திங்கள், 16 அக்டோபர், 2023

அக்கரைப்பற்று கார்த்திகேசுக்கு தங்க மனசு !!

 


களவு கொள்ளை பிறரின் உடமை அபகரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருகின்ற போதிலும் வீதிகளில் கண்டெடுக்கப்படும் பெறுமதியான தனக்கு உரித்தில்லாத பொருட்களை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் மனிதர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

இவ்வாறான சிறப்பு சம்பவமொன்று அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்று பஸ் நிலையத்தின் அருகாமையில் நடந்து சென்ற கோயில் வீதி ,திருக்கோவில் 01  இனை சேர்ந்த அன்ரி மலேரியா ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் கணபதிப்பிள்ளை கார்த்திகேசு என்பவர் தங்க மாலையொன்று  மற்றும் மோதிரம் ஒன்றினையும் கண்டெடுத்துள்ளார்.

இதன்போது அருகில் இருந்த இன்னுமொருவர்  அது தன்னுடையது என கூறி பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும் அதனை உரியவரிடமே ஒப்படைக்க வேண்டும் என கூறி அக்கரைப்பற்று பொலிஸாரிடம் விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸாரால்  நகையினை மீட்டு பொலிஸ் நிலையத்தில் வைத்து  மோதிரத்தை ஒப்படைத்த  கார்த்திகேசுவை  பாராட்டி நன்றியினை தெரிவித்துள்ளனர்.

 வி.சுகிர்தகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.