திங்கள், 18 டிசம்பர், 2023

யாழில் கணவனுடன் சண்டையிட்ட மனைவி தற்கொலை!!

 குடும்ப தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயன்ற நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியை சேர்ந்த 41 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.


கடந்த 07ஆம் திகதி மது போதையில் வீட்டுக்கு வந்த கணவர் , மனைவியுடன் முரண்பட்டுள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியேறி சென்று, மீண்டும் வீட்டுக்கு திரும்பிய போது , மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றி , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.