புதன், 1 நவம்பர், 2023

வெல்லவாய பிரதான வீதியில் 5 பேருடன் ஆற்றில் பாய்ந்த கார்!


 எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டாம் தூண் பிரதேசத்தில் கிரிந்தி ஓயாவின்  கிளை ஆற்றில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.  

இந்த விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவர் உப பொலிஸ் பரிசோதகர் எனவும், மற்றொருவர் விமானப்படை வீரர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டாம் தூண் பிரதேசத்தில் கிரிந்தி ஓயாவின்  கிளை ஆற்றில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.  

இந்த விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவர் உப பொலிஸ் பரிசோதகர் எனவும், மற்றொருவர் விமானப்படை வீரர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.