செவ்வாய், 5 மார்ச், 2019

கிளிநொச்சயில் மனைவியுடன் கள்ளத் தொடர்பு!! வெளிநாட்டு கணவனால் கள்ளக்காதலன் கொலை!! (Photos)

வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கிளிநொச்சியில் வீடொன்றில் வைத்து வெட்டிக் கொலை  செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி உதயநகரில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வவுனியாவைச் சேர்ந்த பிறேமரமணன் (வயது-32) என்ற நபரே கொலை செய்யப்பட்டார். அவரது உறவினர்கள் வந்த பின்னரே முழுமையான தகவல்களைப் பெறமுடியும் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்தலைவர் ஒருவர், தனது மனவியுடன் தொடர்பை வைத்திருந்தார் என்ற குறிப்பிட்டு  அந்த நபரை வெட்டியுள்ளார்.

வெட்டுக்காயத்துக்குள்ளான நபர் மு.ப. 9 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என்று மு.ப. 10 மணிக்கு மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

அவரை வெட்டிய நபர் கிளிநொச்சிப் பொலிஸில் சரண்டைவார் என உறவினர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் CO-OP Insurance Company Limited காப்புறுதி முகாமையாளர் எனவும்  பல பெண்களுடன் தொடர்புவைத்திருப்பர் எனவும் தெரியவருகின்றது. 

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

3 கருத்துகள்:

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.