வியாழன், 4 ஜனவரி, 2024

மட்டு’வில் மயானத்தில் தூக்கில் தொங்கி நிலையில் அலோசியஸ் சடலமாக மீட்பு !

மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் ஆண் ஒருவர் மயான கட்டிடத்தின் கூரையில் இன்று (03) புதன்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருதயபுரம் இரண்டாம் குறுக்கு வீதியை சேர்ந்த 47 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான கிலெனி அலோசியஸ் என்பவரேஇவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கள்ளியங்காடு இந்து மயானத்தில் வேலை செய்பவராகவும் தெரியவருகிறது மரணத்திற்கான தௌிவான காரணம் இதுவரை செய்யப்படவில்லை. சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.