யாழ் வலிகாமம் பகுதியில் பிரபல பாடசாலை மாணவி இன்று காலை தற்கொலை முயற்சி ஒன்றிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். நேற்று இரவு வெளியாகிய க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற குறித்த மாணவி விஞ்ஞான பாடத்தில் பி பெறுபேறு எடுத்துள்ளார். இதனால் மருத்துவத்துறைக்கு குறித்த பாடசாலையில் அனுமதிக்கமாட்டார்கள் என கூறி மாணவியின் தாயாரும் சுவிஸ்லாந்தில் உள்ள மாணவியின் சித்தியும் அதிகாலையில் இருந்தே கடுமையான முறையில் ஏசியதாக தெரியவருகின்றது. இதன் காரணமாக தாயும் தந்தையும் வேலைக்கு சென்ற பின்னர் குறித்த மாணவி அறையைப் பூட்டி துாக்கில் தொங்க முற்பட்டதாகத் தெரிவருகின்றது. மாணவியின் பாட்டி இதனை அவதானித்து குக்குரல் இட்டபோது அயலவர்கள் குறித்த மாணவியை அறையை உடைத்து உள்ளே புகுந்து காப்பாற்றியுள்ளார்கள். மாணவி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக