வியாழன், 4 ஜனவரி, 2024
உலகம் அழியப் போகிறது என கூறியது யார்? இதுவரை 6 பேர் தற்கொலை- இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்!
உலகம் அழியப் போகிறது, இனி வாழ்ந்து பலனில்லையென பிரசங்கம் செய்த மத விரிவுரையாளரின் பேச்சினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பௌத்த மத விரிவுரைகளை வழங்கிய ருவான் பிரசன்ன குணரத்ன என்ற 46 வயதுடைய நபர் சயனைட் உட்கொண்டு அண்மையில் உயிரிழந்ததுடன், ஹோமாகமவில் வசித்து வந்த அவரது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஆகியோரும் விஷம் குடித்து அண்மையில் உயிரிழந்தனர். ருவான் பிரசன்ன மகும்புர பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் பௌத்த மத போதகர் என்பதும், நாடு முழுவதும் ஏராளமான சீடர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளதாகவும், டிசம்பர் 26ம் திகதி தனது சீடர்களை வரவழைத்து இந்த நாடு அழிந்து வருவதாகவும், இனி இங்கு வாழ்வதில் எந்த பயனும் இல்லை என்றும் பிரசாரம் செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.பின்னர் அவர் விசம் அருந்தி தற்கொலை செய்தார். கடந்த 30ஆம் திகதி இரவு அவரது மனைவியும், 3 பிள்ளைகளும் . மாலம்பேயில் தங்கியிருந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களம் விசம் அருந்தியுள்ளனர். மகும்புர கொட்டாவ பகுதியைச் சேர்ந்த உதாரி நிசன்சலா சேனாரத்ன (35), மூத்த மகன் ஆதித்ய பிரதாப குணரத்ன (09), இரண்டாவது மகன் ஆர்ய பிரதாப குணரத்ன (08) மற்றும் இளைய மகள் ஆராத்யா பிரபவி குணரத்ன (06) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.வெளிநாட்டுக்கு செல்வதற்காக பொலன்னறுவையில் உள்ள சொத்துக்களை விற்றுவிட்டு ஹோமாகம மகும்புர பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த குடும்பம் வெளிநாட்டுக்கு செல்வது தொடர்பான வேலை முடியும் வரையில் தந்தை சயனைட் போன்ற விசம் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இதை தொடரந்து, அவரது சீடர்களான இளைஞர் விசம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.உயிரிழந்தவரும், மத விரிவுரையாளரின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற வீட்டில் தங்கி இறுதிச் சடங்கில் கலந்துகொண்டுள்ளார். அம்பலாங்கொட திவோல்புர பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.மஹரகமவில் உள்ள விடுதியொன்றில் இளைஞரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. இதேவேளை, இவரது விரிரைக்கு சென்ற 20 வயதான யுவதியொருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள போதும், இது பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. உயிரிழந்த அனைவரும் ஒரேவிதமான நஞ்சே பாவித்துள்ளதால், அனைவருக்கும் நஞ்சு விநியோகிக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக