திங்கள், 20 நவம்பர், 2023

யாழில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!!

 


யாழ்ப்பாணத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

காங்கேசந்துறை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காரைநகர் சாம்பலோடை சிவகாமி அம்மன் ஆலய வீதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து 101 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அவற்றின் பெறுமதி சுமார் 3 கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. 

மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.