வியாழன், 30 நவம்பர், 2023

வவுனியா செட்டிக்குளத்தில் தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு!!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று (30) இடம்பெற்றுள்ளது. செட்டிகுளம் பிரதான வீதியில் குறித்த தம்பதிகளின் மகன் வியாபார நிலையம் ஒன்றை நடத்திவரும் நிலையில் அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் குறித்த தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (29) இரவு வழமைபோல அவர்களது மகன் வியாபார நிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த தம்பதிகள் வியாபார நிலையத்திற்கு பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச்சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று (30) காலை வியாபார நிலையத்தை திறப்பதற்காக சென்ற மகன் தனது தாயும் தந்தையும் இரத்த வெள்ளத்தில் கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த பசுபதி வர்ணகுலசிங்கம் (72) என்ற முதியவரும், அவரது மனைவியான (68) கனகலட்சுமி என்பவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வெட்டிக்கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் குறித்த சம்பவத்தில் 5 பவுண் பெறுமதிமிக்க தங்கநகை ஒன்றும் காணாமல் போயுள்ளதாக தெரிவித்தனர். இதேவேளை, குறித்த சம்பவம் இன்று (30) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என்றும், வீட்டில் திருட வந்தவர்களை அவர்கள் கண்டதால் திருடர்கள் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.