வியாழன், 2 நவம்பர், 2023

ஆட்டோவில் கிடந்த ஆயரக்கணக்கான பணம்!! பொலிசாரிடம் ஒப்படைத்த பெண்!!

 


அனுராதபுரத்தில் முச்சக்கரவண்டியில் விழுந்து கிடந்த பணப்பையை எடுத்து அதிலிருந்த 98,000 ரூபாய் பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.பணப்பையை கண்டெடுத்த பெண் அதனை அனுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகரிடம் கையளித்துள்ளார். பின்னர் பொலிஸார் பணப்பையின் உரிமையாளரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.தமது வீட்டிற்கு மின்சாதனங்களை கொண்டு செல்ல வந்தபோது பணப்பை தவறவிட்டதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் பொருளாதார நெருக்கடியான நேரத்தில் இவ்வாறான ஒரு நல்ல செயலை செய்ததற்காக குறித்த பெண்ணுக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது நன்றிகளை தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.