புதன், 29 நவம்பர், 2023
யாழ்.உரும்பிராய் காளி கோவிலில் அம்மன் சிலை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருட்டு
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள காளி கோவில் ஒன்றில் இருந்து பெறுமதியான அம்மன் சிலை உள்ளிட்ட பல இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருட்டு போயுள்ளன.
வழமை போன்று இன்றைய தினம் புதன்கிழமை , பூசகர் ஆலயத்தை திறந்து பூஜை வழிபாடுகளை செய்ய முயன்ற போதே , நேற்றைய தினம் இரவு ஆலயத்தினுள் திருடர்கள் புகுந்து திருட்டில் ஈடுபட்டமை தெரிய வந்துள்ளது.
அதனை அடுத்து பூசகர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டில் , சுமார் 4 இலட்ச ரூபாய் பெறுமதியான நாலடி உயரமான ஐம்பொன்னிலான அம்மன் சிலை , அம்மன் தாலி மற்றும் அம்மனின் தேடு உள்ளிட்ட ஒன்றரை பவுண் நகை, உண்டியலில் இருந்த ஒரு தொகை பணம் என்பவற்றையே திருடி சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக