திங்கள், 18 டிசம்பர், 2023
முல்லைத்தீவில் சாராயம் குடிக்க வேண்டாம் என மனைவி ஏசினார்!! புருசன் தீயில் எரிந்து மரணம்!!
மனைவி மது அருந்த வேண்டாம் என்று தடுத்ததால் கணவன் பெறாறோலை ஊற்றி தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கள்ளப்பாடு – முல்லைதீவைச் சேர்ந்த மரியதாஸ் பற்றிக்ஜோன்சன் (வயது 47) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 15ஆம் திகதி குறித்த நபர் வீட்டில் சாப்பிட்டு விட்டு மது அருந்துவதற்காக வெளியே சென்றபோது அவரை அவரது மனைவி தடுத்துள்ளார். இதன்போது அத்துமீறி கடற்கரைக்கு சென்ற அவர் வள்ளத்தின் எஞ்சினுக்காக வைத்திருந்த பெற்றோலை எடுத்து உடலில் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
இந்நிலையில் அவர் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அன்றையதினமே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக