திங்கள், 25 செப்டம்பர், 2023

யாழில் பிரபல வர்த்தகரின் மகளான பிரபல பாடசாலை மாணவியின் வீட்டு கட்டிலுக்கு கீழ் பிடிபட்ட மாணவன்!!

 


யாழ் நல்லுார் பகுதியில் பிரபல வர்த்தகரின் வீட்டு அறை ஒன்றின் கட்டிலுக்கு அடியிலிருந்து 18 வயதான பிரபல பாடசாலை மாணவன் பிடிக்கப்பட்டார். கள்ளன் என நினைத்து கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழன் தனது வர்த்தக தேவை நிமிர்த்தம் வர்த்தகர் கொழும்பு சென்றுள்ளார். இதன் பின்னர் அந்த வீட்டில் வர்த்தகரின் மனைவி மற்றும் மனைவியின் தாய், தந்தையும் வர்த்தகரின் பிள்ளைகளும் இருந்துள்ளார்கள். யாழ் நகர்பகுதிக்கு சற்று தொலைவில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஏ.எல் படிக்கும் 18 வயதான வர்த்தகரின் மூத்த மகள் தனது வீட்டின் மேல் தளத்தில் தனி அறையில் தங்கியிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். நேற்று நள்ளிரவு இயற்கை உபாதைக்காக எழுந்த தாத்தா, தனது பேரப்பிள்ளையின் அறைக்குள் வித்தியாசமான முனகல் சத்தம் எழுவதை அவதானித்தானித்துள்ளார். இதனையடுத்து வீட்டின் மேல்தளத்திற்கு செல்ல முற்பட்ட போது வெளிப்பக்க படிகள் உள்ள கதவு திறந்திருந்ததை அவதானித்து அதிர்ந்துள்ளார். கள்ளன் மேல்தள வீட்டினுள் புகுந்து தனது பேரப்பிள்ளையை தாக்குவதாக நினைத்து அந்த இடத்திலிருந்து குக்குரல் இட்டு கத்தியுள்ளார். இதனையடுத்து அயலவர்கள் மற்றும் அயலில் உள்ள நிறுவனம் ஒன்றில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த தனியார் பாதுகாப்பு நிறுவன காவலாளி உட்பட்ட பலர் வர்த்தகரின் வீட்டுக்குள் சென்றுள்ளார்கள். இவ்வளவு அமளிதுமளி நடந்து கொண்டிருந்த போதும் மேல் தளத்தில் தங்கியிருந்த மாணவியின் அறைக்கதவு திறக்கப்படவில்லை. கள்ளன் மேல் தளத்தில் உள்ளதாக அயலில் உள்ளவர்களுக்கு தாத்தா கூறியுள்ளார். இதனையடுத்து மேல்தளத்திற்கு விரைந்த அயலவர்கள் ஏனைய அறைகளை சோதனையிட்ட பின் மாணவி தங்கியிருந்த அறையை தட்டியுள்ளார்கள். நீண்ட நேரமாக மாணவி கதவைத் திறக்காத காரணத்தாலும் மாணவி எந்தவித சத்தமும் கொடுக்காத காரணத்தால் வீட்டில் உள்ளவர்கள் மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதி கத்தத் தொடங்கியுள்ளார்கள். அதே நேரம் குறித்த அறைக் கதவு அயலவர்களால் உடைக்கப்பட்டது.

இவ்வளவு சம்பவமும் நடந்த போதும் மாணவி போர்த்திக் கொண்டு துாக்கமாக இருப்பதாக நடித்துக் கொண்டு படுத்திருந்ததாக அயலவர்கள் மூலம் தெரிவருகின்றது. மாணவியை தட்டி எழுப்பி ”எதற்காக சத்தமிட்டுக் கொண்டிருந்தாய்” என தாத்தா கேட்டுள்ளார். தான் கனவில் சிலநேரம் ஏதாவது உளறியிருக்கலாம் என மாணவி கூறியதுடன் அங்கிருந்தவர்களை வெளியே செல்லுமாறு கத்தத் தொடங்கியுள்ளார். இந் நிலையில் மாணவியின் தாய் கட்டிலுக்கு அடியில் தற்செயலாக பார்வையிட்ட போது அங்கு ஒருவன் மேலாடைகள் அற்ற நிலையில் ஜட்டியுடன் இருப்பதை அவதானித்து அலறியுள்ளார். இதனையடுத்து கட்டிலுக்கு கீழ் இருந்த மாணவன் அயலவர்களால் இழுத்து வரப்பட்டு நையப்புடைக்கபட்டு விசாரணை மேற் கொள்ளப்பட்டது. அதன் போதே தான் மாணவியின் காதலன் என குறித்த மாணவன் அவர்களுக்கு தெரிவித்துள்ளான். இதன் பின்னர் மாணவியிடமும் விசாரணைகளை குடும்பத்தினர் மேற்கொண்ட போதே மாணவன் கூறியது உண்மை என தெரியவந்தது.

குறித்த மாணவன் யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் ஏ.எல் படிப்பவர் எனவும் மாணவியும் அவனும் ஒரே ரியூசனில் கற்பவர்கள் எனவும் அதன் மூலமாக காதல் வந்ததாகவும் மாணவன் கூறியுள்ளார். மாணவியே தன்னிடம் வருமாறு கூறுி அழைத்ததாகவும் அதனாலேயே தான் அங்கு வந்ததாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.  தனது தாய், தந்தைக்கு தனது நண்பனான இன்னொரு மாணவனின் வீட்டில் தங்கி கற்க போவதாகத் தெரிவித்தே மாணவன் தனது வீட்டிலிருந்து வந்த விடயம் தெரியவந்தது.

அதன் பின்னர் முகம் மற்றும் தலைப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் குறித்த மாணவன் மாணவியின் தாத்தாவால் காரில் ஏற்றிச் செல்லப்பட்டு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்கு அனுமதித்ததாக அப்பகுதியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் குறித்த மாணவன் பிடிபட்டு தாக்கப்பட்ட போது அயலவர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு ஊழியர் போன்றவர்களால் தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை அழிக்குமாறு தாத்தா அவர்களிடம் சென்று கேட்டு அழித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.