ஞாயிறு, 10 டிசம்பர், 2023
காணாமல் போன 15 வயது மாணவி ஜேசுதாசன் ரஷ்மி சடலமாக மீட்பு!
காணாமல் போன பாடசாலை மாணவியின் சடலம் கொலன்ன, உள்ளிந்துவெவ பிரதேசத்தில் கிங் கங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொலன்ன பொலிஸார் தெரிவித்தனர்.
இலக்கம் 04, பனீல்கந்த, உள்ளிந்துவெவைவைச் சேர்ந்த பதினைந்து வயதுடைய யேசுதாசன் ரஷ்மி பபசரா என்ற மாணவியே காணாமல் போயுள்ளார்.
இவர் அனில்கந்த தமிழ் வித்தியாலய மாணவியாவார்.
இவர் 8ஆம் திகதி மாலை ஐந்து முப்பது மணியளவில் காணாமல் போனார். அன்றைய தினம் அவர் காணாமல் போனமை தொடர்பில் குடும்ப உறவினர்கள் கொலன்ன பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர். பின்னர், உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் அவரது சடலத்தை கிங் கங்கையில் கண்டனர்.
அவர் இறந்த விதம் இன்னும் வெளிவரவில்லை. கொலன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக