ஞாயிறு, 3 மார்ச், 2019

யாழில் 7வயதுச் சிறுமி 14வயதான 2 சிறுவர்களால் வல்லுறவு!!

7 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கொடிகாமம் பொலிஸார்
தெரிவித்தனர்.

சிறுமி கல்வி கற்கும் பாடசாலை நிர்வாகத்தால் வழங்கப்பட்ட தகவலின் அடிபடையில் விசாரணைகளின் பின்னர் சிறுவர்கள் இருவரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

“கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடத்தில் அயல் வீட்டில் வசிக்கும் 7 வயதுச் சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்படுத்தியுள்ளார். அவருடன் மற்றொரு சிறுவனும் இணைந்தே சிறுமியை துஷ்பிரோகத்துக்கு உள்படுத்தியுள்ளனர். அருகிலுள்ள ஆலயம் ஒன்றுக்கு சிறுமியை அழைத்துச் சென்று சிறுவர்கள் இருவரும் இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளனர்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரமே சிறுமி, பாடசாலையில் இந்த விடயத்தை தெரியப்படுத்தினார். அதுதொடர்பில் பாடசாலை நிர்வாகத்தால் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டார்.

சிறுமி 5 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதுதொடர்பில் சிறுமியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரது அயல் வீட்டில் வசிக்கும் 14 வயதுச் சிறுவன் மற்றுமொரு 15 வயதுச் சிறுவன் என இருவர் கைது செய்யப்பட்டனர்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.