ஆக மொத்தம் மன்னார் மறை மாவட்ட ஆயர் மத தீவிரவாதத்தை வெள்ளை அடிப்பாதாக உள்ளது. சம்பவ இடத்து கிறிஸ்தவ தேவாலயம்
அமைந்த இடமே திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணி என நீதி மன்ற
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பல அரசியல் தலையீடு மற்றும் அரசியல்
செல்வாக்கு காரணமாக தீர்ப்பை பல வருட காலமாக இழுத்தடிக்கப்படுகின்றது.
மன்னார் மறைமாவட்டம் கத்தோலிக்க ஒன்றியம் அறிக்கை
*********************************************
மன்னார் மாந்தை பகுதியில் ஆலய இடம் சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருக்கும்போது சட்டபூர்வமற்ற செயல்பாட்டில் இறங்குவது கண்டிக்கப்பட வேண்டியது.
மன்னார் மாந்தைப் பகுதியில் ஆலயக் காணி, குளம் போன்ற வழக்கு கொழும்பு
மேல் முறையீடு நீதிமன்றில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கும்
இவ்வேளையில் ஒரு சில இந்து மதத்தலைவர்கள் தங்கள் சுய இலாபத்துக்காக இந்து
மக்களை தூண்டிவிட்டு மன்னாரில் இந்து கத்தோலிக்க மக்களின் ஒற்றுமையை
சீர்குழைத்து வருவதாக மன்னார் மறைமாவட்டம் கத்தோலிக்க ஒன்றியம் கண்டனம்
தெரிவித்துள்ளது.
மன்னார் மாந்தைப் பகுதியில் இரு சமூகத்தினரிடையே நிலவியுள்ள முறுகல் நிலை
தொடர்பாக மன்னார் மறைமாவட்டம் கத்தோலிக்க ஒன்றியம் விடுத்திருக்கும்
அறிக்கையில்
மன்னார் மாந்தை ஆலய காணி, குளம் உட்பட்டிருக்கும் வழக்கு ஒன்றில்
இவ்விடத்தில் வீதி மற்றும் வளைவு சம்பந்தமாகவும் பிரஸ்தாபிக்கப்பட்ட
நிலையில் கொழும்பு மேல் முறையீடு நீதிமன்றில் வழக்கு ஒன்று நிலுவையில்
இருந்து வருகின்றது.
இது இவ்வாறு இருக்க சிவராத்திரி தினத்தை சாட்டாக வைத்து மன்னார் மாந்தை
ஆலயத்துக்கு முன்பாக மாந்தைப் பகுதியில் புதிதாக நிலையான வளைவு ஒன்று
அமைப்பதற்கான நடவடிக்கையை இந்து சமய நிர்வாகம் நடவடிக்கையை
மேற்கொண்டுள்ளது.
இவ் வழக்கில் இருக்கும் ஒரு முக்கியஸ்தர் இவ் இடத்தில் வளைவை அமைப்பில்
பின்னனியில் இருந்து செயல்படுவதாலேயே இவ் வளைவு அமைப்பதற்கான
முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கொழும்பு மேல் முறையீடு நீதிமன்றின் தீர்ப்பு வருவதற்கு முன் இந்த வளைவு
அமைப்பது ஒரு தன்னிச்சையான செயல்பாடாக அமைந்துள்ளது.
இதனால் இந்த செயல்பாட்டினால் கத்தோலிக்க மக்களின் மனம் புண்பட்டதினதால்தான் நேற்று முன்தினம் (03.03.2019) ஞாயிற்றுக் கிழமை
இந்து கத்தோலிக்க மக்கள் மத்தியில் ஒரு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
நிலுவையிலிருக்கும் இவ் இடம் சம்பந்தமான வழக்கு தீர்ப்பு வரும் வரைக்கும் இரு பகுதினரும் பொறுமையாக இருந்து செயல்பட வேண்டியிருப்பதற்கு
பதிலாக ஒரு சமூகத்தினரை தூண்டிவிட்டு சட்டபூர்வமற்ற முறையில் செயல்பட்டதாலேயே இரு சமூகத்தின் மத்தியில் தற்பொழுது முறுகல் நிலை தோன்றியுள்ளது.
அதுமட்டுமல்ல சிலர் உண்மைநிலை அறியாமல் சமூக வளை தலங்களில் கத்தோலிக்கரே
முதலில் இருந்த வளைவை உடைத்ததாகவும் கத்தோலிக்கராலேயே பிரச்சனை
ஆரம்பிக்கப்பட்டதாகவும் தவறான பதிவுகளை வெளியிட்டு வருவது கண்டிக்கப்பட
வேண்டியதொன்றாகும்.
உண்மையான நிலை என்னவென்றால் நீதிமன்ற தீர்ப்பை இன்னும் எட்டாமல் மாந்தை
ஆலயத்துக்கு முன்பாக கனகரக வாகனம் மூலம் நிலையான வளைவு ஒன்றை
அமைக்கப்பட்டபோதே அமைக்கப்பட்ட வளைவை தடுத்து நிறுத்த கத்தோலிக்கர்
முற்பட்டனர்.
கடந்த காலங்களில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாந்தை பிரதான பாதையில்
இவ்வாறான தற்காலிக வளைவு இடப்பட்டு பின் அது தற்பொழுது நிலையான வளைவாக
அமைக்கப்பட்டபோது கத்தோலிக்கர் செறிந்து வாழும் இவ் பகுதியில் இவர்கள்
அவற்றுக்கு எதிராக எந்த செயல்பாட்டிலும் இறங்கவில்லை என்பதையும்
இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றோம்.
ஆனால் தங்கள் சுய இலாபத்துக்காக ஒரு சில இந்து சமய தலைவர்கள் இந்து
மக்களை தவறான வழியில் வழிநடத்தி கத்தோலிக்க மக்கள் மீது தேவையற்ற பழி
சுமத்தி வருகின்றனர்.
ஆகவே எவராக இருந்தாலும் உரியவர்களிடம் சரியான விபரங்களை கேட்டறிந்து
அவற்றை வெளியிடுவது சிறந்ததாகும். இவ்வாறு இருக்குமாகில் மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்ல நாட்டிலே குழப்ப நிலை தோன்றாது இருப்பதற்கு இது வழி சமைக்கும் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தனது அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக