செவ்வாய், 31 அக்டோபர், 2023

மக்கர் செய்யும் பொன்சேக்கா - சரியான பாதைக்கு கொண்டுசெல்ல தீவிர முயற்சி!

 


ஐக்கிய மக்கள் சக்தியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தவிசாளர் சரத் பொன்சேகாவை சரியான பாதையில் கொண்டு செல்லும் பணியை ஆரம்பித்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று -30- தெரிவித்தார்.


“பீல்ட் மார்ஷல் பொன்சேகாவுடன் எம்.பி.க்கள் குழு ஒன்று ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதுடன், அவரை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு தேவையான வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவைப் போன்று பீல்ட் மார்ஷல் இறுதியாக சரியான பாதைக்கு வருவார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.


“நீங்கள் ஒரு அரசியல் கட்சியில் இருக்கும்போது பொது அறிக்கைகளை வெளியிடும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் உள்ளன. எங்களின் தனிப்பட்ட கருத்துகளை நாம் எப்போது வேண்டுமானாலும் முன்வைக்க முடியாது” என அண்மையில் பொன்சேகா வெளியிட்ட பல பகிரங்க அறிக்கைகளை குறிப்பிட்டு அத்தநாயக்க கூறினார்.


பொன்சேகா சஜித்தின் வேட்புமனுவை ஆதரிப்பாரா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் தீர்மானத்தை கட்சி மாற்றப் போவதில்லை என திஸ்ஸ அத்தநாயக்க பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.