வியாழன், 4 ஜனவரி, 2024

விசாரணை செய்த பொலிஸ்காரரையே மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம்…. பொலிஸ் நிலையத்தில் சன்னதம் ஆடிய மஹிந்தானந்தவின் மச்சான்!

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மைத்துனர் கம்பளை பொலிஸ் நிலையத்தில் பெரும் ரகளையில் ஈடுபட்ட தகவல் வெளியாகியுள்ளது. தனது இரண்டு மகன்களை பொலிசார் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்திய விவகாரத்தில் அவர் சன்னதம் ஆடியுள்ளார்.மஹிந்தானந்தவின் மைத்துனர் குடிபோதையில் ஒரு குழுவுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று OIC யை அச்சுறுத்தியுள்ளார். இதை தொடர்ந்து, மஹிந்தானந்தவின் மைத்துனரின் பிள்ளைகளை சோதனையிட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை அழைத்த பொலிஸ் நிலையத்தின் OIC, இரண்டு பிள்ளைகளிடமும் மன்னிப்பு கேட்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், இதை மறுத்த கான்ஸ்டபிள், யாராவது மன்னிப்புக் கேட்க வேண்டுமென காவல் நிலையத்திற்கு வந்தால் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னைத்தானே சுட்டுக் கொள்வதாக கான்ஸ்டபிள் மிரட்டியுள்ளார். அத்துடன், சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை எச்சரிக்காத குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் கடிதம் எழுதியுள்ளார். இதேவேளை, கம்பளையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊடகமொன்றக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, தனது சகோதரியின் மகளின் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் பொலிஸாரால் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் தந்தை விசாரணைகளை மாத்திரமே மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். “எனது சகோதரியின் மகள் வசிக்கும் வீட்டிற்கு ஒரு பொலிஸ் குழு வந்து அவரது இரண்டு சிறிய குழந்தைகளை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தியது. வேலை முடிந்து வீட்டிற்கு வந்த குழந்தைகளின் தந்தை, சிறு குழந்தைகளை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தியது ஏன் என விசாரிக்க காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். நடந்த ஒரே சம்பவம் இதுதான். இன்றுதான் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பினேன். அதனால் இந்த சம்பவம் குறித்து எனக்கு அதிகம் தெரியாது,” என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.