வெள்ளி, 24 நவம்பர், 2023
யாழில் திடீரென எரிந்து கருகிய ஹயஸ் வாகனம்!! உரிமையாளர் படுகாயம்!!
யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் சிறிய ரக வான் ஒன்று திடீரென தீப்பிடித்து, முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
வானில் பற்றிய தீயினை அணைக்க முயன்ற வானின் உரிமையாளரான தர்மபாலன் சுதாகரன் (வயது 45) என்பவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வான் , பாடசாலை சேவையில் ஈடுபட்டு வந்தது எனவும் , நேற்றைய தினம் வியாழக்கிழமை பாடசலை சேவையில் ஈடுபட்ட பின்னர் வாகனத்தை வீட்டில் நிறுத்தி வைத்திருந்த போது ,வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. அதனை அவதானித்த உரிமையாளர் தீயினை அணைக்க போராடிய போதிலும், வாகனம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
தீயினை அணைக்க முற்பட்ட உரிமையாளரும் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக