செவ்வாய், 31 அக்டோபர், 2023

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

 

பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது

.

குறித்த அறிவிப்பானது, நேற்று இரவு 7.30 முதல் இன்று இரவு 7.30 வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, கேகாலை ,குருநாகல் கண்டி மாவட்டத்திற்கு குறித்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.