நிவர்த்திசெய்ய வேண்டியுள்ளதுடன், பொருளாதாரம் மீண்டும் ஸ்திரப்படுத்தப்பட வேண்டியுள்ளது. வரவு செலவுத்திட்ட உரை 2019 ´என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா – மக்களை வலுவூட்டலும் வறியோரைப் பராமரித்தலும்´ பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொண்ட பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான வாய்ப்பினை தற்பொழுது நாம் பெற்றுள்ளோம்.
அரசிறை முகாமைத்துவம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றது. ஐந்து தசாப்தங்களில் முதல் முறையாக 2017 இல் ஆரம்ப மிகையினை நாம் அடைந்துள்ளதுடன், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீத வளர்ச்சியாகும். 2015 இல் காணப்பட்ட -2.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2018 இல் இது பாரியதொரு முன்னேற்றமாகும். பிரதான உலக நுகர்வுப் பொருட்களின் விலைகள் அதிகரித்த போதிலும் பணவீக்கமானது கட்டுப்பாட்டுக்குள் முகாமை செய்யப்பட்டுள்ளது. 2017 இல் என்றுமில்லாத சிறந்த ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டினை நாம் அடைந்துள்ளதுடன் 2018 இல் அதற்கான உத்வேகம் அதிகரித்துள்ளது. இந்நிலைமை பொருளாதாரத்தினை பாரிய வெளிநாட்டு உட்பாய்ச்சலினை நோக்கி மீள் ஒருமுகப்படுத்துகின்ற எமது அரசாங்கத்தின் நோக்கத்துடன் இணைந்ததாகக் காணப்படுகின்றது.
கௌரவ சபாநாயகர் அவர்களே, 2015 ஆம் ஆண்டில் நாம் எச்சந்தர்ப்பத்திலும் வெடித்துச் சிதரக்கூடிய குண்டைப்போன்ற பொருளாதாரமொன்றினையே அனந்தரமாகப் பெற்றோம். எவ்வாறாயினும் நாம் வெற்றிகரமாக ஸ்திரத் தன்மையினையும் மீள் சமநிலையினையும் அடைந்துள்ளோம். முன்னைய அரசாங்கமானது படுகடனை மீளச்செலுத்துவதற்கான எவ்வித நியாயமான திட்டமும் இல்லாது செலவு மிக்க வெளிநாட்டுப் கடன்கள் மூலம் வீண்விரையம் மிக்க செலவினங்களை செய்துகொண்டிருந்தது. 2014 இல் வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருந்ததுடன் ஏற்றுமதியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதமாக சரிவடைந்து காணப்பட்டது. இது இரண்டு தசாப்த காலத்தில் ஏற்பட்ட பின்னடைவாகும். விசேடமாக 2000 ஆம் ஆண்டில் வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாகக் காணப்பட்டதுடன் ஏற்றுமதிகள் 30 சதவீதமாக இருந்தது. இது பொருளாதாரமானது ஸ்திரமற்ற நிலையை அடைந்து சிதைவடைந்ததென்பதை காண்பிக்கின்றது.
இந்த அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியானது தனியார் தொழில் முயற்சிகளினால் வழிப்படுத்தப்படுகின்றது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. இதுவே, முன்னைய நீல மற்றும் பசுமை வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ´என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா´ எண்ணக்கருவாகும். எவ்வாறாயினும், நியாயமான சந்தையே இலங்கையின் வர்த்தக மற்றும் வாணிபத்தின் உயிரோட்டமாகும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபார தொழில் முயற்சிகள் மற்றும் சா்வதேச மட்டத்தில் போட்டியிடக் கூடிய இலங்கை கம்பனிகளின் வளர்ச்சிக்காக தனது புத்திக் கூர்மையினை பயன்படுத்தும் உண்மையான தொழில் முயற்சியாளரையே தனியார் தொழில் முயற்சி என நான் நம்புகின்றேன்.
இதற்கு மாற்றமாக தனியார் துறையில் இன்னுமொரு வகுதியினர் காணப்படுகின்றனர். அவர்கள் போட்டித்தன்மை மற்றும் நியாயமான சந்தைகளுக்கு உடன்பாடற்ற ஊழல்களை ஊக்குவிக்கின்ற முன்னைய அரசாங்கத்துடன் தொடர்புவைத்து தம்மை வளர்த்துக் கொண்டவர்களாவர். இவர்கள் 20 மில்லியன் மக்களின் மீது செலவினத்தின் சுமையினை ஏற்படுத்தி மக்களின் வரித் தீர்வைகளின் மூலம் தம்மை வளர்த்துக் கொண்டவர்களாவர். மேலும் இன்றுவரை நாம் செலுத்திவருகின்ற அதிகரித்த செலவினங்களை ஏற்படுத்திய பெருமளவு அரசாங்க ஒப்பந்தங்களின் மூலம் நன்மை அடைந்தவர்களாவர். இவர்களில் சில சுயநலவாதிகள் தமது கம்பனிகள் மற்றும் தனிப்பட்ட கணக்குகளுக்கு அதிகளவான செல்வத்தினை இறைக்கின்ற சர்வாதிகாரத்தினை நோக்கிச் செல்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இக்குழுவினர் தனியார் துறையில் சிறியதொரு வகுதியாயினும் அதிகாரமும் செல்வாக்கும் மிக்கவர்களாவர். பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாக நாம் காண வேண்டிய தனியார் துறை இதுவல்ல. ஆனால், இவை கடந்த கால ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற எச்சங்களாகும்.
நாம் தனியார் தொழில் முயற்சிகளின் அடிப்படை விதிகளை பின்பற்றுகின்ற சிறந்த சந்தை தொழிற்படுத்தலில் வெற்றியடையக்கூடிய புதிய நிறுவனங்களை உருவாக்குகின்றோம். எமது நாட்டின் அபிவிருத்தி மற்றும் நவீன மயப்படுத்தலினை தொடர்ந்து பின்னடையச் செய்கின்ற பாதுகாப்புச் சிந்தனைகளிலிருந்து விடுபட்ட தனியார் துறையொன்று இலங்கைக்குத் தேவை. பொருளாதார தாராளமயமாக்கல், பாதுகாப்பு வலையமைப்புக்கான ஆதரவளிப்பு மற்றும் சந்தை நெருக்கடிகளை நீக்குவதற்கான அரச தலையீடு மற்றும் சமூக நீதியினை உறுதிப்படுத்தல் என்பவற்றினை கடந்த வருட வரவு செலவுத்திட்டத்தில் நான் சமர்ப்பித்தேன். இந்த வேலைச்சட்டகத்தினை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக அதன் பிரதான காரணிகளை வலுப்படுத்துவோம்.
தாராளப் பொருளாதாரத்தினை நோக்கிய எமது தீர்மானங்கள் என்றுமில்லாதவாறு விரைவானதாகும். இதன் முடிவாக துணைத் தீர்வைகளை ஒழிப்பதுடன் வர்த்தக தடைகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம் அதேவேளை, போட்டித்தன்மை சவால்களை எதிர்கொள்வதில் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு சட்டவாக்கத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் வர்த்தக மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தினை உருவாக்கலுடன் பாதுகாப்பான ஏற்பாடுகளை நாம் முன்னெடுப்போம்.
சமூக உட்கட்டமைப்பு மற்றும் சமூக பாதுகாப்பு வலையமைப்பில் நாம் மேலும் முதலீடு செய்யவுள்ளோம். கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிக நிதி வழங்கும் அதேவேளை அவற்றின் தரம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். உபாய ரீதியாகவும் வினைத்திறனிலும் வீழ்ச்சிப் போக்கினைக் கொண்டுள்ள எமது சமூகப் பாதுகாப்பு வலையமைப்பினை மீளெழுச்சி பெறச் செய்வதற்கான நேரம் இதுவாகும். எமது கவனமானது, பயனாளிகளை படிப்படியாக தன்னிறைவு பெற்ற வலுவூட்டப்பட்ட பிரசைகளாக மாற்றுவதனை நோக்கிச் செலுத்தப்பட வேண்டியுள்ளது. எமது பிரஜைகளை வலுவூட்டுவது எமது அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும். இது அரசியல், சமூக பொருளாதார வலுவூட்டல் என்பவற்றின் ஊடாக இடம்பெறும். ´என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா – மக்களை வலுவூட்டல்´ என்ற இவ்வருட வரவு செலவுத்திட்டத் தொனிப்பொருளானது, எமது மக்கள் தாமாகவே முன்னேற்றப் பாதையில் சென்று நாட்டினை வளமடையச் செய்யும் வகையில் அவர்களுக்கான உதவியை வழங்குகின்ற அதேவேளை, சமூகத்தில் காணப்படும் வறிய மற்றும் பலவீனமான மக்களை நிலைபேறான மற்றும் இலக்கிடப்பட்ட சமூகப் பாதுகாப்பு வலையமைப்பினூடாக பாதுகாப்பதுமாகும் என நிதி அமைச்சர் தனது வரவு செலவு திட்டத்திற்கு முன்னராக தொடக்க உரையில் தெரிவித்திருந்தார்.
பின்னர் வரவு செலவு திட்டம் தொடர்பான தீர்மானங்களை அவர் பாராளுமன்றத்தில் சமர்பித்திரந்தார்.
குறித்த தீர்மானங்கள் உள்ளடங்கிய அறிக்கை பின்வருமாறு,
சுதந்திர இலங்கையின் 73 ஆவது வரவு செலவுத் – திட்டத்தை, நாட்டின் 24 ஆவது நிதியமைச்சர் என்ற ரீதியில் மங்கள சமரவீர சமர்ப்பிக்கின்றார். நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிக்கும் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வர்த்தக மற்றும் ஆளணி வளங்களை வலுப்படுத்தும் நோக்கில் இது சமர்ப்பிக்கப்படுகின்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை மேலும் வலுவூட்டுவது இதன் நோக்கமாகும்.
இதன்போது வரவு செலவத்தித்திட்டத்திற்கான தொடக்க உரையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கௌரவ சபாநாயகர் அவர்களே, எனது இரண்டாவது வரவு செலவுத்திட்டத்தினை இச் சபைக்கு சமர்ப்பிப்பதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
2018 இன் இறுதியில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலைமை முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் பொருளாதாரமானது உறுதிப்படுத்தப்பட்டு வளர்ச்சியை நோக்கி நகர்வதினை நாம் காணலாம் என்பதனை இச்சபைக்குத் தெரிவித்துக் கொள்வதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையின் சுதந்திரத்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில் மிகவும் இருண்ட 52 நாட்களின் பின்னர் ஸ்திரநிலைமையினை மீண்டும் அடைந்து கொள்வதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டியேற்பட்டது.
தொடர்ச்சியான பல வருடங்களாக ஏற்பட்ட பல வரட்சியினால் கிராமிய வருமானம் வீழ்ச்சியடைந்து முழுப் பொருளாதாரமும் பாதிப்படைந்த நிலையில் 2018 ஒக்டோபர் 26 ஆந் திகதி இடம் பெற்ற நிகழ்வு பொருளாதாரத்தினை மேலும் மோசமாகப் பாதித்தது. உலக எண்ணெய் விலை இரட்டிப்பாகியதுடன் ஐக்கிய அமெரிக்க பெடரல் ரிசேவ் ஆனது வட்டி வீதங்களை மிக விரைவில் அதிகரித்தது. இவ்வாறான உள்நாட்டு வெளிநாட்டு சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்த அதே வேளை எமது அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மையினையும் ஏற்படுத்தியுள்ளது.
2018 ஒக்டோபர் இறுதியிலிருந்து உலக எண்ணெய் விலையானது பாரியளவு வீழ்ச்சியடைந்திருந்ததுடன் ஐக்கிய அமெரிக்க பெடரல் ரிசேவ் ஆனது குறைந்த வட்டி வீதங்களுக்கான சமிக்ஞையினைக் காட்டியதுடன் நுகர்வானது பழைய நிலைமைக்குத் திரும்பியது. இந்நிலைமையினால் இலங்கை பெற்றுக் கொள்ளமுடியுமாகவிருந்த பொருளாதார வளர்ச்சியினை 2019 வரையில் அனுபவிக்க முடியாது போனது. துரதிஷ்டவசமாக, நாம் அரசியல் சதியொன்றிற்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதால் மேற்குறித்த நன்மைகளின் விளைவுகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பினை இழந்தோம்.
இலங்கையின் மீதான நம்பிக்கை இழந்ததன் விளைவாக, அந்த 52 நாட்களுக்குள் எமது கடன் மற்றும் பங்குச் சந்தையிலிருந்து மூலதன வெளியேற்றம் பாரியளவு இடம்பெற்றதுடன் மிகவும் கடினமான உழைப்பின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட எமது வெளிநாட்டு ஒதுக்குகளிலிருந்து பல பில்லியன் டொலர்களை இழக்க வேண்டியேற்பட்டது. இக்காலப்பகுதியல், ஏனைய வளர்ந்துவரும் சந்தைகளின் நாணயங்கள் மதிப்பேற்றமடைந்த அதேவேளை, எமது நாணயத ;தின் பெறுமதியானது வரலாற்றில் மிகக் குறைந்த மட்டத்திலான வீழ்ச்சியினை பதிவுசெய்தது.
இலங்கையின் கடன் தரப்படுத்தலானது கீழ் மட்டத்திற்குத் தள்ளப்பட்டதன் விளைவாக எமது வெளிநாட்டுக் கடன் பெறுகைச் செலவினம் இரட்டை இலக்க மட்டத்திற்கு அதிகரித்துள்ளது. 2019 இல் வெளிநாட்டுப் படுகடன் மீள் கொடுப்பனவாக 5.9 பில்லியன் ஐ.அ. டொலரினை மீள் நிதியளிக்க வேண்டியிருப்பதனால் மிகவும் சாதகமற்ற தன்மை உருவாகியுள்ளது. இலங்கை சிறந்த பிரயாணம் செய்யக்கூடிய இடமாக ´லோன்லி பிலனற்´ சஞ்சிகையினால் தரப்படுத்தப்பட்டதன் பின்னரும் கூட, அப்போது காணப்பட்ட அரசியல் நிலமையின் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகையானது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையின் நிவர்த்தி செய்யும் பொருட்டு புதிய பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நிலைமை இவ்வாறிருக்க, 2018 டிசெம்பர் 17 ஆம் திகதி நாம் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தோம். எமது வெளிநாட்டுத்துறைக் காரணிகளுக்கு ஏற்பட்ட சேதத்தினை நாம் தற்பொழுது சீர்படுத்தியுள்ளதுடன் சந்தைகள் கடந்த இரண்டு மாதங்களில் நம்பிக்கை தரக்கூடிய வகையில் மீள் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இன்று எமது வெளிநாட்டுக் கடன் பெறுகை செலவினமானது 200 அடிப்படை புள்ளிகளுக்கு மேலாக வீழ்ச்சியடைந்துள்ளது.
எமது பொருளாதாரத்தினை நோக்கி வெளிநாட்டு மூலதனமானது நகர்ந்துள்ள அதேவேளை சனவரியிலிருந்து அரசாங்க பிணையங்கள் மீது ரூபா 3,400 மில்லியன் வெளிநாட்டு நிதியானது உட்பாய்ச்சப்பட்டுள்ளதுடன் இன்றுவரை ரூபாவானது 1.5 சதவீதத்தினால் மதிப்பேற்றம் அடைந்துள்ளது.
எனவே, அரசியல் சதியினால் ஏற்பட்ட பல்வேறுபட்ட பாதிப்புக்களை நிவர்த்திசெய்ய வேண்டியுள்ளதுடன், பொருளாதாரம் மீண்டும் ஸ்திரப்படுத்தப்பட வேண்டியுள்ளது. வரவு செலவுத்திட்ட உரை 2019 ´என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா – மக்களை வலுவூட்டலும் வறியோரைப் பராமரித்தலும்´ பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொண்ட பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான வாய்ப்பினை தற்பொழுது நாம் பெற்றுள்ளோம்.
அரசிறை முகாமைத்துவம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றது. ஐந்து தசாப்தங்களில் முதல் முறையாக 2017 இல் ஆரம்ப மிகையினை நாம் அடைந்துள்ளதுடன், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீத வளர்ச்சியாகும். 2015 இல் காணப்பட்ட -2.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2018 இல் இது பாரியதொரு முன்னேற்றமாகும். பிரதான உலக நுகர்வுப் பொருட்களின் விலைகள் அதிகரித்த போதிலும் பணவீக்கமானது கட்டுப்பாட்டுக்குள் முகாமை செய்யப்பட்டுள்ளது. 2017 இல் என்றுமில்லாத சிறந்த ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டினை நாம் அடைந்துள்ளதுடன் 2018 இல் அதற்கான உத்வேகம் அதிகரித்துள்ளது. இந்நிலைமை பொருளாதாரத்தினை பாரிய வெளிநாட்டு உட்பாய்ச்சலினை நோக்கி மீள் ஒருமுகப்படுத்துகின்ற எமது அரசாங்கத்தின் நோக்கத்துடன் இணைந்ததாகக் காணப்படுகின்றது.
கௌரவ சபாநாயகர் அவர்களே, 2015 ஆம் ஆண்டில் நாம் எச்சந்தர்ப்பத்திலும் வெடித்துச் சிதரக்கூடிய குண்டைப்போன்ற பொருளாதாரமொன்றினையே அனந்தரமாகப் பெற்றோம். எவ்வாறாயினும் நாம் வெற்றிகரமாக ஸ்திரத் தன்மையினையும் மீள் சமநிலையினையும் அடைந்துள்ளோம். முன்னைய அரசாங்கமானது படுகடனை மீளச்செலுத்துவதற்கான எவ்வித நியாயமான திட்டமும் இல்லாது செலவு மிக்க வெளிநாட்டுப் கடன்கள் மூலம் வீண்விரையம் மிக்க செலவினங்களை செய்துகொண்டிருந்தது. 2014 இல் வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருந்ததுடன் ஏற்றுமதியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதமாக சரிவடைந்து காணப்பட்டது. இது இரண்டு தசாப்த காலத்தில் ஏற்பட்ட பின்னடைவாகும். விசேடமாக 2000 ஆம் ஆண்டில் வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாகக் காணப்பட்டதுடன் ஏற்றுமதிகள் 30 சதவீதமாக இருந்தது. இது பொருளாதாரமானது ஸ்திரமற்ற நிலையை அடைந்து சிதைவடைந்ததென்பதை காண்பிக்கின்றது.
இந்த அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியானது தனியார் தொழில் முயற்சிகளினால் வழிப்படுத்தப்படுகின்றது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. இதுவே, முன்னைய நீல மற்றும் பசுமை வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ´என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா´ எண்ணக்கருவாகும். எவ்வாறாயினும், நியாயமான சந்தையே இலங்கையின் வர்த்தக மற்றும் வாணிபத்தின் உயிரோட்டமாகும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபார தொழில் முயற்சிகள் மற்றும் சா்வதேச மட்டத்தில் போட்டியிடக் கூடிய இலங்கை கம்பனிகளின் வளர்ச்சிக்காக தனது புத்திக் கூர்மையினை பயன்படுத்தும் உண்மையான தொழில் முயற்சியாளரையே தனியார் தொழில் முயற்சி என நான் நம்புகின்றேன்.
இதற்கு மாற்றமாக தனியார் துறையில் இன்னுமொரு வகுதியினர் காணப்படுகின்றனர். அவர்கள் போட்டித்தன்மை மற்றும் நியாயமான சந்தைகளுக்கு உடன்பாடற்ற ஊழல்களை ஊக்குவிக்கின்ற முன்னைய அரசாங்கத்துடன் தொடர்புவைத்து தம்மை வளர்த்துக் கொண்டவர்களாவர். இவர்கள் 20 மில்லியன் மக்களின் மீது செலவினத்தின் சுமையினை ஏற்படுத்தி மக்களின் வரித் தீர்வைகளின் மூலம் தம்மை வளர்த்துக் கொண்டவர்களாவர். மேலும் இன்றுவரை நாம் செலுத்திவருகின்ற அதிகரித்த செலவினங்களை ஏற்படுத்திய பெருமளவு அரசாங்க ஒப்பந்தங்களின் மூலம் நன்மை அடைந்தவர்களாவர். இவர்களில் சில சுயநலவாதிகள் தமது கம்பனிகள் மற்றும் தனிப்பட்ட கணக்குகளுக்கு அதிகளவான செல்வத்தினை இறைக்கின்ற சர்வாதிகாரத்தினை நோக்கிச் செல்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இக்குழுவினர் தனியார் துறையில் சிறியதொரு வகுதியாயினும் அதிகாரமும் செல்வாக்கும் மிக்கவர்களாவர். பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாக நாம் காண வேண்டிய தனியார் துறை இதுவல்ல. ஆனால், இவை கடந்த கால ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற எச்சங்களாகும்.
நாம் தனியார் தொழில் முயற்சிகளின் அடிப்படை விதிகளை பின்பற்றுகின்ற சிறந்த சந்தை தொழிற்படுத்தலில் வெற்றியடையக்கூடிய புதிய நிறுவனங்களை உருவாக்குகின்றோம். எமது நாட்டின் அபிவிருத்தி மற்றும் நவீன மயப்படுத்தலினை தொடர்ந்து பின்னடையச் செய்கின்ற பாதுகாப்புச் சிந்தனைகளிலிருந்து விடுபட்ட தனியார் துறையொன்று இலங்கைக்குத் தேவை. பொருளாதார தாராளமயமாக்கல், பாதுகாப்பு வலையமைப்புக்கான ஆதரவளிப்பு மற்றும் சந்தை நெருக்கடிகளை நீக்குவதற்கான அரச தலையீடு மற்றும் சமூக நீதியினை உறுதிப்படுத்தல் என்பவற்றினை கடந்த வருட வரவு செலவுத்திட்டத்தில் நான் சமர்ப்பித்தேன். இந்த வேலைச்சட்டகத்தினை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக அதன் பிரதான காரணிகளை வலுப்படுத்துவோம்.
தாராளப் பொருளாதாரத்தினை நோக்கிய எமது தீர்மானங்கள் என்றுமில்லாதவாறு விரைவானதாகும். இதன் முடிவாக துணைத் தீர்வைகளை ஒழிப்பதுடன் வர்த்தக தடைகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம் அதேவேளை, போட்டித்தன்மை சவால்களை எதிர்கொள்வதில் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு சட்டவாக்கத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் வர்த்தக மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தினை உருவாக்கலுடன் பாதுகாப்பான ஏற்பாடுகளை நாம் முன்னெடுப்போம்.
சமூக உட்கட்டமைப்பு மற்றும் சமூக பாதுகாப்பு வலையமைப்பில் நாம் மேலும் முதலீடு செய்யவுள்ளோம். கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிக நிதி வழங்கும் அதேவேளை அவற்றின் தரம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். உபாய ரீதியாகவும் வினைத்திறனிலும் வீழ்ச்சிப் போக்கினைக் கொண்டுள்ள எமது சமூகப் பாதுகாப்பு வலையமைப்பினை மீளெழுச்சி பெறச் செய்வதற்கான நேரம் இதுவாகும். எமது கவனமானது, பயனாளிகளை படிப்படியாக தன்னிறைவு பெற்ற வலுவூட்டப்பட்ட பிரசைகளாக மாற்றுவதனை நோக்கிச் செலுத்தப்பட வேண்டியுள்ளது. எமது பிரஜைகளை வலுவூட்டுவது எமது அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும். இது அரசியல், சமூக பொருளாதார வலுவூட்டல் என்பவற்றின் ஊடாக இடம்பெறும். ´என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா – மக்களை வலுவூட்டல்´ என்ற இவ்வருட வரவு செலவுத்திட்டத் தொனிப்பொருளானது, எமது மக்கள் தாமாகவே முன்னேற்றப் பாதையில் சென்று நாட்டினை வளமடையச் செய்யும் வகையில் அவர்களுக்கான உதவியை வழங்குகின்ற அதேவேளை, சமூகத்தில் காணப்படும் வறிய மற்றும் பலவீனமான மக்களை நிலைபேறான மற்றும் இலக்கிடப்பட்ட சமூகப் பாதுகாப்பு வலையமைப்பினூடாக பாதுகாப்பதுமாகும் என நிதி அமைச்சர் தனது வரவு செலவு திட்டத்திற்கு முன்னராக தொடக்க உரையில் தெரிவித்திருந்தார்.
பின்னர் வரவு செலவு திட்டம் தொடர்பான தீர்மானங்களை அவர் பாராளுமன்றத்தில் சமர்பித்திரந்தார்.
குறித்த தீர்மானங்கள் உள்ளடங்கிய அறிக்கை பின்வருமாறு,
4.10 PM – சிகரட் மற்றும் பீடியின் விலை அதிகரிப்பு
4.05 PM -கொழும்பை அழகுபடுத்தும் திட்டத்திற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
3.46 PM – அரச ஊழியர்களின் சம்பள உயர்விற்காக 40 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. ஜூலை முதலாம் திகதி முதல் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு.
3.43 PM – ஓய்வூதிய முரண்பாடுகளை சரி செய்ய 12 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
3.41 PM – இலகு ரயில் திட்டத்திற்கு 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
3.39 PM – இலங்கை போக்குவரத்து சேவைக்கு 250 புதிய பஸ்கள், இத்திட்டத்திற்கு 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
3.36 PM – பொது போக்குவரத்து சேவை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் பஸ் சேவை அபிவிருத்தி திட்டம்..
3.35 PM – போகம்பரை சிறைச்சாலை பொது இடமாக அபிவிருத்தி செய்ய 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
3.34 PM – மாத்தளை – பெர்னார்ட் அலுவிஹாரே விளையாட்டரங்கும் கொலன்னாவை மல்லமராச்சி விளையாட்டுத் திடலும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
3.32 PM – கல்முனை, வாழைச்சேனை, தலைமன்னார் உள்ளிட்ட நகரங்களின் அபிவிருத்திக்காக மேலும் பல ஒத்துழைப்புகளை வழங்குதல்
3.30 PM – காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வரவு வெசவுத் திட்டத்தின் ஊடாக விசேட கவனம்
3.28 PM – தேசிய தொழில் தகுதியுடனான (NVQ) தொழிற்பயிற்சித் திட்டங்களை இலங்கை இராணுவம் நடத்தவுள்ளது.
3.25 PM – சுவசெரிய போக்குவரத்து சேவைக்காக 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 300 தரிப்பிடங்கள் அபிவிருத்தி
3.22 PM – க.பொ.த உயர் தரத்தில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு வௌிநாட்டில் பயில நிதியுதவி வழங்கப்படும்
3.20 PM – தமிழ் மொழி ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
3.17 PM – பல்கலைக்கழக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 25000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
3.016 PM – 400,000 டொலர்களுக்கும் மேல் முதலீடு செய்த வௌிநாட்டவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு குடியிருப்பு விசா
3.16 PM – பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 32000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
3.14 PM – பொது பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெறும் மாணவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் கற்பதற்கான வாய்ப்பு..
3.12 PM – வெளிநாட்டு மாணவ சுற்றலாப் பயணிகளுக்கான நுழைவுச் சீட்டு கட்டணம் 50% குறைப்பு
3.09 PM – SLTDA இல் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மாத்திரம் 2020 ஏப்ரல் முதலாம் திகதி முதல் online பதிவுகளை மேற்கொள்ள முடியும்
3.07 PM – பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு வௌிநாட்டு நாணய பற்றுச்சீட்டுகளுக்கு NBT நீக்கம்.
3.05 PM – பிங்கிரிய அபிவிருத்தி வலயத்திற்கு ரூபா 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
3.02 PM – இயந்திரங்களுக்கான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் வரி விதிப்பு 2.5% குறைக்கப்படும்.
3.02 PM – தேசிய ஏற்றுமதி மூலோபாயத்திற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
2.59 PM – புதிதாக திருமணமான தம்பதியினரக்கு 6% வீத வட்டி அடிப்படையில் HOME SWEET HOME விசேட கடன் திட்டம் 25 ஆண்டுகளில் செலுத்தப்பட வேண்டும்.
2.52 PM – சிறுநீரக நோயாளர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கு 1,480 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
2.52 PM – போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்காக வீரவில மற்றும் அபேபுஸ்ஸ ஆகிய பகுதிகளில் சீர்திருத்த நிலையங்கள்
2.48 PM -வேலைத்தளத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 3 மாதங்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும்.
2.48 PM -விசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை 3000 ரூபாவிலிருந்து 5000 ரூபா வரை அதிகரிப்பு
2.45 PM – கழிவறை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க 4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
2.41 PM – எமது அரசாங்கக் காலம் முடிவுறுவதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை பணிகளை நிறைவு செய்வோம்.
2.37 PM – பருத்தித்துறை மற்றும் பேசாலையில் மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதற்கு 1300 மில்லியன் ரூபா
2.35 PM – பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார்.
2.33 PM – இலங்கை கறுவாப்பட்டை பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. ஏற்றுமதிக்கு முன்னதாக அனைத்து பொருட்களின் தரமும் பரிசோதிக்கப்படும். கறுவாப்பாட்டை பயிற்சி நிலையத்திற்கு 75 மில்லியன் ரூபாஒதுக்கீடு
2.30 PM – இறப்பர் உற்பத்தி அபிவிருத்திக்காக 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
2.29 PM – இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைகள் வழங்குவதற்கு Enterprise Sri Lanka-வினை விரிவுபடுத்த வேண்டும்.
2.28 PM – சிறிய ட்ரக் வாகனங்களுக்கான வரியை குறைக்க திட்டம்
2.24 PM – மத வழிப்பாட்டுத் ஸ்தளங்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் தொகையானது 5 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பு
2.22 PM – கம்பெரலிய அபிவிருத்தித் திட்டத்திற்காக 48.000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
2.21 PM – உலக சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து காணப்பட்ட போதும், எமது பணவீக்கத்தை 4 வீதமாகப் பேண முடிந்தது.
2.16 PM – 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் பின்னர் எண்ணெய் விலை குறைவடைந்தது. அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக அதன் பயனை அனுபவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
2.15 PM – அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 1.5 வீதத்தால் தற்போது வலுவடைந்து வருவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
2.07 PM – நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் வரவு செலவுத்திட்ட உரை சபையில் வாசிக்கப்படுகின்றது.
2.04 PM – சபாநாயகரின் உரை ஆரம்பமானது
இலங்கை அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு!!
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் விஷேட கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றதுடன் இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டதாக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமான இந்த கூட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, மக்களை வலுவூட்டி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை வலுப்படுத்துவதற்காக அனைவரினதும் தேவைகளை நிறைவேற்றும் நோக்கிலான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.
சுதந்திர இலங்கையின் 73 ஆவது வரவு செலவுத் – திட்டத்தை, நாட்டின் 24 ஆவது நிதியமைச்சர் என்ற ரீதியில் மங்கள சமரவீர சமர்ப்பிக்கின்றார். நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிக்கும் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வர்த்தக மற்றும் ஆளணி வளங்களை வலுப்படுத்தும் நோக்கில் இது சமர்ப்பிக்கப்படுகின்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை மேலும் வலுவூட்டுவது இதன் நோக்கமாகும்.
2019 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்தச் செலவினம் 4,550 பில்லியன் ரூபாவாகும். மொத்த வருமானம் 2,400 பில்லியன் ரூபாவென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைய வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகை மொத்தத் தேசிய உற்பத்தியில் 4 தசம் 5 சதவீதமாகும்.
2020 ஆம் ஆண்டில் வரவு செலவுத் திட்டத்தின் துண்டும் விழும் தொகையில் 3 தசம் 5 சதவீதம் வரை குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம் நகர்ந்து வருகின்றது. 2015 ஆம் ஆண்டில் துண்டு விழும் தொகை 7 தசம் 6 சதவீதமாக இருந்ததோடு, 2018 ஆம் ஆண்டில் 5 தசம் 3 சதவீதம் வரை குறைவடைந்தது.
இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 4 தசம் 5 சதவீதம் வரை குறைக்கப்பட இருக்கின்றது. வரவு செலவுத் கடன் சேவைக்கான தொகையை 2,220 பில்லியன் ரூபாவில் இருந்து 2,079 பில்லியன் ரூபா வரை குறைத்துக் கொள்வது இலக்காகும்.
கடந்த வருடம் (2018) ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த வரவு - செலவுத் திட்டம் அன்று ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக தடைப்பட்டது. நெருக்கடி நிலைக்கு தீர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் புதிய வரவு - செலவுத்திட்டத்தை தயாரித்து இன்று நிதியமைச்சர் சமர்ப்பிக்கின்றார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் புதன்கிழமை முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றது. 12 ஆம் திகதி பிற்பகல் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றது. ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றதுடன் இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டதாக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமான இந்த கூட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, மக்களை வலுவூட்டி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை வலுப்படுத்துவதற்காக அனைவரினதும் தேவைகளை நிறைவேற்றும் நோக்கிலான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.
சுதந்திர இலங்கையின் 73 ஆவது வரவு செலவுத் – திட்டத்தை, நாட்டின் 24 ஆவது நிதியமைச்சர் என்ற ரீதியில் மங்கள சமரவீர சமர்ப்பிக்கின்றார். நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிக்கும் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வர்த்தக மற்றும் ஆளணி வளங்களை வலுப்படுத்தும் நோக்கில் இது சமர்ப்பிக்கப்படுகின்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை மேலும் வலுவூட்டுவது இதன் நோக்கமாகும்.
2019 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்தச் செலவினம் 4,550 பில்லியன் ரூபாவாகும். மொத்த வருமானம் 2,400 பில்லியன் ரூபாவென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைய வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகை மொத்தத் தேசிய உற்பத்தியில் 4 தசம் 5 சதவீதமாகும்.
2020 ஆம் ஆண்டில் வரவு செலவுத் திட்டத்தின் துண்டும் விழும் தொகையில் 3 தசம் 5 சதவீதம் வரை குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம் நகர்ந்து வருகின்றது. 2015 ஆம் ஆண்டில் துண்டு விழும் தொகை 7 தசம் 6 சதவீதமாக இருந்ததோடு, 2018 ஆம் ஆண்டில் 5 தசம் 3 சதவீதம் வரை குறைவடைந்தது.
இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 4 தசம் 5 சதவீதம் வரை குறைக்கப்பட இருக்கின்றது. வரவு செலவுத் கடன் சேவைக்கான தொகையை 2,220 பில்லியன் ரூபாவில் இருந்து 2,079 பில்லியன் ரூபா வரை குறைத்துக் கொள்வது இலக்காகும்.
கடந்த வருடம் (2018) ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த வரவு - செலவுத் திட்டம் அன்று ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக தடைப்பட்டது. நெருக்கடி நிலைக்கு தீர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் புதிய வரவு - செலவுத்திட்டத்தை தயாரித்து இன்று நிதியமைச்சர் சமர்ப்பிக்கின்றார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் புதன்கிழமை முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றது. 12 ஆம் திகதி பிற்பகல் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றது. ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
ஆவா காவாலிகளை பிரபலமாக்கும் ஊடகப் புறம்போக்குகள்!! செம்மணியில் நடந்தது என்ன?
யாழில் இருக்கும் படையினரின் துாண்டுதலில் போதைப்பொருளுக்கு அடிமையாகி தங்களை சினிமா ஹீரோக்கள் போல சித்தரித்துக் கொண்டு யாழில் திரியும் சில காவாலிகளை ஊடகங்களும் பொலிசாருமாகச் சேர்ந்து ஹீரோக்களாக்குகின்றார்கள் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஊடகங்கள் சிலவற்றி வந்த செய்தி இங்கு தரப்பட்டுள்ளது.
யாழ்.செம்மணி மற்றும் அதனை அண்டிய பகுதியிலுள்ள வீதிகளில் “ஆவா 001 இராஜ்ஜியம்” என எழுதப்பட்டுள்ளமை மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த பதத்தை எழுதிய பின்னணியில் விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கலாமென்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
யாழில்.ஆவா எனும் பெயரில் இயங்கும் குழுவொன்று வாள் வெட்டு சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக பொலிஸார் கூறி வருகின்றனர்.
அந்தவகையில் வாள் வெட்டுக்களில் ஈடுபட்டு வந்தவர்கள் எனவும் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் பல இளைஞர்கள் கைது செய்து, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
மேலும் அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் தற்போதும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு,குற்றச்செயல்களின் பின்னணியின் பாரிய சக்தி ஒன்று இருப்பது மக்கள் அனைவரும் அறிந்ததே.
இருந்தும் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை ஸ்ரீலங்கா பொலீசார் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினாலும் அவர்களை ஒருசில சட்டத்தரணிகள் பிணையில் எடுப்பதற்காக முந்தியடித்துக்கொண்டு இருக்கின்றதை மக்கள் அவதானித்துள்ளார்கள்.
ஆவா குழுவை யாழில் வைத்து இயக்குவதன் ஊடாக வடக்கில் தமிழ் மக்களை அடக்கி ஆழ ஸ்ரீலங்கா அரசு செயற்பட்டுக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக மக்களை என்றும் அச்சத்தில் வைத்திருப்பதையே ஸ்ரீலங்கா அரசும் படை புலனாய்வாளர்களும் அவர்களுக்கு பின்னால் இருந்து செயற்படும் அரசியல் வாதிகளும் விரும்பி வருகின்றார்கள் அதன் வெளிப்பாடாகே யாழில் இவ்வாறான குழுக்கள் குற்றச்செயல்களை செய்யவைத்து மக்களை அச்சத்திற்குள் கொண்டு செல்கின்றார்கள் இவர்களின் பின்னணியில் பாரிய சக்தி ஒன்று இயங்கிக்கொண்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்மக்களின் ஒற்றுமையினை சீர்குலைத்து படித்த சமூகத்தினையும் பணம் படைத்தவர்களையும் என்றும் அச்சத்திற்குள் வைத்திருக்கும் முயற்சிகள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
கிளிநொச்சயில் மனைவியுடன் கள்ளத் தொடர்பு!! வெளிநாட்டு கணவனால் கள்ளக்காதலன் கொலை!! (Photos)
வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கிளிநொச்சியில் வீடொன்றில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி உதயநகரில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
வவுனியாவைச் சேர்ந்த பிறேமரமணன் (வயது-32) என்ற நபரே கொலை செய்யப்பட்டார். அவரது உறவினர்கள் வந்த பின்னரே முழுமையான தகவல்களைப் பெறமுடியும் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்தலைவர் ஒருவர், தனது மனவியுடன் தொடர்பை வைத்திருந்தார் என்ற குறிப்பிட்டு அந்த நபரை வெட்டியுள்ளார்.
வெட்டுக்காயத்துக்குள்ளான நபர் மு.ப. 9 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என்று மு.ப. 10 மணிக்கு மருத்துவ அறிக்கையிடப்பட்டது.
அவரை வெட்டிய நபர் கிளிநொச்சிப் பொலிஸில் சரண்டைவார் என உறவினர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் CO-OP Insurance Company Limited காப்புறுதி முகாமையாளர் எனவும் பல பெண்களுடன் தொடர்புவைத்திருப்பர் எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிளிநொச்சி உதயநகரில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
வவுனியாவைச் சேர்ந்த பிறேமரமணன் (வயது-32) என்ற நபரே கொலை செய்யப்பட்டார். அவரது உறவினர்கள் வந்த பின்னரே முழுமையான தகவல்களைப் பெறமுடியும் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்தலைவர் ஒருவர், தனது மனவியுடன் தொடர்பை வைத்திருந்தார் என்ற குறிப்பிட்டு அந்த நபரை வெட்டியுள்ளார்.
வெட்டுக்காயத்துக்குள்ளான நபர் மு.ப. 9 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என்று மு.ப. 10 மணிக்கு மருத்துவ அறிக்கையிடப்பட்டது.
அவரை வெட்டிய நபர் கிளிநொச்சிப் பொலிஸில் சரண்டைவார் என உறவினர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் CO-OP Insurance Company Limited காப்புறுதி முகாமையாளர் எனவும் பல பெண்களுடன் தொடர்புவைத்திருப்பர் எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழில் பிடிக்கப்பட்ட 101 கிலோ நிறையான கலவாய் மீன்!!
நேற்று 04/03/2019 யாழ் பாசையூர் மீனவன் ஒருவரால் 101 kg எடையுடைய கலவாய் மீன் பிடிக்கப்பட்டு சந்தைக்கு கொண்டுவரப்பட்ட போது பதிவாகிய புகைப்படங்கள்.
பலமான கட்டமைப்புடன் கொழும்பில் இயங்கிய புலிகளை அழிக்க உதவியர்கள் இவர்கள்தான்!!
விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் கொழும்பில் பலமிக்க கட்டமைப்பைக் கொண்டிருந்தனர். அவர்களை அழிக்க புலனாய்வுத்துறையில் முஸ்லிம்கள் அதிகளவில் இணைந்து நாட்டுக்காகப் பாரியளவில் பங்காற்றியுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் உடுநுவர எலமல்தெனியவில் “எலிய” அமைப்பினால் தொழிலதிபர் ஏ.எல்.எம். பாரிஸின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்
கண்டி மாவட்டத்தின் சகல பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையான முஸ்லிம்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பராளுமன்ற உறுப்பினர்களான மகிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, அநுராத ஜயரட்ன, ஆனந்த அளுத்கமகே, திலும் அமுனுகம மற்றும் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர்,
நாட்டில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்படாமைக்குக் காரணம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் தமது வாக்குகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றமையாகும்.
சிங்கள, தமிழ் , முஸ்லிம் மக்கள் யாவரும் பொதுவான பிரச்சினைகளுக்குட்பட்டுள்ளனர். இது பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், வறுமை, வீடு, தொழில் முதலானவை சார்ந்த பிரச்சினைகளாகும். இவை தீர்க்கப்பட வேண்டும்.
இப்பிரச்சினைகள் சகல சமூகங்களுக்கும் பொதுவான பிரச்சினைகளாகும். இப்பிரச்சினைகளுக்கு காரணம் சிங்களவர்களும் முஸ்லிம்களும் தான் என்று தமிழ் அரசியல்வாதிகளும், தமிழர்களும் முஸ்லிம்களும் தான் காரணம் என்று சிங்கள அரசியல்வாதிகளும், சிங்களவர்களும் தமிழர்களும் என்று முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது மக்களிடம் கூறிவருகின்றனர். இந்த அரசியல் போக்கு சிறுபான்மை தமிழ், முஸ்லிம்களின் பிரச்சினைகளை அரசியல்மயப்படுத்தியுள்ளது.
இந்நாட்டு மக்களின் பிரச்சினைகள் எதுவித அரசியல் பேதமுமமின்றி தீர்க்கப்பட வேண்டும். இதில் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகளுள் வறுமை ஒழிப்பு மிக முக்கியமான பிரச்சினையாகும். இதற்காக சரியான பொருளாதாரக் கொள்கையின் கீழ் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது சகல இனத்தவர்களும் கெளரவமாக வாழும் நிலை உருவாகும்.
இந்நாட்டில் எதிர்காலத்தில் சகல இனத்தவர்களும் அச்சம், பீதியின்றி கௌரவமாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். மக்களின் மத சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாதாள குழுக்கள் கப்பம் பெறும் நிலையை இல்லாமலாக்குவோம்.
மகிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில், முப்பது வருட கொடிய பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இப்பயங்கரவாதத்தால் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் யாவரும் பாதிக்கப்பட்டிருந்தனர். மகிந்த ராஜபக் ஷ ஆட்சியில் பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தமை மக்கள் ஆணைக்கு மாற்றமான செயலல்ல.
மகிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தமையால் அரசியல்வாதிகளாலும் எதிரிகளாலும் நாம் இனவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டோம். நாம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்களாக காட்டப்பட்டோம். மகிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் யாவருக்கும் நன்மைகளை ஏற்படுத்தியது.
கொழும்பில் சேரிகளில் மக்கள் எதுவித வசதிகளற்ற நிலையில் சுகாதாரப் பிரச்சினைகளுடன் வாழ்கின்றனர். இந்நிலையை மாற்றியமைக்க வேண்டும். நாம் கொழும்பில் மாடிவீட்டுத் திட்டங்களை உருவாக்கி சேரிப்புற மக்களை குடியமர்த்தினோம். மக்கள், தோட்டங்களில் அல்லது சேரிகளில் வாழ்ந்த விகிதாசாரத்திற்கேற்ப மாடிவீட்டுத் திட்டங்களில் குடியேற்றப்பட்டனர்.
இவ்விகிதாசாரத்தில் எதுவித மாற்றங்களையும் செய்யவில்லை. இக்குடியேற்றத்தில் இன, மத பேதங்கள் பார்க்கப்படவில்லை. ஆனால், சில அரசியல்வாதிகள் சிங்கள மக்களை குடியேற்றி விட்டு தமிழ், முஸ்லிம் மக்களை கொழும்பிலிருந்து வெளியேற்ற முற்படுவதாக பிரசாரம் செய்தனர். இதனை மக்களில் ஒரு சாரார் நம்பினர். இதனால் முஸ்லிம்கள் மத்தியில் எனக்கெதிரான நிலைப்பாடுகள் ஏற்பட்டன. ஆனால், இதன் உண்மைத்தன்மையை இன்று மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
நாட்டில் நீதி, நியாயம் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. நாம் எதிர்காலத்தில் நீதி நியாயத்தை உறுதிப்படுத்துவோம். சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் யாவரும் கௌரவமாக வாழ்வதை விரும்புகின்றனர். இதனை உறுதிப்படுத்துவது எமது கடமையாகும்.
நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து சமாதானத்தை நிலை நாட்டியமையால் முஸ்லிம் சமூகம் சுதந்திரமாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலை உருவாகியது. எம்மிடம் வெள்ளை வேன் இல்லை. இந்நாட்டில் வெள்ளை வேன்கள் 1988, 89, 90களில் இருந்தன. நாம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடவில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் கொழும்பில் பலமிக்க கட்டமைப்பைக் கொண்டிருந்தனர். இதனால் கொழும்பில் பொருளாதார மையங்களில் குண்டுகள் வெடித்தன. அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்தனர். அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் கட்டமைப்பை அழித்தொழிப்பதில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பெரும் பங்களிப்பு செய்தனர். முஸ்லிம் சமூகம் தேசிய பாதுகாப்புக்கு பங்களிப்பு செய்துள்ளது. பாதுகாப்புத்துறையில் புலனாய்வுப் பிரிவில் அதிகளவு முஸ்லிம்கள் இருந்தனர். இப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் நாட்டுக்காகப் பணியாற்றினர் என்றார்.
கண்டி மாவட்டத்தில் உடுநுவர எலமல்தெனியவில் “எலிய” அமைப்பினால் தொழிலதிபர் ஏ.எல்.எம். பாரிஸின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்
கண்டி மாவட்டத்தின் சகல பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையான முஸ்லிம்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பராளுமன்ற உறுப்பினர்களான மகிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, அநுராத ஜயரட்ன, ஆனந்த அளுத்கமகே, திலும் அமுனுகம மற்றும் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர்,
நாட்டில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்படாமைக்குக் காரணம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் தமது வாக்குகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றமையாகும்.
சிங்கள, தமிழ் , முஸ்லிம் மக்கள் யாவரும் பொதுவான பிரச்சினைகளுக்குட்பட்டுள்ளனர். இது பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், வறுமை, வீடு, தொழில் முதலானவை சார்ந்த பிரச்சினைகளாகும். இவை தீர்க்கப்பட வேண்டும்.
இப்பிரச்சினைகள் சகல சமூகங்களுக்கும் பொதுவான பிரச்சினைகளாகும். இப்பிரச்சினைகளுக்கு காரணம் சிங்களவர்களும் முஸ்லிம்களும் தான் என்று தமிழ் அரசியல்வாதிகளும், தமிழர்களும் முஸ்லிம்களும் தான் காரணம் என்று சிங்கள அரசியல்வாதிகளும், சிங்களவர்களும் தமிழர்களும் என்று முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது மக்களிடம் கூறிவருகின்றனர். இந்த அரசியல் போக்கு சிறுபான்மை தமிழ், முஸ்லிம்களின் பிரச்சினைகளை அரசியல்மயப்படுத்தியுள்ளது.
இந்நாட்டு மக்களின் பிரச்சினைகள் எதுவித அரசியல் பேதமுமமின்றி தீர்க்கப்பட வேண்டும். இதில் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகளுள் வறுமை ஒழிப்பு மிக முக்கியமான பிரச்சினையாகும். இதற்காக சரியான பொருளாதாரக் கொள்கையின் கீழ் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது சகல இனத்தவர்களும் கெளரவமாக வாழும் நிலை உருவாகும்.
இந்நாட்டில் எதிர்காலத்தில் சகல இனத்தவர்களும் அச்சம், பீதியின்றி கௌரவமாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். மக்களின் மத சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாதாள குழுக்கள் கப்பம் பெறும் நிலையை இல்லாமலாக்குவோம்.
மகிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில், முப்பது வருட கொடிய பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இப்பயங்கரவாதத்தால் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் யாவரும் பாதிக்கப்பட்டிருந்தனர். மகிந்த ராஜபக் ஷ ஆட்சியில் பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தமை மக்கள் ஆணைக்கு மாற்றமான செயலல்ல.
மகிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தமையால் அரசியல்வாதிகளாலும் எதிரிகளாலும் நாம் இனவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டோம். நாம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்களாக காட்டப்பட்டோம். மகிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் யாவருக்கும் நன்மைகளை ஏற்படுத்தியது.
கொழும்பில் சேரிகளில் மக்கள் எதுவித வசதிகளற்ற நிலையில் சுகாதாரப் பிரச்சினைகளுடன் வாழ்கின்றனர். இந்நிலையை மாற்றியமைக்க வேண்டும். நாம் கொழும்பில் மாடிவீட்டுத் திட்டங்களை உருவாக்கி சேரிப்புற மக்களை குடியமர்த்தினோம். மக்கள், தோட்டங்களில் அல்லது சேரிகளில் வாழ்ந்த விகிதாசாரத்திற்கேற்ப மாடிவீட்டுத் திட்டங்களில் குடியேற்றப்பட்டனர்.
இவ்விகிதாசாரத்தில் எதுவித மாற்றங்களையும் செய்யவில்லை. இக்குடியேற்றத்தில் இன, மத பேதங்கள் பார்க்கப்படவில்லை. ஆனால், சில அரசியல்வாதிகள் சிங்கள மக்களை குடியேற்றி விட்டு தமிழ், முஸ்லிம் மக்களை கொழும்பிலிருந்து வெளியேற்ற முற்படுவதாக பிரசாரம் செய்தனர். இதனை மக்களில் ஒரு சாரார் நம்பினர். இதனால் முஸ்லிம்கள் மத்தியில் எனக்கெதிரான நிலைப்பாடுகள் ஏற்பட்டன. ஆனால், இதன் உண்மைத்தன்மையை இன்று மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
நாட்டில் நீதி, நியாயம் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. நாம் எதிர்காலத்தில் நீதி நியாயத்தை உறுதிப்படுத்துவோம். சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் யாவரும் கௌரவமாக வாழ்வதை விரும்புகின்றனர். இதனை உறுதிப்படுத்துவது எமது கடமையாகும்.
நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து சமாதானத்தை நிலை நாட்டியமையால் முஸ்லிம் சமூகம் சுதந்திரமாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலை உருவாகியது. எம்மிடம் வெள்ளை வேன் இல்லை. இந்நாட்டில் வெள்ளை வேன்கள் 1988, 89, 90களில் இருந்தன. நாம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடவில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் கொழும்பில் பலமிக்க கட்டமைப்பைக் கொண்டிருந்தனர். இதனால் கொழும்பில் பொருளாதார மையங்களில் குண்டுகள் வெடித்தன. அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்தனர். அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் கட்டமைப்பை அழித்தொழிப்பதில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பெரும் பங்களிப்பு செய்தனர். முஸ்லிம் சமூகம் தேசிய பாதுகாப்புக்கு பங்களிப்பு செய்துள்ளது. பாதுகாப்புத்துறையில் புலனாய்வுப் பிரிவில் அதிகளவு முஸ்லிம்கள் இருந்தனர். இப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் நாட்டுக்காகப் பணியாற்றினர் என்றார்.
யாழ், மன்னார் பகுதிகளில் எச்சரிக்கை சுவரொட்டிகள்!
திருக்கேதீஸ்வரத்தில் இவ் துண்டு பிரசுரங்கள் இன்று கோவிலுக்கு வருகை
தரும் பக்தர்களுக்கு பதிக்கப்பட்ட இந்து மக்கள் சார்பாக வழங்கப்பட்டது.
“கிறிஸ்தவ மத வெறியர்களால் பாதிக்கப்படும் இந்து தமிழ்மக்கள்” எனக் குறிப்பிட்டு யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட வடபகுதியின் பல்வேறு இடங்களிலும் எச்சரிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மன்னார் திருக்கேதீஸ்வரம் வளைவு கத்தோலிக்க வன்முறையாளர்கள் சிலரால் நேற்றைய தினம்(03) அகற்றப்பட்டமையின் எதிரொலியாகவே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
மன்னார் வாழ் மதவெறி குரோதம் பிடித்த கிறிஸ்தவ மத குருக்களும், ஒரு சில கிறிஸ்தவ மக்களும் இலங்கை வாழ் தமிழ்மக்களைப் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக 03.03. 2019 அன்று மதியம் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலில் நடந்த அச்சுறுத்தல் யாவரும் அறிந்ததே.
இது ஆண்டாண்டு காலம் தொட்டு நடந்து வருவது யாவரும் அறிந்ததே.
குறிப்பு:- இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (அடைக்கலநாதன்,சார்ள்ஸ் நிர்மலநாதன்)மன்னாரில் உள்ளனர். இவர்களும் மதச் சார்பாக உள்ளனர்.
இது தொடர்ந்து நடைபெறுமானால் உலகவாழ் இந்துத் தமிழ் மக்களின் நகர்வு வேறுபாதையை நோக்கிச் செல்லும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கிறிஸ்தவ மத வெறியர்களால் பாதிக்கப்படும் இந்து தமிழ்மக்கள்” எனக் குறிப்பிட்டு யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட வடபகுதியின் பல்வேறு இடங்களிலும் எச்சரிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மன்னார் திருக்கேதீஸ்வரம் வளைவு கத்தோலிக்க வன்முறையாளர்கள் சிலரால் நேற்றைய தினம்(03) அகற்றப்பட்டமையின் எதிரொலியாகவே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
மன்னார் வாழ் மதவெறி குரோதம் பிடித்த கிறிஸ்தவ மத குருக்களும், ஒரு சில கிறிஸ்தவ மக்களும் இலங்கை வாழ் தமிழ்மக்களைப் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக 03.03. 2019 அன்று மதியம் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலில் நடந்த அச்சுறுத்தல் யாவரும் அறிந்ததே.
இது ஆண்டாண்டு காலம் தொட்டு நடந்து வருவது யாவரும் அறிந்ததே.
குறிப்பு:- இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (அடைக்கலநாதன்,சார்ள்ஸ் நிர்மலநாதன்)மன்னாரில் உள்ளனர். இவர்களும் மதச் சார்பாக உள்ளனர்.
இது தொடர்ந்து நடைபெறுமானால் உலகவாழ் இந்துத் தமிழ் மக்களின் நகர்வு வேறுபாதையை நோக்கிச் செல்லும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள், 4 மார்ச், 2019
அப்பாவி அகதியும்..!! ஐபிசி முதலாளியும்..!!
அப்பாவி அகதி – ஐயா வணக்கம். நான் திருச்சியில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறேன். என்னை விடுதலை செய்யுமாறு கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறேன்.
ஐபிசி முதலாளி – ஓ! அப்படியா? சரி அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
அப்பாவி அகதி – என்னுடைய கையில் ஐபிசி ஊடகம் இருந்திருந்தால் பத்தாயிரம் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் காப்பாற்றியிருப்பேன் என்று கனடாவில நீங்கள் பேசினதை அறிந்தேன். அப்படியென்றால் எனக்காகவும் கொஞ்சம் குரல் கொடுக்க முடியுமா?
ஐபிசி முதலாளி – எனக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்று விருப்பம்தான் தம்பி. ஆனால் அப்பறம் இந்திய உளவுப்படைகாரங்கள் கோவிப்பாங்களே. அதுதான் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு.
அப்பாவி அகதி – என்ன ஐயா! நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபா கொடுத்தனீங்கள். அகதிகளுக்கு பணம் தராவிட்டாலும் பரவாயில்லை. நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடாதா?
ஐபிசி முதலாளி- தம்பி நான் ஒரு முதலாளி என்பதை நீர் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். போட்ட பணத்தை எப்படி இரட்டி மடங்காக எடுக்கலாம் என்றுதான் நான் பார்ப்பேன். அகதிகளுக்கு உதவுவதால் எனக்கு என்ன லாபம்?
அப்பாவி அகதி – என்ன ஐயா இப்படி பேசறீங்க? வன்னியில் உள்ள முன்னாள் போராளிகளை எல்லாம் சந்தித்து உதவி வருகிறீர்கள் என்று கூறுகிறார்களே?
ஐபிசி முதலாளி – அது எனக்கு தரப்பட்ட அஜெண்டா தம்பி. தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு போராட்டம் வரக்கூடாது என்பதற்காக குழப்புறவேலை எனக்கு தரப்பட்டிருக்கு.
அப்பாவி அகதி – என்ன ஐயா! உங்களின் ஊடகத்தை தமிழ் தேசிய ஊடகம் என்கிறாங்களே?
ஐபிசி முதலாளி – தேசிய ஊடகமும் இல்லை. தேசிக்காய் ஊடகமும் இல்லை. அதெல்லாம் என்னை வைத்து பிழைப்பதற்கு என்கூட இருக்கிறவங்கள் கட்டி விடுகிற கதைகள்.
அப்பாவி அகதி – சரி ஐயா. ஒரு சின்ன வேண்டுகோள். உங்களை கேள்வி கேட்டுவிட்டேன் என்பதற்காக என்ரை மகள் காப்பிலியுடன் ஓடிவிட்டாள் என்று வீடீயோ மட்டும் போட்டிடாதையுங்கோ.
ஐபிசி முதலாளி – சரி சரி பார்க்கலாம்.
ஐபிசி முதலாளி – ஓ! அப்படியா? சரி அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
அப்பாவி அகதி – என்னுடைய கையில் ஐபிசி ஊடகம் இருந்திருந்தால் பத்தாயிரம் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் காப்பாற்றியிருப்பேன் என்று கனடாவில நீங்கள் பேசினதை அறிந்தேன். அப்படியென்றால் எனக்காகவும் கொஞ்சம் குரல் கொடுக்க முடியுமா?
ஐபிசி முதலாளி – எனக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்று விருப்பம்தான் தம்பி. ஆனால் அப்பறம் இந்திய உளவுப்படைகாரங்கள் கோவிப்பாங்களே. அதுதான் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு.
அப்பாவி அகதி – என்ன ஐயா! நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபா கொடுத்தனீங்கள். அகதிகளுக்கு பணம் தராவிட்டாலும் பரவாயில்லை. நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடாதா?
ஐபிசி முதலாளி- தம்பி நான் ஒரு முதலாளி என்பதை நீர் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். போட்ட பணத்தை எப்படி இரட்டி மடங்காக எடுக்கலாம் என்றுதான் நான் பார்ப்பேன். அகதிகளுக்கு உதவுவதால் எனக்கு என்ன லாபம்?
அப்பாவி அகதி – என்ன ஐயா இப்படி பேசறீங்க? வன்னியில் உள்ள முன்னாள் போராளிகளை எல்லாம் சந்தித்து உதவி வருகிறீர்கள் என்று கூறுகிறார்களே?
ஐபிசி முதலாளி – அது எனக்கு தரப்பட்ட அஜெண்டா தம்பி. தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு போராட்டம் வரக்கூடாது என்பதற்காக குழப்புறவேலை எனக்கு தரப்பட்டிருக்கு.
அப்பாவி அகதி – என்ன ஐயா! உங்களின் ஊடகத்தை தமிழ் தேசிய ஊடகம் என்கிறாங்களே?
ஐபிசி முதலாளி – தேசிய ஊடகமும் இல்லை. தேசிக்காய் ஊடகமும் இல்லை. அதெல்லாம் என்னை வைத்து பிழைப்பதற்கு என்கூட இருக்கிறவங்கள் கட்டி விடுகிற கதைகள்.
அப்பாவி அகதி – சரி ஐயா. ஒரு சின்ன வேண்டுகோள். உங்களை கேள்வி கேட்டுவிட்டேன் என்பதற்காக என்ரை மகள் காப்பிலியுடன் ஓடிவிட்டாள் என்று வீடீயோ மட்டும் போட்டிடாதையுங்கோ.
ஐபிசி முதலாளி – சரி சரி பார்க்கலாம்.
கத்தோலிக்கர் என்ற வகையில் நாம் வெட்கித் தலைகுனிவதோடு கண்டிக்கின்றோம் – யாழ்.மறை மாவட்டம் அறிக்கை
திருக்கேதீஸ்வரம் வீதி வளைவு சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அதிர்ச்சியையும்,கவலையையும், கண்டணத்தையும் தெரிவிக்கின்றோம் என்று கத்தோலிக்க யாழ்ப்பாண மறை மாவட்டம்
தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் யாழ்ப்பாண மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ப. யோ. ஜெபரட்ணம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எமது இந்து மத சகோதரர்களின் மிகவும் பழமைவாய்ந்த, சரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமாக விளங்குகின்ற திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் கத்தோலிக்க மக்களால் சேதமாக்கப்பட்ட நிகழ்வு பற்றி
ஊடகங்களில் வெளியான செய்திகள் எமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.
கத்தோலிக்கர் என்ற வகையில் நாம் வெட்கித் தலைகுனிவதோடு எமது வன்மையான கண்டணத்தையும் தெரிவிக்கின்றோம்.
தமது சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுள்ள தருணத்தில் நடந்த இத்தகாத நிகழ்வினால் மனமுடைந்து காணப்படும் இந்து மத சகோதரர்களுக்கு எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம்.
எல்லா மதங்களையும், மதத்தவர்களையும் அன்பு செய்யவேண்டும், மதிக்கவேண்டும் என்றுதான் கத்தோலிக்க திரு அவை எமக்கு போதிக்கிறது.
இந்நிலையில் இச்செயலை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. தமிழர்களாகிய நாம் மதவேறுபாடுகளின்றி சகோதரத்துவத்தில் வளரவேண்டியது மிகவும் இன்றியமையாததாக இருக்கும்
இந்நிலையில் இப்படியான வேண்டத்தகாத நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாது இருக்கவும், நடைபெற்ற செயலுக்கு பிராயச்சித்தம் செய்யவும் சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டுமென்று வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம்.
இயேசுவின் வாழ்வாலும் போதனையாலும் நாம் பெற்றுக்கொண்ட அன்பு, மன்னிப்பு, விட்டுக்கொடுப்பு, தியாகம், புரிந்துணர்வு, சகோதரத்துவம், குழுமவாழ்வு ஆகிய எமது கத்தோலிக்க மதத்தின் அடையாளங்களை நாம் இழந்துவிடாமல் பாதுகாப்போம். இப்படியான நிகழ்வுகளால் எமது கத்தோலிக்க மதத்தின் பரிசுத்த தனத்துக்கு ஏற்படும் களங்கங்களுக்காக நாம்
மனம் வருந்தி பிராயச்சித்தம் செய்யவேண்டும்.
தவிர்க்கமுடியாத காரணங்களால் மதங்களுக்கிடையே அவ்வப்போது ஏதாவது கருத்துவேறுபாடுகள் ஏற்படும் பட்சத்தில் ஆரோக்கியமான பேச்சுக்கள் மூலமாக அவற்றை தீர்த்துவைக்க முயற்சிசெய்யவேண்டுமேயொழிய வன்முறைகளிலும், அடாவடித்தனங்களிலும் ஈடுபடவே கூடாது.
அருட்தந்தை ப. யோ. ஜெபரட்ணம்
குரு முதல்வர்
யாழ்ப்பாணம் மறைமாவட்டம்
தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் யாழ்ப்பாண மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ப. யோ. ஜெபரட்ணம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எமது இந்து மத சகோதரர்களின் மிகவும் பழமைவாய்ந்த, சரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமாக விளங்குகின்ற திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் கத்தோலிக்க மக்களால் சேதமாக்கப்பட்ட நிகழ்வு பற்றி
ஊடகங்களில் வெளியான செய்திகள் எமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.
கத்தோலிக்கர் என்ற வகையில் நாம் வெட்கித் தலைகுனிவதோடு எமது வன்மையான கண்டணத்தையும் தெரிவிக்கின்றோம்.
தமது சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுள்ள தருணத்தில் நடந்த இத்தகாத நிகழ்வினால் மனமுடைந்து காணப்படும் இந்து மத சகோதரர்களுக்கு எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம்.
எல்லா மதங்களையும், மதத்தவர்களையும் அன்பு செய்யவேண்டும், மதிக்கவேண்டும் என்றுதான் கத்தோலிக்க திரு அவை எமக்கு போதிக்கிறது.
இந்நிலையில் இச்செயலை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. தமிழர்களாகிய நாம் மதவேறுபாடுகளின்றி சகோதரத்துவத்தில் வளரவேண்டியது மிகவும் இன்றியமையாததாக இருக்கும்
இந்நிலையில் இப்படியான வேண்டத்தகாத நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாது இருக்கவும், நடைபெற்ற செயலுக்கு பிராயச்சித்தம் செய்யவும் சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டுமென்று வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம்.
இயேசுவின் வாழ்வாலும் போதனையாலும் நாம் பெற்றுக்கொண்ட அன்பு, மன்னிப்பு, விட்டுக்கொடுப்பு, தியாகம், புரிந்துணர்வு, சகோதரத்துவம், குழுமவாழ்வு ஆகிய எமது கத்தோலிக்க மதத்தின் அடையாளங்களை நாம் இழந்துவிடாமல் பாதுகாப்போம். இப்படியான நிகழ்வுகளால் எமது கத்தோலிக்க மதத்தின் பரிசுத்த தனத்துக்கு ஏற்படும் களங்கங்களுக்காக நாம்
மனம் வருந்தி பிராயச்சித்தம் செய்யவேண்டும்.
தவிர்க்கமுடியாத காரணங்களால் மதங்களுக்கிடையே அவ்வப்போது ஏதாவது கருத்துவேறுபாடுகள் ஏற்படும் பட்சத்தில் ஆரோக்கியமான பேச்சுக்கள் மூலமாக அவற்றை தீர்த்துவைக்க முயற்சிசெய்யவேண்டுமேயொழிய வன்முறைகளிலும், அடாவடித்தனங்களிலும் ஈடுபடவே கூடாது.
அருட்தந்தை ப. யோ. ஜெபரட்ணம்
குரு முதல்வர்
யாழ்ப்பாணம் மறைமாவட்டம்
வணக்கதுக்குரிய மன்னார் குரு முதல்வர் சோசை அவர்களுக்கு வணக்கம்!!
மன்னார் மாவட்ட குரு முதல்வரின் அறிக்கை வாசிக்காதவர்குள் இங்கே அழுத்தவும்.
https://www.vampan.org/2019/03/blog-post_45.html
தங்கள் அறிக்கை வாசித்தேன் .
மத நல்லெண்ணத்துக்கு எதிராக நடந்தார்கள் என்று நீங்க சுட்டி காட்டி இருக்கும் விடயம் " புனித லூதூர் கோயிலுக்கு முன்னால் இருந்த வீதி வளைவை புதுப்பிக்க வந்தமையே "
தங்கள் கருத்தில் ஒரு நியாயம் இருக்கு . ஏற்று கொள்கிறேன்
இருந்த வளைவு ஒன்றை , உங்க சேர்ச் க்கு முன்னால் இருந்தததை புதுப்பிக்க வந்தது மத நல்லிணக்கத்தை குழப்பும் என்றால் , மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரே கட்டப்பட்டு , மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலரே #சிவபூமி என்றழைக்கும் வகையில் சிவபூமியா இருந்த எங்கள் இடத்தில பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பிறகு வந்த போர்த்துகேயர் கட்டிய சேர்ச் மத நல்லிணக்கத்தை குழி தோண்டி புதைச்ச செயல் தானே ???
ஒரு வளைவு க்கும் சேர்ச்சுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்க உணராதவர் அல்ல . வளைவு ஏற்படுத்திய மத நல்லிணக்க குழப்பம் பெரிதா ? சிவ பூமியில் சேர்ச் கட்டியதால் நல்லிணக்க குழப்பம் பெரிதா ? என்பதை தாங்களே ஊகித்தறிந்து கொள்ளுங்கள்
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிறது எங்கள் பழமொழி .அதாவது கோயில் இல்லாத ஊர்களே இல்ல . கோயில்கள் இருந்த ஊர்களில் எல்லாம் சேர்ச் கட்டப்பட்டு இருக்கே அதெல்லாம் மத நல்லிணக்கத்தை குழப்பும் செயல் என்று மக்கள் இடிக்க வெளிக்கிட்டால் நிலைமை என்னாகும் ??
மனதுக்குள் ஒரு ஓரத்தில் எனக்கு ஒரு பயம் இருந்து கொண்டிருந்தது உங்கள் அறிக்கை வாசிக்கும் வரை . " உண்மையில் இது எங்கட நடுநிலைவாதிகளும் , நல்லிணக்கவாதிகளும் சொல்கிற மாதிரி நாங்க தப்பாக நினைத்து கொண்டு கதைக்கிறமோ என்று
ஆனால் உங்கள் அறிக்கை என் பயத்தை போக்கிவிட்டது . ஒரு குறிப்பிட்ட போதகரால் மட்டும் வழிநடத்தப்படவில்லை என்பது தெட்ட தெளிவாகிறது .
ஏனெனில் உங்கள் அறிக்கையில் எந்த இடத்திலும் நடந்த சம்பவத்துக்கு வருத்தமோ அல்லது மன்னிப்போ கேட்கவில்லை
கசைவத்தின் கொடியாக பிரகடனப்படுப்பட்ட , ஏலவே இனத்தின் கொடியாக நூற்றாண்டு காலமாக இருந்த கொடி காலால் மிதிக்கப்பட்டதுக்காவது மன்னிப்பு கேட்பீங்க என்று நினைத்தேன் . ஆனால் அதையும் செய்ய நீங்க தயார் இல்லை எனினும் இறுதியில் நல்லிணக்கத்தை பேண அழைப்பு விட்டு இருக்கிறீங்க
இது எப்படி இருக்கு தெரியுமா ? அண்மையில் ரணில் வந்து " மறப்போம் மன்னிப்போம் " என்று சொன்னதுக்கு சமனானது
எனினும் தங்கள் அறிக்கைக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
நன்றி
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக
திருக்கேதீஸ்வரத்தில் மீண்டும் ஏறியது நந்திக் கொடி!! (Photos)
ஆலய நுழைவாயிலில் மீண்டும் நந்திக் கொடிகள் ஏற்றப்பட்டு சைவ எழுச்சி ஏற்படுத்தப்பட்டது.
வளைவு பிடுங்கியெறியப்பட்டமை தொடர்பாக திருக்கேதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இந்தச் சம்பவத்தால் சைவத்தமிழர்கள் கொதிப்படைந்துள்ள நிலையில் இவ்விடயம் உடனடியாகவே நீதிவானின் கனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
விசாரணை மேற்கொண்ட நீதிவான் வளைவினை மீண்டும் அமைப்பதற்கு அனுமதி வழங்கியதுடன் வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினர், அங்குள்ள சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய தொண்டர்கள், சைவ மகா சபையின் தொண்டர்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்றோர் இணைந்து இன்று நண்பகல் 12 மணிமுதல் வளைவு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வளைவை மீண்டும் அமைப்பதற்கு ஆலய நிர்வாகம், சைவ அமைப்புக்களுடன் அமைச்சர் மனோ கணேசனும் கடும் முயற்சிகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
திருக்கேதீஸ்வரத்தில் மீண்டும் அதே இடத்தில் வளைவை அமைக்க நீதிமன்றம் அனுமதி!!
நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய இன்றில் இருந்து நான்கு நாட்களுக்கு தற்காலிகமாக திருக்கேதீஸ்வரம் வளைவை அமைக்குமாறும்.எதிர்வரும் 5ம் திகதி இதில் சம்மந்தப்பட்ட அனைவரையும் நீதிமன்றில் ஆஜராக பணிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் சிவனுக்கு எதிராக ஜேசுவின் படை நடவடிக்கை இன்று மீண்டும் தொடங்கியது!! (Photos)
மன்னாரில் சிவராத்திரியைக் கொண்டாட விடாதவாறு கிறீஸ்தவர்கள் நடவடிக்கை எடுத்துவருவதால் அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந் நிலையில் மன்னாரில் மாதசொரூபத்தை வாகனத்தில் ஏற்றியவாறு பாதிரிகள் திரிவதாகவும் சைவர்களை வேண்டுமென்றே சண்டைக்கு இழுக்க முற்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நந்திக்கொடியை ஏறி மிதித்தவரின் விபரம் வெளியாகியது.
நந்தி கொடியை காலால் மிதிப்பவர் ஜேசு (இவரது மனைவி கிராம அலுவலர்), blue colour t-shirt அமலேஸ் (மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்க ஊழியர் SK store keeper)
இந் நிலையில் மன்னாரில் மாதசொரூபத்தை வாகனத்தில் ஏற்றியவாறு பாதிரிகள் திரிவதாகவும் சைவர்களை வேண்டுமென்றே சண்டைக்கு இழுக்க முற்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நந்திக்கொடியை ஏறி மிதித்தவரின் விபரம் வெளியாகியது.
நந்தி கொடியை காலால் மிதிப்பவர் ஜேசு (இவரது மனைவி கிராம அலுவலர்), blue colour t-shirt அமலேஸ் (மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்க ஊழியர் SK store keeper)
பூநகரியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்களில் விபத்து!! இளைஞன் சிதறிப் பலி!! (video)
மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் குழு, எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னாரிலிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்திருந்தனர்.
இதன்போது பூநகரி பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மன்னார் அடம்பன் பகுதியைச் சேர்ந்த ஜக்சன் எனும் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அத்தோடு மேலும் 3 இளைஞர்கள் கவலைக்கிடமான நிலையில் யாழ்பாணம் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த வீடியோவை பார்க்க முடியாதவர்கள் யுரியூப் கணக்கை ஆரம்பித்த பின்னர்
https://www.youtube.com/channel/UCxugrQ-AB9MY-s18YlwMZZQ?view_as=subscriber
இந்த விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னாரிலிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்திருந்தனர்.
இதன்போது பூநகரி பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மன்னார் அடம்பன் பகுதியைச் சேர்ந்த ஜக்சன் எனும் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அத்தோடு மேலும் 3 இளைஞர்கள் கவலைக்கிடமான நிலையில் யாழ்பாணம் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த வீடியோவை பார்க்க முடியாதவர்கள் யுரியூப் கணக்கை ஆரம்பித்த பின்னர்
https://www.youtube.com/channel/UCxugrQ-AB9MY-s18YlwMZZQ?view_as=subscriber
இணைப்பிற்கு சென்று Subscript செய்த பின்னர் பார்வையிடலாம்.
யாழில் டாண் ரீவி குகநாதனுக்கும் அங்கஜனுக்கும் இடையில் குடும்பிச் சண்டை உக்கிரம்!!
யாழ்.குடாநாட்டினில் டாண் தொலைக்காட்சி மற்றும் கெப்பிடல் தொலைக்காட்சிகளிற்கிடையேயான கேபிள் இணைப்பு மோதல் உச்சம் பெற்றுள்ளது.
டாண் ரீவி கோத்தபாயாவின் பினாமியாக குகநாதன் என்பவனால் நடாத்தப்பட்டு வருகின்றது. இதே வேளை கெப்பிட்டல் ரீவி மகிந்தவின் மகனுடன் நெருக்கமாக இருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனால் நடாத்தப்பட்டு வருகின்றது.
டாண் தொலைக்காட்சிக்கு ஆதரவாக கூட்டமைப்பின் வசமுள்ள யாழ்.மாநகரசபை மும்முரமாக செயற்பட்டுவருகின்றது.அத்துடன் கெப்பிடல் தொலைக்காட்சியின் கேபிள் இணைப்பிற்கான கம்பங்களை அகற்றியும் வருகின்றது.
குறித்த விவகாரம் நீதிமன்ற படியேறியுள்ள நிலையில் அதனை பொருட்படுத்தாது அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான அங்கயனின் கெப்பிடல் தொலைக்காட்சியின் கேபிள் இணைப்பிற்கான கம்பங்கள் இன்றும் யாழ்.மாநகர எல்லைக்குள் நாட்டப்பட்டுள்ளது.கெப்பிடல் தொலைக்காட்சிக்கான அனுமதியை ஜனாதிபதி மைத்திரியே வழங்கியுள்ளார்.
அதேவேளை டாண் தொலைக்காட்சி உரிமையாளரான குகநாதன் மைத்திரியின் போதைப்;பொருளிற்கு எதிரான அணியின் இணைப்பாளராக(?) நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மாநகர துணை முதல்வர் செய்த முறைப்பாட்டையடுத்து காவல்துறை அதனை இன்று தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு முறுகல் நிலை தோன்றியிருந்தது.சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்றிருந்த டாண் ரீவி ஊடகவியலாளருடன் அங்கயனின் ஆதரவாளர்கள் முரண்பட்டுமுள்ளனர்.
டாண் ரீவி கோத்தபாயாவின் பினாமியாக குகநாதன் என்பவனால் நடாத்தப்பட்டு வருகின்றது. இதே வேளை கெப்பிட்டல் ரீவி மகிந்தவின் மகனுடன் நெருக்கமாக இருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனால் நடாத்தப்பட்டு வருகின்றது.
டாண் தொலைக்காட்சிக்கு ஆதரவாக கூட்டமைப்பின் வசமுள்ள யாழ்.மாநகரசபை மும்முரமாக செயற்பட்டுவருகின்றது.அத்துடன் கெப்பிடல் தொலைக்காட்சியின் கேபிள் இணைப்பிற்கான கம்பங்களை அகற்றியும் வருகின்றது.
குறித்த விவகாரம் நீதிமன்ற படியேறியுள்ள நிலையில் அதனை பொருட்படுத்தாது அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான அங்கயனின் கெப்பிடல் தொலைக்காட்சியின் கேபிள் இணைப்பிற்கான கம்பங்கள் இன்றும் யாழ்.மாநகர எல்லைக்குள் நாட்டப்பட்டுள்ளது.கெப்பிடல் தொலைக்காட்சிக்கான அனுமதியை ஜனாதிபதி மைத்திரியே வழங்கியுள்ளார்.
அதேவேளை டாண் தொலைக்காட்சி உரிமையாளரான குகநாதன் மைத்திரியின் போதைப்;பொருளிற்கு எதிரான அணியின் இணைப்பாளராக(?) நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மாநகர துணை முதல்வர் செய்த முறைப்பாட்டையடுத்து காவல்துறை அதனை இன்று தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு முறுகல் நிலை தோன்றியிருந்தது.சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்றிருந்த டாண் ரீவி ஊடகவியலாளருடன் அங்கயனின் ஆதரவாளர்கள் முரண்பட்டுமுள்ளனர்.
கேதீஸ்வரத்தில் அலங்கார வளைவு உடைப்பின் பின் டெனீஸ்வரன்?? அதிர்ச்சித் தகவல்!! (Video)
திருக்கேதீஸ்வரத்தில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவு உடைப்பின் பின்னணியில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் டெனீஸ்வரன் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இந்த சம்பவத்தின் பின்னணியில் சுமந்திரனின் ஆதரவும் உள்ளதாகவும் வளைவை உடைத்தவர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டாலும் தான் ஆயராகுவதாக டெனீஸ்வரன் உறுதி மொழி கொடுத்த பின்னரே மன்னார் ஆயரின் அனுசரனையும் அப்பகுதி பங்குத் தந்தையும் கிறீஸ்தவர்களும் குறித்த வளைவை அடித்து நொருக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.
மன்னாரில் கிறீஸ்தவர்களின் வாக்குகளைக் கவரும் நோக்கிலேயே டெனீஸ்வரன் இவ்வாறான கேவலங்களைச் செய்து வருகின்றார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.இதே வேளை சம்பவம் இடம்பெற்று ஒரு நாள் கழிந்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காது சுமந்திரனு்ககுப் பயந்து வாய் மூடி உள்ளதாக மக்கள் விசனம்
தெரிவிக்கின்றனர்.
கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள பாதிரியார் டெனீஸ்வரனின் மிக நெருங்கிய நண்பன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஞாயிறு, 3 மார்ச், 2019
கொக்குவில் பகுதி வீட்டுக்கு கடிதம் கொடுத்து ஆவா குழுவின் திருவிளையாடல்!!
யாழ். கொக்குவில் பகுதியில் ஆவாகுழுவால் குறித்த வீட்டின் சிசிடிவி
காணொளியை அகற்றுமாறு கூறி எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக எமது
பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த கடிதம் இன்று கொக்குவில், ஆடியபாதம் பகுதியை சேர்ந்த செல்வரன்சன் என்பவருக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“தங்க வீட்டுக்கு முன்னாடி ஈக்கின்ற (வாசலுக்கு முன்னாட்டி) கமராவை தாமதிக்காமல் உடனடியாக கழற்ற்வும், அல்லது வீதி பாக்காமல் உள்ளே பூட்டவும் நம்ம தோழர்கள் சிலர் மாட்டி இருக்கிறாங்க. ஆகவே உடனடியாக மாத்தவும் இந்த எச்சரிக்கை மீறினால் உங்கள் மீது தாக்குதல் விரைவாக நடாத்தப்படும்.”
குறித்த கடிதம் இன்று கொக்குவில், ஆடியபாதம் பகுதியை சேர்ந்த செல்வரன்சன் என்பவருக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“தங்க வீட்டுக்கு முன்னாடி ஈக்கின்ற (வாசலுக்கு முன்னாட்டி) கமராவை தாமதிக்காமல் உடனடியாக கழற்ற்வும், அல்லது வீதி பாக்காமல் உள்ளே பூட்டவும் நம்ம தோழர்கள் சிலர் மாட்டி இருக்கிறாங்க. ஆகவே உடனடியாக மாத்தவும் இந்த எச்சரிக்கை மீறினால் உங்கள் மீது தாக்குதல் விரைவாக நடாத்தப்படும்.”
திருக்கேதீஸ்வரத்தில் கிறீஸ்தவர்களால் நடந்த அலங்கோலம்!! (அதிர்ச்சிக் வீடியோ)
திருகேதிஸ்வரத்தில் வரவேற்பு வளைவு
அமைக்க கிறிஸ்தவர்கள் தடை
சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வரதுக்கு செல்லும் பாதையின் பிரதான வீதிக்கு அண்மையில் மாந்தை சந்தி பகுதியில் வரவேற்பு வளைவை அமைக்க கூடாது என சிலர் தகராற்றில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வரவேற்பு வளைவு பலவருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. அது துருப்பிடித்த நிலையில் காணப்பட்டதனை அடுத்து புதிய வளைவு அமைக்க முயற்சித்த வேளையே கிறிஸ்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தியவர்கள் தடுத்து அழித்தனர் என அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
திருகோணமலையில் விபச்சார விடுதி இளைஞர்களால் அடித்து நொருக்கப்பட்ட காட்சிகள் (Video)
திருகோணமலை உப்புவெளி பிரதேச சபையில் மசாஜ் நிலையங்களுக்கு அனுமதி கொடுக்காத நிலையில் சட்ட விரோதமாக தொழிற்பட்ட மசாஜ் நிலையங்கள் அப்பகுதியில் உள்ள உணர்வு மிக்க இளைஞர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. குறித்த மசாஜ் நிலையங்களில் மசாஜ் என்னும் போர்வையில் விபச்சாரமே நடைபெற்று வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...