யாழ் தெல்லிப்பழைப் பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக்குழு மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்துக்கு அண்மையாக கனி ரௌடிக்குழுவை சேர்ந்த ஒருவர் மீது, வாகனத்தில் வந்த ஜெகன் ரௌடிக்குழுவினர் வாளால் வெட்டியுள்ளனர்.அப்போது, கடமை நிமித்தம் வந்த போக்குவரத்து பொலிசார் அவர்களை விரட்டிச் சென்றுள்ளனர். ஜெகன் குழு ரௌடிகள் தப்பியோடிய போது, வாகனத்தை நோக்கி 4 தடவை துப்பாக்கிச்சூடு நடத்தினர். என்றாலும், ரௌடிகள் தப்பியோடி விட்டனர்.தப்பியோடும் போது வாள்களை வீசியெறிந்துள்ளனர். வட்டிக்கு பணம் பெற்றவர்களை கடத்திச் சென்று அடித்து சித்திரவதை செய்யும் வீடியோக்கள் கடந்த வருடம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் ஜெகன் ரௌடிக்குழுவுடன் தொடர்புடையவர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கீழே உள்ள குறித்த வீடியோ காட்சியில் உள்ள ரியா கிறீம் கவுஸ்சிற்குள் ரவுடிகள் புகுந்து மற்றைய ரவுடிகள் யாராவது ஐஸ்கிறீம் சாப்பிட வந்துள்ளார்களா? என தேடிச் சென்ற காட்சிகளே உள்ளதாகவும் கடைக்குள் எந்தவித வாள்வெட்டுச் சம்பவங்களும் நடக்கவில்லை என அறிய முடிகின்றது, குறித்த ரவுடிகளின் அட்டகாசத்தால் அப்பாவி கடைக்காரரின் வியாபார நடவடிக்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீடியோவைப் பார்வையிட இங்கே அழுத்தி எமது யூரியூப் சனலை SUBSCRIBE செய்து பார்வையிடுங்கள் வாசகர்களே…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக