வியாழன், 14 மார்ச், 2019

6 வயதுக் குழந்தைக்கு சாராயம் பருக்கிய சிங்களவன்

னது 6 வயது ஆண் குழந்தைக்கு பலவந்தமாக மது அருந்தச் செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை – மொதரவள்ளிய பிரதேசத்தை சேர்ந்த தாயொருவர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
அயலிலுள்ள வீடொன்றிற்கு விளையாட சென்ற குழந்தை, வீடு திரும்பிய போது வாயில் இருந்து மது நாற்றம் வீசிய நிலையில் , அது தொடர்பில் குழந்தையிடம் தாய் வினவியுள்ளார்.
இதன்போது , திருமண வைபவம் இடம்பெற்ற வீட்டில் இருந்த நபரொருவர் தனக்கு ஒருவித பானத்தை அருந்தச் செய்ததாக குழந்தை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தாயார் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டை மருத்துவமனையில் குழந்தை பரிசோதிக்கப்பட்டு, மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அம்பலாந்தோட்டை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.