ஞாயிறு, 7 ஜனவரி, 2024
யாழில் போதை மாத்திரை விற்ற குற்றத்தில் மருந்தக ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது!!
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் யாழில் உள்ள மருந்தகம் ஒன்றின் ஊழியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், குறித்த மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
"யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் வியாபார நோக்கத்துடன் ஆயிரத்து 100 போதை மாத்திரைகளுடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பிரபல மருந்தகத்தின் ஊழியர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
அதனடிப்படையில் மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் மேலும் இரண்டு பெட்டிகளில் சுமார் 250 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. குறித்த மாத்திரைகள் வலி நிவாரணியாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் இருவரும் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக