வியாழன், 26 அக்டோபர், 2023

பெண் நோயாளியின் மோதிரங்களை ஆட்டைய போட்ட தாதி – காட்டி கொடுத்த நாய்.


 கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் அணிந்திருந்த நான்கு மோதிரங்களை திருடிய சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையின் தாதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் தனது வீட்டுப் பணிப்பெண்ணுடன் கட்டுகஸ்தோட்டை – கொண்டதெனிய பகுதிக்கு நேற்று (25) சென்று கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த பெண் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன்பின் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

கட்டுகஸ்தோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குறித்த பெண் நோயாளி பல மோதிரங்களை அணிந்திருந்ததை கண்ட வைத்தியசாலை ஊழியர்கள், கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது மோதிரங்களை காணவில்லை என தெரியவந்தது.

இது தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொலிஸூக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், பொலிஸ் நாயை அனுப்பி மோப்பம் பிடித்தனர். அந்த நாய் சந்தேகப்பட்ட தாதியின் அருகில் சென்று நின்று கொண்டது.

அதன்பின்னர் அந்த தாதியை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.