மூளைச்சாவு அடைந்த இலங்கையர் ஒருவரின் முக்கிய உறுப்புகள் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் இத்தாலியில் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
35 வயதான ஷமில பெர்னாண்டோ சிசிலியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவடைந்துள்ளார்.
இதனையடுத்து மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் சம்மதத்துடன், அவரது சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல் மற்றும் கண்களை அகற்றி தேவைப்படுபவர்களுக்கு வைத்தியர்கள் மாற்றியுள்ளனர்.
இலங்கையின் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த ஷமில பெர்னாண்டோ இத்தாலியில் பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் விமானப்படை வீரரான ஷமில, உடல் உறுப்பு தானம் மூலம் ஏனையவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது விருப்பத்திற்கு மதிப்பளிப்பதில் மனைவி முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக