வெள்ளி, 12 ஜூலை, 2019

பற்றி எரிந்த கணவன், மனைவி!! அலறிய உறவினர்கள்!! வவுனியாவில் பதற்றம்!!

வீட்டில் கதறல் சத்தம் கேட்டதையடுத்து, அயலவர்கள் வீட்டுக்குள் சென்ற போது, வீடு முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டிருந்தது. இருவரும்

முழுமையான செய்திகளை வாசிக்க கீழே உள்ள இணைப்பை அழுத்துங்கள்.  https://vampan.net/?p=5387

யாழில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன்!! 50 லட்சம் தரக் கோரி தாயார் நீதிமன்றில் மனு!!

யாழ்ப்பாணத்தில் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் தாயார்
 50 லட்சம் ரூபா இழப்பீடு கேட்டு  நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழுமையான செய்திகளுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்துக.

https://vampan.net/?p=5371


வியாழன், 25 ஏப்ரல், 2019

சனி, 16 மார்ச், 2019

இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (16.03.2028)

மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். புதுவாகனம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள்உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள். மிதுனம்: மாலை 4.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப்பார்க்க வேண்டி வரும். மாலை பொழுதிலிருந்து நிம்மதி உண்டாகும் நாள். கடகம்: திட்டமிடாத செலவு களை போராடி சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். மாலை 4.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அதிகம் உழைக்க வேண்டிய நாள். சிம்மம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங் களை உணருவீர்கள். சிறப்பான நாள். கன்னி: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புதுவாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீகள். மதிப்புக் கூடும் நாள். துலாம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர் கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள். விருச்சிகம்: மாலை 4.15 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். மற்றவர்களுக்காக பரிந்துப்பேசப் போய் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். மாலையில் இருந்து நேர்மறை எண்ணங்கள் பிறக்கும் நாள். தனுசு: பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் முடங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். ஆனால் மாலை 4.15 மணி முதல்சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிதானித்து செயல்பட வேண்டிய நாள். மகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்புகிடைக்கும். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள். கும்பம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக்கிட்டும். புதுமை படைக்கும் நாள். மீனம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அரசுஅதிகாரிகளின் உதவியால்சில காரியங்களை முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

வெள்ளி, 15 மார்ச், 2019

நீயெல்லாம் தாயா?.. திருநாவுக்கரசின் அம்மாவை வறுத்தெடுத்த அரந்தாங்கி நிஷா (Video)

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காமக்கொடூரர்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருவதையடுத்து தற்போது அறந்தாங்கி நிஷா இச்சம்பவம் குறித்து மிகுந்த ஆவேசத்தோடு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, இப்போதுதான் பெண்கள் அடுப்பறையை விட்டு வெளியே வந்து பள்ளி, கல்லூரி, வேலை என வெளி உலகத்திற்கு வந்துள்ளனர். அவர்களை மீண்டும் அடுப்பங்கறைக்கே அனுப்பிவிடாதீர்கள். இது போன்று தொடர்ந்து பெண்களுக்கு அநீதிகள் நடந்துகொண்டே இருந்தால் முன்பை போலவே பெண்பிள்ளைகளை கள்ளிப்பால் ஊற்றி கொள்ளவேண்டியது தான். ஏனென்றால் 10, 15 வருடங்களுக்கு பிறகு எவனோ வந்து பெண்களை இப்படி நாசம் செய்வதற்கு பதிலாக நாமே கள்ளிப்பால் ஊற்றி கொன்றுவிடலாம் என ஆவேசமாக கூறியுள்ளார்.

யாழ்ப்பாணப் பெண்கள் பேஸ்புக்கில் இப்படித்தான் இருப்பார்கள்!!

திருவிளையாடல் படத்தில் தருமி நாகேஷ், சிவாஜியை பார்த்து கேட்பார்- பிரிக்க
முடியாதது எதுவோ என. தமிழும் சுவையும் என்பார் சிவாஜி. அது அந்தக்காலம்.
இந்தக்காலத்தில் அப்படியொரு கேள்வியை கேட்டால் சிவபெருமான் என்ன பதில் சொல்வார்?
சந்தேகமேயில்லாமல் பெண்களும் பேஸ்புக்கும் என்றுதான் சொல்வார். வயதுக்கு வருவதைப்போல
இப்பொழுதெல்லாம் பெண்கள் வாழ்வின் நியதிகளில் ஒன்றாகிவிட்டது பேஸ்புக். ஏ.எல் படிக்க
ஆரம்பிக்கும்போதே பாதிப்பெண்கள் பேஸ்புக்கிற்கு வந்து விடுகிறார்கள். ஏ.எல் முடிந்ததும்
மீதிப்பெண்கள் வந்து விடுகிறார்கள். மொத்தத்தில் இருபது வயதுக்குள் மொத்த பெண்களும்
பேஸ்புக்கில் சங்கமமாகி விடுகிறார்கள்.
பெண்களின் குலவழக்கம்- பார்ப்பதற்கு சாந்தமாக தெரிவது. எங்காவது முதல்முறையாக
போகும்போது பவ்வியமாக நுழைவார்கள். நான்குநாள் அங்கிருந்தால், பின்னர் குட்டிப்பூதமாக
அதளகளம் செய்து விடுவார்கள். இந்த குலவழக்கத்தை மீறாமல்தான் பேஸ்புக்கிற்குள்ளும்
நுழைகிறார்கள். வெறும் பவ்வியமல்ல, அப்படியொரு பவ்வியம். புறபைல் பிக்சராக ரோசாப்பூவை
வைத்திருப்பார்கள். எந்த ஸ்டேட்டசும் இடமாட்டார்கள். பெயரையும் நன்றாக சுருக்கி
வைத்திருப்பார்கள்.
ஒரு உதாரணம். கந்தசாமி கவிநயா என்பவர் பேஸ்புக்கில் நுழைகிறார் என வைப்போம். எப்படி
தனது பெயரை வைப்பார்? சில பெண்கள் விபரமானவர்கள். ஆரம்பத்திலேயே ஸ்டைலாக நுழைவார்கள்.
அப்பன் பெயர் ஸ்டைலாக இல்லை என, கயா என்றுதான் பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஆரம்பிப்பார்கள்.
கேட்டால் அப்பாவின் முதல் எழுத்தும் எனது கடைசி எழுத்தும் என சொல்லி சென்ரிமென்றாக டச்
பண்ணுவார்கள். விபரம் தெரியாத விளக்கெண்ணைகள் ஆரம்பத்தில் கந்தசாமி கவிநயா என வாக்காளர்
இடாப்பில் பெயர் எழுதுவதை போலவே அக்கவுண்ட் ஆரம்பிப்பார்கள். கண்ணுக்குள் எண்ணெய் விட்டபடி
பெண்களின் பேஸ்புக்கையே கண்காணித்துக் கொண்டிருக்கும் பக்கிகளின் ஆராய்ச்சி முடிவு என்ன
சொல்கிறதென்றால், வாக்காளர் இடாப்பில் பெயரெழுதுவதை போல அக்கவுண்ட் ஆரம்பிக்கும்
தாய்க்குலங்கள் எல்லாம் விரைவிலேயே கயா ஸ்டைலுக்கு மாறிவிடுகிறார்களாம். மாறாமல்
வாக்காளர் இடாப்பாகவே ஒரு தாய்க்குலம் இருக்கிறாரெனில், அவரை கரடி பிடித்துவிட்டதென
அர்த்தமாம். கரடி பிடித்தது மீன் (mean)- ஆண்களே உங்களைத்தான் கரடியென்கிறார்கள். அந்த
பெண்களை காதலில் வீழ்த்தி விட்டீர்களாம்!
பேஸ்புக்கிற்கு வந்த ஆரம்பத்தில் கயாக்கள் செய்வது இரண்டு விடயங்கள். ஒன்று, தமக்கு
தெரிந்தவர்களையெல்லாம் தேடித்தேடி நண்பர்களாக்குவது. சில சமயம் வேண்டப்படாத தூரத்து
உறவுகள், நெருக்கமில்லாத நண்பர்களிற்கெல்லாம் கயாக்களிடமிருந்து ப்ரெண்ட் ரெக்வெஸ்ற் வரும்.
இவ்வளவு பாசக்கார பிள்ளையாக இருக்கிறாளே என உருகிவிடாதீர்கள். உங்கள் நண்பர்கள் வட்டத்தில்
உள்ள யாரையோ ஒரு பையனை அவர் கவனிக்கத்தான் இந்த ஏற்பாடு.
கயாக்கள் செய்யும் இரண்டாவது காரியம், தாங்கள் ரொம்ப இரக்கமுள்ளவர்கள், மென்மையானவர்கள்,
சமூக சிந்தனையுள்ளவர்கள் என காட்ட முயற்சிப்பார்கள். அம்மாவை போல தெய்வமுண்டோ, நல்ல
குடும்பம் பல்கலைகழகம் என்பது மாதிரியான வசனங்களுடன் கூடிய படங்களை share பண்ணி
மொக்கை போடுவார்கள். இந்தோனேசியாவில் இரத்தம் தேவை வகை ஸ்டேட்டசையும், பகிர்ந்து
மனிதாபிமான பாகுபலியாக காட்ட முயற்சிப்பார்கள்.
கொஞ்சநாள் பேஸ்புக்கில் தவமாய் தவமிருக்க ஆரம்பித்த பின், கயாக்கள் அடுத்த ஸ்ரெப்பில் காலடி
வைப்பார்கள். நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது வகை வசனங்களுடன் சினிமா ஜோடிகளின்
படங்களை பகிர ஆரம்பிப்பார்கள். அதிலும் நன்றாக கவனியுங்கள், நம்மூர் பெண்கள் சூர்யா
ரசிகைகளாகத்தான் இருப்பார்கள்.
அடுத்தடுத்த வாரங்களில் தூங்கும்போதும் இதயம் துடிக்கிறது, சுடசுட தேனீர் குடி சுட்டபின்
என்னை நினை வகையறா கவிதைகளுடன் நம்மையெல்லாம் கொல்வார்கள்.
பேஸ்புக் வந்த சில நாட்களிலேயே அனுஷ்காவில் தொடங்கி ஐரோப்பிய அழகிவரை பலரது
புகைப்படங்களைத்தான் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். இதைகூட சகித்து கொள்ளலாம். அனுஷ்காவின்
படம் என்று தெரிந்தும், இது நீங்களா? வாவ்.. வெரி கியூட் என ஜொள்ளு கொமண்டுவார்களே
சிலர், அவர்களை கழுவிலேற்றினாலும் தகும்.
இன்னும் சில பெண்கள் இருக்கிறார்கள். பத்து வருடத்திற்கு முன்னர் பள்ளிக்கூடத்தில் எடுத்த
குறூப் போட்டோவை பதிவேற்றுவார்கள். அந்த படத்தில் இருப்பவர்களை சொந்த அண்ணன்மாரால் கூட
இப்போது கண்டுபிடிக்க முடியாமலிருக்கும்.
பிள்ளையார் படம் share பண்ணிக் கொண்டிருந்த பிள்ளை திடீரென feeling alone என்று,
ஏதாவது மொக்கை கவிதைகள் பதிவிட ஆரம்பித்தால் ஆள் கிளீன்போல்டாகி விட்டார் என்று அர்த்தம்.
என்னதான் கண்ணகி வீட்டுக்கு எதிர்வீடு என்றாலும் அனேக பெண்கள் பேஸ்புக்கில் கடலை
போடுபவர்கள்தான் என அடித்து சொல்கிறார்கள் பேஸ்புக் பேச்சுலர்கள். நான் சிங்கிளாகத்தான்
இருக்கிறேன் என்பதை பேஸ்புக் உலகத்திற்கு நிரூப்பிபதற்கு பெரும்பாடு படுவார்களாம். இதை
யார் சொன்னது? பேஸ்புக் பேச்சிலர்கள்தான் சொன்னார்கள்.
தனிமையில் நிற்பார்கள், அதை பின்பக்கமாக எடுத்து போடுவார்கள். குடும்பத்துடன் நிற்பார்கள்,
நண்பிகளுடன் நிற்பார்கள். மறந்துகூட மாமன், மச்சான், ஒன்றுவிட்ட அண்ணன்மாருடன் எடுத்த
படங்களை வெளியில் விட மாட்டார்கள். கூட நிற்பவன் ஒன்றுவிட்ட அண்ணன்தான் என்பது
சொந்தங்களிற்கு தெரியும், பேஸ்புக் இரத்தத்தின் இரத்தங்களிற்கு தெரியாதே!
ஒரு பெண் காதலில் விழும்போது பேஸ்புக்கில் பல மாற்றம் தெரியும் என்கிறார்கள் ‘உள்ளூர்
நிபுணர்கள்’. அதில் முக்கியமானது, அம்மா அடுப்பிலிருந்து கறியை இறக்க, அப்படியே
போனில் சுட்டு, my cooking என பேஸ்புக்கில் தட்டிவிடுவார்கள். அதாகப்பட்டது, மாட்டிய
அப்பாவிக்கு “வேளைக்கு சமையல் பழகடா“ என்ற மெசேஜை பாஸ் பண்ணுகிறார்களாம்!
அத்துடன், இன்னொரு மாற்றம் தெரியும். அதுவரை பூவில் தொடங்கி பூனைக்குட்டி வரையான
படங்களை புறபைல் பிக்சராக வைத்திருந்தவர்கள், முதன்முறையாக தமது படங்களை அப்லோட்
செய்வார்கள். அதுகூட பரவாயில்லை. காலை, மதியம், மாலையென ஒவ்வொரு உடைமாற்றி படம்
போட்டு, பேஸ்புக்கை பப்படமாக்கிக் கொண்டிருப்பார்கள். இதெல்லாம் நடந்தால், அம்மணி ரொமாண்டிக் மூடில் இருக்கிறார் என்று அர்த்தமாம்!

பெண்களைச் பாலியல் சித்திரவதை செய்யும் பார் நாகராஜ்! முழுமையான வீடியோ

இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் குற்றச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கிவருவதாக தமிழக தகவல்கள் கூறுகின்றன.
இதனடிப்படையில், பார் நாகராஜன் என்பவர் பெண்களை சித்திரவதை செய்யும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விரிவான விடயங்களை கீழ்வரும் யூரியுப் இணைப்பை அழுத்தி subscrib செய்த பின்னர் காணுங்கள்.

https://www.youtube.com/channel/UCxugrQ-AB9MY-s18YlwMZZQ?view_as=subscriber 


காணாமல் போனவர்களின் மனைவிமார் மீது அரச அதிகாரிகள் பாலியல்லஞ்சம்!!

காணாமல் போன தங்கள் கணவன்மார்கள் பற்றிய தகவல்களை கோரிய மனைவிமார் அரச
அதிகாரிகளாலும், பாதுகாப்புத்துறை சார்ந்த அதிகாரிகளாலும் பாலியல் துர்நடத்தைக்கு
உட்படுத்தப்பட்டனர் என்று தகவல் கிடைத்துள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள, கடந்த வருடத்தில் உலக நாடுகளின் மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த பகுதியிலேயே இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்-
போரில் கொல்லப்பட்ட படையினரின் மனைவிமார் அரசால் வழங்கப்படும் நிதி உதவியை பெற முயலும் வேளை பாலியல் துர்நடத்தைகளை எதிர்கொள்கிறார்கள். அரசோ அல்லது அதன் முகவர்களோ சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபட்டனர் என தகவல்கள் கிடைத்துள்ளன. போரின்போதும், இதன் பின்னரும் காணாமல் போதல் என்பது இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சனையாக காணப்படுகிறது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னொலிகொட காணாமல்போக செய்யப்பட்டமை தொடர்பில் வருட இறுதிவரை அதிகாரிகள் எவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை. சித்திரவதை உட்பட ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் மற்றும் தண்டனைகளை இலங்கையின் அரசமைப்பும் சட்டமும் தடை செய்துள்ள போதிலும் அதிகாரிகள் இதனை தொடர்ந்தும் பின்பற்றுகின்றனர்.
குற்றங்கள் தொடர்பான வாக்குமூலங்களை பெறுவதற்காக பொலிசார் பொதுமக்களை சித்திரவதை செய்வதுடன், பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாகின்றனர்.
2017 பெப்ரவரியில் அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடைசெய்யப்படுவதை
இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்தபோதிலும், கடந்த வருடம் இலங்கை அரசு ஆகக்குறைந்தது
நான்கு பேரையாவது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. பொலிசார்
சித்திரவதைகளை வழமையான நடைமுறையாக நாடு முழுவதும் பின்பற்றுகின்றனர் என
தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமைகள் ஆணையகம், கடந்த ஜூன் மாதம் வரை உடல்உள சித்திரவதைகள் குறித்து 193 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மனித
உரிமைகள் அமைப்புக்கள் மேற்கொண்ட ஆய்வின்போது இலங்கை முழுவதும் சித்திரவதைகள் பரவலாக பின்பற்றப்படுவது தெரிய வந்துள்ளது. கடந்த காலங்களை போன்று போர் முடிவடைந்த பின்னரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்கள் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டோம், பலவந்தமாக வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், சட்டத்தரணிகளையும் குடும்பங்களையும் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பாலியல் துன்புறுத்தல் உட்பட சித்திரவதைகள்,
மோசமாக நடத்தப்படுதல் போன்றவற்றை புனர்வாழ்வு முகாம்களிலும், விடுதலையின் பின்னரும்
அனுபவித்தோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
பொதுமக்களிற்கு எதிராக படையினரும் பொலிசாரும் அதிகளவான வன்முறைகளை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
காணாமல் போன தங்கள் கணவன்மார்கள் குறித்த தகவல்களை கோரிய மனைவியர்களை அரச
அதிகாரிகளும், பாதுகாப்பு துறை அதிகாரிகளும் பாலியல் துர்நடத்தைக்கு உள்ளாக்கியுள்ளனர்
என தகவல் கிடைத்துள்ளது. போரில் கொல்லப்பட்ட படையினரின் மனைவிமார் அரசால் வழங்கப்பட்ட நிதி உதவியை பெற முயலும்போது பாலியல் துர்நடத்தையை எதிர்கொள்கின்றனர்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் யுவதிகளை கற்பழித்து வீடியோ எடுத்து விற்கின்றார்கள்!! கூறுவது யார்?

வடக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் உருவாக்கப்பட்டு பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஜே.வி.பி அதிர்ச்சி தகவல் ஒன்றை முன்வைத்துள்ளது. ஜே.வி.பியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பிமல் ரத்நாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் நிதியீட்டத்தைக் கொண்டு பாலியல் வன்கொடுமைக் காணொளிகள் பதிவு செய்யப்படும் மோசமான தொழிற்துறையொன்று வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான குழு நிலை விவாதத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நாம் அனைவரும் மறந்திருக்க முடியாது. இந்த சம்பவத்தை வெறும் பாலியல் வன்கொடுமையாக மட்டும் பார்த்துவிட முடியாது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் காணொளியாக பதிவு செய்யப்பட்டதுடன், அதற்காக பெருந்தொகை பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் வடக்கில் இடம்பெற்று வருகின்றமை பரகசியமானதொன்றேயாகும். இதில் மிகவும் துரதிஸ்டவசமானது என்னவென்றால் அதே சமூகத்தைச் சேர்ந்த புலம்பெயர் மக்களே இந்த கொடூர செயலுக்கு பணம் வழங்கி வருகின்றனர் என்பதுதான். சிறுமியர் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அந்தக் காட்சிகளை காணொளியாக பதிவு செய்து பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வடக்கில் பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் பயன்பாடு, மதுபான பயன்பாடு மற்றும் வறுமை நிலைமை போன்றன மிகவும் அதிகரித்துள்ளதாக பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

வியாழன், 14 மார்ச், 2019

உள்ளாடையை வாய்க்குள் வைத்து பகிடிவதை!! யாழ் பல்கலை மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

நேற்று மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்கும் அனுராதபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக பகிடிவதை செயற்பாடுகள் அதிகரித்துள்ளதுடன் அத்துடன் பகிடிவதையின் உச்ச கட்டமாக மாணவிகள் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவறு சென்ற காட்சி இணைய தளத்தில் வீடியோ வெளியாகி இருந்தது இதில் பாதிக்கப்பட்டு தற்போது இதனால் மன உளைச்சளுக்கு ஆளான மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் மிகவும் கொடூரமானது.



 இது தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக நிர்வாகங்களும் பகிடிவதையினை ரசித்து கொண்டு இருப்பதை காண முடிகின்றது ஏனைய மாணவர்கள் கருத்து தெரிவிக்கும் போது பல்கலைக்கழக நிர்வாகம் பாரமுகமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

6 வயதுக் குழந்தைக்கு சாராயம் பருக்கிய சிங்களவன்

னது 6 வயது ஆண் குழந்தைக்கு பலவந்தமாக மது அருந்தச் செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை – மொதரவள்ளிய பிரதேசத்தை சேர்ந்த தாயொருவர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
அயலிலுள்ள வீடொன்றிற்கு விளையாட சென்ற குழந்தை, வீடு திரும்பிய போது வாயில் இருந்து மது நாற்றம் வீசிய நிலையில் , அது தொடர்பில் குழந்தையிடம் தாய் வினவியுள்ளார்.
இதன்போது , திருமண வைபவம் இடம்பெற்ற வீட்டில் இருந்த நபரொருவர் தனக்கு ஒருவித பானத்தை அருந்தச் செய்ததாக குழந்தை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தாயார் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டை மருத்துவமனையில் குழந்தை பரிசோதிக்கப்பட்டு, மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அம்பலாந்தோட்டை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் நீதிமன்றில் தண்டனை பெற்று அதே நாள் மீண்டும் போதைப் பொருள் விற்ற காவாலி!! (Video)

மாவா போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்துக்கு நீதிமன்றில் தண்டப்பணம்
செலுத்திவிட்டு வந்த அன்றைய தினமே மீளவும் மாவா போதைப்பொருளை விற்பனைக்காக
தயார்ப்படுத்தியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் இன்று புதன்கிழமை இரவு சந்தேகநபர் சுமார் 16 கிலோ
கிராம் மாவா போதைப்பொருள் பொதிகளுடன் அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
“யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணாரட்னவின் கீழான சிறப்புப் பொலிஸ்
பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். சந்தேகநபர் தனது உடமையில் மாவா போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று (13) புதன்கிழமை குற்றத்தை ஏற்றுக்கொண்டதால் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரது வீடு யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் சோதனையிடப்பட்டது. அதன்போது விற்பனைக்குத் தயாராகப்
பொதியிடப்பட்ட நிலையில் சுமார் 16 கிலோகிராம் மாவா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவர் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (14.03.2028)

மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
ரிஷபம்: இன்றும் நண்பகல் 12.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.
மிதுனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. லேசாக தலை வலிக்கும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பகல் 12.45 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
கடகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். சிறப்பான நாள்.
சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிட்டும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.
கன்னி: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.
துலாம்: நண்பகல் 12.45 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். கடின உழைப்பால் முன்னெறும் நாள்.
விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். நண்பகல் 12.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
தனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.
மகரம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
கும்பம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். புது வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
மீனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.

புதன், 13 மார்ச், 2019

போதைப் பொருள் மன்னனின் வடக்கு மாகாண முகவராக யாழ்ப்பாண வர்த்தகர் துஸ்யந்தன்!! அதிர்ச்சித் தகவல்!!

இந்தத் தகவலை சிங்கள ஊடகமான லங்காதீப வெளியிட்டுள்ளது. மாகந்துரே
மதூஷின் கைதையடுத்து அந்த ஊடகம் வெளியிட்டுவரும் விசாரணை தொடர்பான
அறிக்கையிடலியே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>



<p>போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடை
பாதாளக் குழுவின் தலைவரான மாகந்துரே மதூஷ் கடந்த ஜனவரியில் டுபாய்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றில் வைத்து
அவரும் அவரது சகாக்களும் கைது செய்யப்பட்டனர்.</p>



<p>இந்த நிலையில் சிறப்பு அதிரடிப்படையினர் முன்னெடுக்கும் தொடர்
விசாரணைகளில் மாகந்துரே மதூஷின் குழுவைச் சேர்ந்த பலர் தென்னிலங்கையில்
கைது செய்யப்படுகின்றனர். நேற்றுமுன்தினம் தி்ங்கட்கிழமையும் அவரது சகா
ஒருவரின் வீட்டிலிருந்து சுமார் 180 கோடி ரூபா பெறுமதியான 171 கிலோ கிராம்
ஹெரோயின் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டன.</p>

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.