சனி, 25 நவம்பர், 2023
அரச ஊழியர்களுக்கு 5000 /- சம்பள உயர்வு!
ஜனவரியில் அரசு ஊழியர்களுக்கு 5,000 சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியத்தை 2,500 ரூபாவாக ஆக உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
“அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 5,000 ரூபாய் வரையிலாவது கொடுக்க வேண்டும்.
இதற்கு மாதம் 65,000 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாய் கொடுப்பனவை ஜனவரி முதல் வழங்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கும் 18,000 இலட்சம் ரூபாய் தேவைபடுகிறது.
சுமார் ஏழு லட்சம் அரசு ஓய்வூதியர்கள் உள்ளனர். இதை ஜனவரி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக