கடந்த 27ஆம் திகதி புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள ஆடையகம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, 9க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. குறித்த தீப்பரவலில் 23 பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த, தலவாக்கலை வட்டகொடை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக