வெள்ளி, 5 ஜனவரி, 2024

நைற்றியுடன் நின்ற போது 75 வயதான பாட்டி போல் தெரியவில்லை!! ஆசையை அடக்க முடியவில்லை!! வல்லுறவு செய்த சிங்களவனின் வாக்குமூலம்!!

 


கொழும்பு 07, விஜேராம வீதியிலுள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த 75 வயதுடைய இசை ஆசிரியையை வன்புணர்வுக்குள்ளாக்கி, கம்பியால் கழுத்தை நெரித்து கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அருகில் உள்ள இரண்டு வீடுகள் மற்றும் பல நிறுவனங்களின் பாதுகாப்பு கமெராக்களை கவனமாக ஆய்வு செய்ததன் விளைவாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருந்துவத்தை, தாராவத்தை சேரிப்பகுதியில் சில காலமாக வசித்து வந்த சந்தேகநபர், தற்போது அந்த வீடுகள் இடிக்கப்பட்டதன் பின்னர் தெமட்டகொட சியபத் செவன வீட்டுத் தொகுதியின் 6வது மாடியில் உள்ள வீடொன்றில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருமணமாகாத இந்த நபர் தனது மாமியார், அவரது கணவர் மற்றும் அவர்களது பிள்ளை வசிக்கும் வீட்டில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர் சிகரெட் கூட புகைக்காதவர் எனவும் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர் குருந்துவத்தையில் உள்ள வீடுகளுக்குச் சென்று வீட்டுக் கதவு திருத்துதல் மற்றும் தோட்டங்களை சுத்தம் செய்து வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த நபர் பெண் கொல்லப்படுவதற்கு முன்னர் கடந்த 15ஆம் திகதி இந்த வீட்டிற்கு வந்து தோட்டத்தை சுத்தம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

“வயசானாலும் அந்த மேடம் மிக அழகாக இருந்தார். அவரை பார்க்க வயதானவராக தெரியவில்லை. மேடத்துடன் உறவுகொள்ள ஆசை எழுந்தது. வீட்டில் யாரும் இல்லை என்பதை முதல் நாளே தெரிந்து கொண்டேன்“ என சந்தேக நபர் விசாரணையின் போது தெரிவித்தார்.

பெண் கொலை செய்யப்பட்ட தினத்தன்றும் இந்த நபர் தோட்டத்தை சுத்தம் செய்ய வந்ததாகவும், வீட்டின் கேட்டை திறந்து உள்ளே அனுமதித்த பெண்ணே வீட்டின் உரிமையாளர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அன்று அந்த நபர் அரைக்காற்சட்டை மற்றும் மெரூன் கலர் டி-சேர்ட் அணிந்து அங்கு வந்தது கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. அவர் காலை 8:00 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்து 10:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அப்போதுதான் அவரது கொலை நடந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

“நான் தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். மேடம் எனக்கும் தேநீர் தயாரித்தார். சாப்பிட ஒரு ரொட்டித் துண்டைக் கொடுத்தார். மேடம் நைட்டி அணிந்திருந்தார். மேடம் மீது இருந்த ஆசையால் ஒரு பெட் ஷீட்டை எடுத்து மேடம் தலையில் போட்டு சுற்றி தரையில் விழுத்தினேன். அவருடன் உறவு கொண்டேன். மேடம் போராடினார். ஆனால் கத்த முடியவில்லை. ஏனென்றால் அவர் முகத்தில் படுக்கை விரிப்பைப் போட்டிருந்தேன்“ என பொலிஸாரின் விசாரணைகளின் போது சந்தேகநபர் மேலும் தெரிவித்துள்ளார்.

“மேடம் இதை யாரிடமாவது சொல்லிவிடுவார்களோ, போலீஸ் என்னைக் கைது செய்துவிடுவார்களோ என்று பயந்தேன். அதனால் மேடத்தை கொல்ல நினைத்தேன். அப்போது தரையை சுத்தம் செய்யும் இயந்திரத்தை பார்த்தேன். அதை வெளியே இழுத்து அதன் கம்பியை மேடம் கழுத்தில் போட்டேன்“ என சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கழுத்தை நெரித்ததில் ஃப்ளோர் பொலிஷரின் கம்பி உடைந்தது. கடந்த 15ஆம் திகதி அவரது சடலம் போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டபோது, ​​தரையை பொலிஷ் செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனால் வீட்டில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற பின்னர், சந்தேக நபர் காலை 10:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி மாலை 3:00 மணியளவில் திரும்பியுள்ளார். வந்ததும் இரண்டு காஸ் சிலிண்டர்களையும், கொலையுண்ட பெண் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசியையும், மடிக்கணினியையும் முச்சக்கரவண்டியில் வைத்துக் கொண்டு தெமட்டகொடைக்குச் சென்றுள்ளார். குறித்த பொருட்கள் தெமட்டகொட பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

தோட்டங்களை சுத்தம் செய்யச் செல்லும் இவர், வாய்ப்புக் கிடைக்கும் போது வீடுகளில் உள்ள பெறுமதியான பொருட்களைக் கூட திருடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது. யாரும் கவனிக்காத வீடுகளில் விலையுயர்ந்த பொருட்களை திருடுவதால் அவர் மீது போலீசில் புகார் எதுவும் வரவில்லை. இந்த பெண்ணை கொன்றுவிட்டு வீட்டில் யாரும் இல்லாததால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வீட்டில் இருந்த இரண்டு காஸ் சிலிண்டர்களை திருட வந்துள்ளார்.

அந்த பெண் இறந்த விதத்தின் படி, மின்சாரம் தாக்கியதால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் முதலில் சந்தேகித்தாலும், சந்தேக மரணம் என விசாரணை தொடங்கியது. பிரேத பரிசோதனையில் கூட இது தொடர்பாக வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டது. தடயவியல் வைத்தியரால் உடல் உறுப்புகள் தடயவியல் நிபுணருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு, அவர் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாக சட்ட வைத்தியர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதன்படி, குருந்துவத்தை பொலிஸாருக்கு மேலதிகமாக, இந்த மரணம் தொடர்பான விசாரணை கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கொழும்பு தெற்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிரஞ்சன் அபேவர்தனவினால் வழங்கப்பட்டது. நீண்ட விசாரணையின் பின்னர், சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

மித்ராணி பெர்னாண்டோ ஸ்மித் என்ற நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இவர் திருமணத்தின் பின்னர் கணவருடன் குருந்துவத்தையில் உள்ள இந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தொழிலதிபரான இவரது கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் இந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 15ஆம் திகதி இவரைக் கொன்ற சந்தேகநபர் வீட்டின் கதவு, ஜன்னல்கள் திறந்திருந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளார். இதனால், மாலையில் இருந்தே அவரது வீட்டின் கதவுகள் திறந்திருந்தன. உயிரிழந்தவரன் இளைய சகோதரர் ஒருவர்- பொறியியலாளராக பணியாற்றுகிறார்- தனது காரை இந்த வீட்டின் தோட்டத்தில் நிறுத்துவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர் மொரட்டுவையில் வசிப்பதாக கூறப்படுகிறது. அன்று இரவு, அவரது வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறந்திருந்ததையும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதையும் பொறியாளர் கவனித்தார். அவரே பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.

அந்தச் செய்தியின்படி குருந்துவத்தை பொலிஸார் வந்தனர்.

சோதனையின் போது, ​​அவரது உடல் வீட்டின் தரையில் முகம் குப்புறக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக செயல்பட்ட போலீசார், 1990 நோயாளர் காவு வண்டியை அந்த இடத்திற்கு கொண்டு வந்தனர். அந்த பெண்ணை பரிசோதித்த நோயாளர் காவு வண்டிக்குழு, அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.

அவர் விழுந்த இடத்தில் பல ரத்தக் கறைகளும் இருந்தன. பிரேத பரிசோதனையில் நெஞ்சு பகுதியில் காயங்கள் ஏதும் இல்லை என தெரியவந்தது. வாயில் இருந்து வெளியேறிய ரத்தம் மார்புப் பகுதியில் பாய்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது. கழுத்தை நெரித்ததில் அவரது வாயில் இருந்து ரத்தம் வழிந்தது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த பெண்ணுக்கும் குழந்தைகள் இல்லை என்று போலீசார் கூறுகின்றனர்.

அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதும், சமையலறையில் மூன்று கழுவப்படாத தேநீர் கோப்பைகளையும் போலீசார் கண்டுபிடித்தனர். சந்தேக நபர் அந்த கோப்பையில் தேநீர் அருந்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த தேநீர் கோப்பைகளில் சில கைரேகைகளையும் போலீசார் கண்டுபிடித்தனர். சந்தேக நபரின் கைரேகைகள் மற்றும் தேநீர் கோப்பை கைரேகைகள் பரிசோதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

தேநீர் கோப்பைகள் தவிர சமையல் அறையில் 09 ரொட்டிகளும் காணப்பட்டன. இந்த ரொட்டியை ஆசிரியர் காலை உணவுக்காக தயாரித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண் திறமையான பியானோ ஆசிரியர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவரிடம் பியானோ கற்றுக் கொள்ள பலர் இந்த வீட்டிற்கு வருவதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.