வெள்ளி, 8 மார்ச், 2019

கிளிநொச்சி விவசாயியின் திறமையைப் பாராட்டுவீர்களா?? பகிர்ந்து கொள்ளுங்கள்!!

கிளிநொச்சி வட்டக்கச்சி பரம்பரை பரம்பரையாக விவசாயத்தை நம்பியே பலர் வாழ்ந்து வரும் ஓர் கிராமம்.

இதில் சில இளம்வயதுடையோர் விவசாயத்தை விரும்புவதில்லை ஏன் எனில் செலவு தான் காரணம் நெல்லை வயலில் விதைத்தது தொடக்கம் வெட்டி வீடு கொண்டு வரும் வரை அவர்களுக்கு சீ என்று போய் விடும் அதட்குரிய லாபம் பாேதாமை ஓர் காரணம் ஆகும்.

கடந்த காலத்தில் வயல் நிலங்களில் வெள்ளம் பாய்ந்து விவசாயிகளுக்கு கடும் கஸ்டத்தினை கொடுத்துள்ளது.

பொதுவாக உழவு இயந்திரத்தில் பெட்டி சில் சிறிதாகவே காணப்படும்.
இதனால் பல உழவு இயந்திரங்கள் புதைவது அனைவரும் அறிந்ததே.

இதனை சுலபமாக்கும் வகையில் இந்த விவசாயி பெட்டி சில்லுக்கு பதிலாக உழவு இயந்திரத்தின் பெரிய சில்லை பொருத்தியுள்ளார்.

இதனூடாக விவசாய நிலங்களில் வேலையை சுலபமாக முடிக்க முடிந்தது என விவசாயிகள் பெருமை கொண்டனர்.
Image may contain: tree, sky and outdoorImage may contain: tree and outdoorImage may contain: outdoorImage may contain: outdoorImage may contain: tree and outdoorImage may contain: outdoor

அவுஸ்ரேலியாவுக்குப் போய் தமிழ்ப் பெண் நடாத்தும் கேவலத் திருவிளையாடல் (Video)

வுஸ்ரேலியாவில உள்ள நம்ம தமிழ் அக்கா சொல்லுவது சரியா?

வீடியோவைப் பார்வையிடுவதற்கு முதல் கீழே உள்ள இணைப்பை அழுத்தி இந்த subscribe செய்த பின்னரே குறித்த வீடியோவைப் பார்வையிடுங்கள்.

https://www.youtube.com/channel/UCxugrQ-AB9MY-s18YlwMZZQ?view_as=subscriber




நெடுங்கேணி சிறுவன் கடத்தல் விவகாரம் சிறுவனின் தாயாரின் திருவிளையாடலாம்!! (Photos)

தந்தையை வெளிநாட்டுக்கு அனுப்பியமைக்கான 35 இலட்சம் ரூபா தரகுப் பணத்தை வழங்குமாறு 8 வயது மகனை வெளிநாட்டு முகவர் ஒருவரின் தரப்பினர் அழைத்துச் சென்றனர் என்று
தெரிவிக்கப்பட்டது.

“ஆஸ்திரேலியாவில் உள்ள தந்தைக்கு வதிவிட விசா கிடைப்பதற்காக சிறுவனின் தாயாரால் மகன் கடத்தப்பட்டதாக உண்மைக்குப் புறம்பாக முறைப்பாடு வழங்கப்பட்டது. அதுதொடர்பில் சிறுவனின் தாயார் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்படார்” என்று நெடுங்கேணிப் பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த திரிபரஞ்சன் தமிழவன் என்ற சிறுவனே இவ்வாறு கடத்தப்பட்டதாக முறைப்பாடு
வழங்கப்பட்டுள்ளது.

“சிறுவன் நேற்றுமுன்தினம் மாலை  தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது அப்பப்பா வீட்டிற்கு  சென்றிருந்தார். இருப்பினும் சிறுவன் அப்பப்பா வீடு செல்லவில்லை.

” இரவிரவாக உறவினர்கள் இணைந்து தோட்டம் மற்றும் தோட்ட கிணறுகள் எல்லாம் தேடிய நிலையில் சிறுவனை காணவில்லை” என்று சிறுவனின் தாயரால் நேற்றுக் காலை நெடுங்கேணிப் பொலிஸ்
நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.

சிறுவனை சிறுவனின் தந்தையை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்த  35 இலட்சம் ரூபா தரகுப் பணத்தைத் தந்தால் சிறுவனை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு காலை அழைப்பு ஒன்று வந்திருந்ததுடன்,  கடத்தப்பட்ட சிறுவனும் தொலைபேசியில் பேசினார்.

இதன்போது சிறுவன் தன்னை கூட்டிச் செல்லுமாறு தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

மாலையும் பிறிதொரு தொலைபேசியில் இருந்து 35 இலட்சம் பணம் தருமாறு கோரி தாயாருக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டது” என்றும் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.

“சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சிறுவன் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார் என்று கண்டறிப்பட்டது. சிறுவன் பணம் கேட்டுக் கடத்தப்பட்டதாக முறைப்பாட்டை வழங்கி அதன் ஊடாக பொலிஸ் அறிக்கையைப் பெற்று ஆஸ்திரேலியாவில் உள்ள தந்தைக்கு வதிவிட விசா அனுமதி பெற்றுக்கொள்வதற்காக தாயார் முயற்சித்தார் என்பது தெரியவந்த்து.

அதனால் சிறுவனின் தாயார் எச்சரிக்கப்படு விடுவிக்கப்பட்டார்” என்று நெடுங்கேணிப் பொலிஸார் தெரிவித்தனர்.


கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி சடலமாக மீட்பு… !! மகளிர் தினத்தில் நடந்த கொடூரம்..!!(Photos)

பொகவந்தலாவ டின்சின் தோட்டப் பகுதியில் உள்ள தொழிற்சாலை கொலனியில் உள்ள வீடு ஒன்றின் வெளியில் கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ டின்சின் தமிழ் மகா வித்தியாலத்தில் உயர் தரத்தில் கலைபிரிவில் கல்வி பயின்று வரும் மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சிறுமி சடலமாக மீட்கபட்டமைக்கான காரனம் இதுவரை கண்டறியப்படவில்லை.மகளிர் தினமான இன்று சிறுமியின் சடலம் மீட்கப்பட்டமை கவலையை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



முதன்முறையாக இலங்கை பெண்களால் செலுத்தப்பட்ட விமானம்! சற்று முன்னர் வெற்றிகரமாக தரையிறக்கம் (Video)

இலங்கையில் முதன்முறையாக பெண் விமானிகளினால் செலுத்தப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது.

மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கன் விமான சேவையினால் இந்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

முழுமையாக பெண் ஊழியர்களுடனான விமானம் கொழும்பில் இருந்து சிங்கப்பூர் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.

அதற்கமைய சற்று முன்னர் UL 306 என்ற விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளது.



60வயது ஜேர்மன் தமிழ்காதலனிடம் மன்னிப்புக் கேட்டார் ஓடிய காதலி!! யாழில் சம்பவம்!! (Photos)

யாழ்ப்பாணத்தில் பேஸ்புக் காதலியிடம் ஏமாந்த 60 வயது காதலனை பற்றிய செய்தி சில நாட்களின் முன்னர் வெளியாகியிருந்தது. கல்வியங்காட்டை சேர்ந்த 60 வயதான கமலநாதன் என்பவர், பேஸ்புக்கில் இளம் பெண்ணொருவரை காதலித்திருந்தார்.

ஆரம்பத்தில் சாதாரண நட்பாக ஆரம்பித்து, பின்னர் காதலனாது. காதலி தன்னை வவுனியாவை சேர்ந்தவர் என அறிமுகப்படுத்தியிருந்தார். பேஸ்புக் காதலிக்காக, காதலன் கமலநாதன் பல இலட்சம் ரூபாவை செலவிட்டார். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய தயாரான நிலையில், கள்வியங்காட்டிலுள்ள காதலனின் இல்லத்தில் யுவதியும் வந்து தங்கி நின்றார். பின்னர், காதலன் வழங்கிய பணம், நகைகளுடன் தலைமறைவானார். இது குறித்து காதலன் கமலநாதன் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதில் யுவதி முல்லைத்தீவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், யுவதி தற்போது அடையாளம் காணப்பட்டார். இந்த நிலையில், காதலன் கமலநாதனின் வீட்டுக்கு, அவரிடம் மன்னிப்பு கோர யுவதி நேற்று வந்தார். அவரை அழைத்துக் கொண்டு, பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார் கமலநாதன். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண் திருமணமானவர் என்பதும், மூன்று குழந்தைகளின் தாயார் என்பதும் தெரியவந்தது. கணவன் காலை இழந்தவர். கமலநாதன் முதல் அனுப்பிய 7 இலட்சம் ரூபா பணத்தில் காணி வாங்கி, கடன்காசு கொடுத்ததாக கூறியுள்ளார். பின்னர் அனுப்பிய பணத்தில், லோன் காசு கட்டியதாகவும், தாலியை ஒரு கடையில் விற்பனை செய்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் நகை விற்பனை செய்யப்பட்ட இடங்களிற்கு பொலிசார் விசாரணைக்கு சென்றனர். அந்த பெண்ணின் குடும்ப நிலையை அறிந்த கமலநாதன் இரக்கப்பட்டு, வறுமையிலுள்ள குடும்பம் ஒன்றிற்கு உதவிசெய்ததாக அமையட்டும், இந்த பணம் எனக்கு தேவையில்லை, ஆனால் பெண்ணிடமிருந்த தனது சில ஆவணங்களை தருமாறு கேட்டார். எனினும், கமலநாதன் வழக்கு பதிவுசெய்ததன் அடிப்படையில், இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு தாம் கொண்டு செல்ல வேண்டியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் மூலம், மிகுதி பணத்தையும் பெறலாம் என பொலிசார் குறிப்பிட்டனர். எனினும், கமலநாதன் அதை மறுத்து விட்டார். இன்று மதியம் வரை, குறிப்பிட்ட பெண்ணை நீதிமன்றத்தில் முற்படுத்தவில்லை.

வெளிநாட்டுத் தமிழனின் செத்த வீடும் பீசா சாப்பாடும்.. (Video)!! சிரிப்பதற்கு மட்டும் பார்க்கவும்.

பிரான்ஸ் லா-சப்பல் பகுதியில் தமிழ்க் காவாலிகளுக்கிடையில் மோதல்!! ஒருவர் குத்திக் கொலை!!

பரிஸ் லா-சப்பல் பகுதியில் நேற்றிரவு தமிழ் இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கழுத்துப் பகுதியில் குத்திக்கொல்லபட்டார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்தசம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லா-சப்பல் பகுதியிலுள்ள லூயிஸ்-பிளாங் வீதியில் இரவு 8:40 மணியளவில் இடம்பெற்ற இந்தசம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்

அதில் ஒருவர் கையில் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும் மற்றவர் உடலில் பின்பகுதியில் காயமடைந்ததாகவும் காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த மோதல் குறித்து அறிவிக்கபட்டதும் காவற்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். எனினும் காவற்துறையினர் வருவதைக் கண்டதும் மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் அந்த இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனர்

ஆயினும் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள காவற்துறையினர் அவர்கள் இருவரும் தடுத்து வைக்கபட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டுகுழுக்களுக்கு இடையிலான பழைய குரோதமே இந்த சம்பவத்துக்கு காரணமென குறிப்பிடப்பட்டுள்ளது

தமிழ்மக்களின் வர்த்தக மையமாக கருதப்படும் லா-சப்பல் பகுதியில் இடம்பெற்ற இந்த வன்முறைச்சம்பவத்தால் பரிஸ்வாழ் தமிழர்கள் கவலையடைந்துள்ளனர்.

உயிரிழந்துள்ள இளைஞன் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

அமெரிக்க பெண் அரசியல்வாதி இராணுவ அதிகாரி மீது பாலியல் புகார்!!



அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியபோது இராணுவ அதிகாரி ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக  பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக பாராளுமன்ற செனட் சபை உறுப்பினர் மார்தாமெக்சலி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாராளுமன்றத்தில் செனட் சபை (எம்.பி.) உறுப்பினராக இருப்பவர் மார்தாமெக்சலி. இவர் அரிசோனா மாகாணத்தில் இருந்து 2ஆவது முறை குடியரசு செனட் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.

இவர் ஏற்கெனவே அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியவர். 18 வயதில் விமானப்படையில் சேர்ந்த அவர் 26 ஆண்டுகள் பணியாற்றினார். இறுதியாக கெனெல் அதிகாரியாக இருந்தார்.

2010இல் ஓய்வு பெற்றார். அதன்பிறகு அரசியலில் இணைந்த  இவர் செனட் உறுப்பினராக இருக்கிறார். அமெரிக்க இராணுவத்தில் இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக ஏற்கெனவே புகார்கள் இருந்தன.

2017ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் 10 சதவீதம் பெண்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அங்கு நடக்கும் தவறுகள் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்க ஆயுத படைகள் செனட் துணை கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

அதில் உறுப்பினராக உள்ள மார்தாமெக்சலி கூட்டத்தில் கலந்து கொண்டபோது,  விமானப்படையில் இருந்தபோது தனக்கு மேல் உள்ள அதிகாரி ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில் புகார் தெரிவித்தால் பல சிக்கல்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதால் நான் புகார் தெரிவிக்காமல் மௌனம் காத்தேன். ஆனாலும் நடந்த சம்பவங்களை சிலரிடம் நான் கூறினேன். ஆயுதப்படைகளில் இது போல நடக்கும் தவறுகளை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வன்னி நெடுங்கேணியில் 35 லட்சம் கப்பம் கேட்டு 8 வயதுச் சிறுவன் கடத்தல்!! பெரும் பதற்றம்!!

வவுனியா, நெடுங்கேணிக் பகுதியில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த 8 வயது சிறுவன் ஒருவர் நேற்று மாலை 5 மணியளவில் காணாமல் போயுள்ளார்.

பாடசாலை சென்று வீடு திரும்பிய குறித்த சிறுவன் தனது தாயாருடன் வகுப்புக்கு சென்று வீடு திரும்பியிருந்தார். அதன்பின் தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது அப்பப்பா வீட்டிற்கு தோட்டத்தினுடாக சென்றிருந்தார். இருப்பினும் சிறுவன் அப்பப்பா வீடு செல்லவில்லை.

சிறுவன் செல்லும் போது அவுஸ்ரேலியாவில் உள்ள தனது கணவருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த தாயார் உரையாடி முடிந்த பின் சிறுவன் சென்ற வீட்டிற்கு சென்ற போது அங்கு சிறுவன் வரவில்லை என சிறுவனின் அப்பப்பா தெரிவித்துள்ளார்.

அதன்பின் இரவிரவாக உறவினர்கள் இணைந்து தோட்டம் மற்றும் தோட்ட கிணறுகள் எல்லாம் தேடிய நிலையில் சிறுவனை காணவில்லை.

இதன்பின் நேற்றையதினம் காலை கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், சிறுவனை சிறுவனின் தந்தை வெளிநாடு செல்ல காரணமான ஏஜென்சி கடத்தி வைத்திருப்பதாகவும் 35 இலட்சம் தந்தால் சிறுவனை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு காலை அழைப்பு ஒன்று வந்திருந்ததுடன்,  கடத்தப்பட்ட சிறுவனும் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதன்போது சிறுவன் தன்னை கூட்டிச் செல்லுமாறு தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். மாலையும் பிறிதொரு தொலைபேசியில் இருந்து 35 இலட்சம் பணம் தருமாறு கோரி தாயாருக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக்கொண்ட கனகராயன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  திரிபரஞ்சன் தமிழவன் என்ற 8 வயது சிறுவனே இவ்வாறு கடப்பட்டுள்ளவராவார்.


இளம் தமிழ்க் குடும்பப் பெண்ணை விஷம் வைத்துக்கொண்ட கணவன்!! அதிர்ச்சித் தகவல்கள் (Photos)

உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பயங்கர சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது., தமிழகம் குமரி மாவட்டத்தை சேர்ந்த திவ்யா (தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்) ,

பெல்லார்மினுக்கும் கடந்த 1½ வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. பெல்லார்மின் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆன 2 மாதம் வரை திவ்யா, பெல்லார்மின் ஆகிய இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அதன்பிறகு அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், சமாதானம் ஆவதும் என வாழ்க்கை இருந்ததாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தனர். இந்நிலையில் திவ்யா நேற்று காலையில் வழக்கம் போல் அவர் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சாலையோரம் வாகனத்தை நிறுத்திய அவர், அந்த பகுதியில் நின்றவர்களிடம் தனக்கு மயக்கம் வருவதாக கூறியுள்ளார். உடனே அவர்கள், ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து அயலிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே திவ்யா விஷம் வைத்து கொல்லப்பட்டதாகவும் தகவல் பரவியது. மேலும் அவருடைய உடல் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த தகவலை அறிந்த அப்பகுதி போலீசார் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் திவ்யாவின் தந்தை ஜான் அலெக்சாண்டர் தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யா கணவர் பெல்லார்மின், மாமனார் பெர்க்மான்ஸ், மாமியார் அமலோற்பவம் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில் தன்னுடைய மனைவி சாப்பிட்ட உப்புமாவில் விஷம் கலந்த அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்ததையடுத்து உடனே போலீசார் பெல்லார்மினை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



ஒரு பொம்மை காணாமல் போனதுக்காக இப்புடியாடா செய்வாய்??? (Video)

மன்னார் பாதிரியார்களே!! கட்டாயம் இந்த வீடியோவைப் பாருங்கள்!! புரிவீர்கள் (Video)

ஸ்பெயின் நாட்டில் கிறீஸ்தவ ஆலயம் முன்புற வீதியில் விநாயகர் ஊர்வலம் செல்வதற்காக அந்த கிறீஸ்தவ ஆலய நிர்வாகத்திடம் அனுமதி கேட்ட போது ஆலய நிர்வாகம் பிள்ளையாரை தமது ஆலயத்திற்குள்ளேயே அனுமதித்து வழிபட்டார்கள். அவர்களின் மன நிலை நம்ம மன்னார் கிறீஸ்தவ சமூகத்திற்கு வருமா?



இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (08.03.2028)

மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனு சரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங் கள் கைக்கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன வசதிப்
பெருகும். வியாபாரத்தில் பழைய வேலை யாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள்  கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

மிதுனம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோ சித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்
தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக் கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கடகம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள். 

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். பழைய பகை, கடன்களை நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கன்னி: உங்கள் பலம் பலவீ னத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சொந்த -பந்தங்கள் மத்தியில் செல் வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றிபெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.

விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி களை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

தனுசு: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். புது வேலைஅமையும். தாயாரு டன் வீண் விவாதம் வந்துப் போகும். பயணங்களால் அலைச்சல் இருந் தாலும் ஆதாயமும் உண்டு. தொழில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப் பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப்  பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்தி களை கையாளுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத் தாரின் ஆதரவுப் பெருகும். அழகு, இளமைக் கூடும். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

மீனம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். குடும்ப ரகசியங்களை வெளியிட வேண்டாம். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக  வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

வியாழன், 7 மார்ச், 2019

தமிழ்சிறுமி மீது தமது பாலியல் சேட்டையை!! முஸ்லிம் காவாலி நையப்புடைப்பு!! (Video)

 ஏறாவூர் முஸ்லிம் பகுதியை சேர்ந்த முஸ்லிம் காடையன் ஒருவன் போதைப்பொருளை பாவித்து ஏறாவூர் எல்லை அருகிலுள்ள ஆறுமுகத்தான் குடியிருப்பின் சவுக்கடி பாடசாலை சென்ற சிறுமியை தனது மகளுக்கு மனைவிக்கும் வித்தியாசம் தெரியாதளவு போதையை பாவித்து  இவன் வக்கிரத்தை நிறைவேற்ற முயன்றவேளை அங்குள்ள தமிழ் இளைஞர்களால் குறித்த முஸ்லிம் காமப்பிசாசுக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட்டு ஏறாவூர் போலிசில் ஒப்படைக்கப்பட்டார்.

ஏறாவூர் முஸ்லிம் பகுதியில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்தமையால் இப்பகுதியை அண்டிய எல்லை தமிழ்கிராமங்களில் பெண்கள் ,சிறுமிகள்,வயோதிபர்கள் நடமாட அச்சமான சூழ்நிலை காணப்படுகின்றது.

இப்பொழுது தமிழர் கிராமங்களில் ஏதாவது ஒரு நோக்கத்தில் நுழைந்து கிராமத்தின் கட்டமைப்பை சீர்குழைக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது,

எனவே உங்கள் கிராமங்களில் சந்தேகத்திற்கு இடமான வெளிநபர்கள் நடமாடினால் அவதானித்து அந்த அந்த கிராமத்து இளைஞர்கள் தமது ஊரை பாதுகாப்பது ஒவ்வொரு தமிழ் இளைஞர்களின் கடமையாகும்.

 வீடியோவைப் பார்வையிடுவதற்கு முதல் கீழே உள்ள இணைப்பை அழுத்தி இந்த subscribe செய்த பின்னரே குறித்த வீடியோவைப் பார்வையிடுங்கள்.

https://www.youtube.com/channel/UCxugrQ-AB9MY-s18YlwMZZQ?view_as=subscriber





Image may contain: 1 person, standing and outdoorImage may contain: 1 person, standingImage may contain: one or more people and outdoorImage may contain: one or more people, people standing and outdoor

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.