செவ்வாய், 31 அக்டோபர், 2023

மூன்று சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை அதிபரான பௌத்த பிக்கு..! நீதிமன்றத்தின் நடவடிக்கை..!

 


மூன்று  சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் மற்றும் பல சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்ததை தொடர்பில்  பாடசாலை ஒன்றின் அதிபரான பௌத்த பிக்கு ஒருவரின் குரல் பதிவுகள்  பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலன்னறுவை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஹிங்குராக்கொட நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.   

இந்தச் சம்பவம் தொடர்பான முழு அறிக்கை கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் சமர்பிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

நீதிமன்றில்  இது தொடர்பில் அறிக்கை சமரப்பித்துள்ள பொலன்னறுவை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி,  பாடசாலைச் சிறுவர்கள் சிலரை தொலைபேசி உரையாடல்கள் மூலம் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்த முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் ஒலி நாடாக்கள் பொலிஸாரிடம் உள்ளதாகத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.