சனி, 2 டிசம்பர், 2023

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!!

 


யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சா போதைப்பொருளுடன், கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , பேருந்து நிலையத்தில் நின்ற இளைஞனை கைது செய்து சோதனையிட்ட போது, இளைஞனிடம் இருந் ஒரு கிலோ 480 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர். அதனை அடுத்து இளைஞனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.