சனி, 6 ஜனவரி, 2024

முல்லைத்தீவில் வாள்கள், போதைப் பொருட்களுடன் சிக்கியவனுக்கு நடந்த கதி!!

 


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  விசுவமடு பகுதியில் இரண்டு  வாழ்கள் கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் நேற்று (05) மாலை  கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில்  புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு  கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசுவமடு பகுதியில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி M B R கேரத் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட போது  4 பைக்கற்றுக்களில் 20 கிராம் கஞ்சா போதைப் பொருளுடனும் 600 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் இரண்டு வாள்களுடனும் குறித்த  இளைஞர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த  சந்தேக நபரை முல்லைத்தீவு நீதிமன்றில்  முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.