திங்கள், 25 செப்டம்பர், 2023

பிருந்தானியாவில் பாலசங்கர் என்ற இந்த தமிழனை கண்டால் ஓடித் தப்பவும்!! பொலிசார் எச்சரிக்கை!!

 


பிரித்தானியாவின் கிழக்கு லண்டலில் காப்பகம் ஒன்றில் இருந்து தப்பியோடிய தமிழர் தொடர்பில் மாநகர பொலிசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அந்த நபர் வன்முறையில் ஈடுபடக் கூடியவர் என்றும், அவரை நெருங்க வேண்டாமென்றும் பொலிசார் எச்சரித்துள்ளனர். 43 வயதான பாலசங்கர் நாராயணன் என்ற அந்த நபர் செப்டம்பர் 21ம் திகதி மாயமாகியுள்ளார்.பாலசங்கர் நாராயணன் கடைசியாக வெள்ளை மற்றும் நீல வண்ணத்தில் சட்டையுடன் கருப்பு டிராக்சூட் கால்சட்டையும் கருப்பு பேஸ்பால் தொப்பியும் அணிந்து காணப்பட்டதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.லண்டனில் நியூஹாம், கிரீன்ஃபோர்ட், ஹேமர்ஸ்மித், ஹைகேட் மற்றும் இல்ஃபோர்ட் பகுதியிலும் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியிலும் பாலசங்கர் நாராயணன் காணப்பட வாய்ப்பிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.மேலும், பாலசங்கர் நாராயணன் காப்பகத்தில் இருந்து தப்புவது இது முதல் முறையல்ல என்றே கூறப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்திலும், பொலிசார் இவர் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். அத்துடன் 2021ல் இவர் ஒருமுறை காப்பகத்தில் இருந்து மாயமாகியுள்ளார். லண்டன் ரயில்களில் இவர் பயணிக்க அதிக வாய்ப்பிருப்பதாக சந்தேகிக்கும் பொலிசார், பொதுமக்களுக்கும் ரயில்வே ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அவரை அடையாளம் காண நேர்ந்தால், உடனடியாக தகவல் அளிக்கவும் கோரியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.