யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பயணிகள் பேருந் துகள் தொடா்ச்சியாக விபத்துக்களில் சிக்கிவரும் நிலையில், உயிாிழப்புக்களும், படு காயங்களும் அன்றாட வழக்கமாகியிருக்கின்றது.இந்நிலையில், மக்கள் என்ன நம்பிக்கையில் பேருந்துகளில் பயணிக்க முடியும்? என சமூக ஆா்வலா்களிடமிருந்து சரமாாியான கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்ற து. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குச் செல்லும் அதி சொகுசு பேருந்துகளின் அண்மைக்கால விபத்தால் இதுவரை சுமார் ஐம்பது பேர் வரை காயமடைந்துள்ளனர். 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். பல்வேறு பகுதிகளிலும் கொழும்பு பயணத்துக்கான ஆசன முற் பதிவுகள் நடைபெற்று மாலை 7.30 மணிதொடக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கான பயணம் ஆரம்பிக்கப்படுகிறது.
சொகுசுப் பேருந்து என்ற படியால் இலகுவாக உட்கார்ந்தும் பயணிகள் சாரதியை நம்பியும் தூங்கி விடுகின்றனர்.ஆனால், கூடிய வேகத்தால் கடந்த மூன்று மாதங்களுக்குள் சுமார் 5 பேருந்துகள் பெரும் விபத்துக்கு உள்ளாகியுள்ளன. 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து வீதியில் தரித்து நின்ற டிப்பருடன் மோதி பாரிய விபத்துக்குள்ளானதில் சுமார் 15 பயணிகள் ஆபத்தான நிலையில் கிளி நொச்சி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள் ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிப் பய ணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.அத்துடன், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மஹவெவ, சிலாபம் பகுதியில் வைத்து பேருந்து மின்மாற்றி ஒன்றில் மோதியதால் இந்த விபத்து நடந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்தொன்று ஏ–9 வீதியின் மாங்குளம் பகுதியில் வைத்து விபத்துக் குள்ளாகியது. இந்த சம்பவத்தில் சாரதியின் உதவியாளர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பய ணித்த சொகுசு பேருந்து ஒன்று பாதையை விட்டு விலகி, நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள் ளாகியது.
நாத்தாண்டிய வலஹப்பிட்டிய பகுதியில் இடம் பெற்ற இந்த விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர் . மேலும் 19 பேர் காயமடைந்தனர் .இவ்வாறு தொடர்ச்சியாக அதி சொகுசு பேருந்துகள் விபத்துக்கு உள்ளாவதால், யாரை நம்பி பேருந்தில் பயணிப்பது என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக