ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் நேற்று (22) யுவதியொருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து பொலிசார் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.சில விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதும், உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்த இலங்கை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்காதது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.இந்த பல்பொருள் அங்காடியில் யுவதி ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக