ஞாயிறு, 10 டிசம்பர், 2023
பருத்தித்துறையில் கைதான 25 தமிழக கடற்தொழிலாளர்களும் விளக்கமறியலில்!!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து, கடற்தொழிலில் ஈடுபட்ட 25 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையின் போதே இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 25 தமிழக கடற்தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களின் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டன
கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்தொழிலாளர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுத்த பின்னர், கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை பதில் நீதவான் முன்னிலையில் கடற்படையினர் முற்படுத்திய போதே, கடற்தொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக