திங்கள், 30 அக்டோபர், 2023

மருதானையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!


மருதானை ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் உள்ள பாலம் ஒன்றிற்கு அருகிலிருந்து இனந்தெரியாத ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை குறித்த பாலத்திற்கு அருகில் நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக மருதானை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர். இந்நிலையில் மீட்கப்பட்ட சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் யாரென உறுதிப்படுத்தப்படவில்லையென தெரிவித்த பொலிஸார், உயிரிழந்தவர் 30 வயதுடையவரெனவும் 5 அடி 8 அங்குல உயரமுடைய மெல்லிய உடல்வாகுடையவர் எனவும் தாடியுடன் காணப்படும் நபர் ஊதா நிற காற்சட்டை மற்றும் நீல நிற டி சேர்ட் அணிந்தவர் எனவும் தெரிவித்தனர். சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.