வியாழன், 26 அக்டோபர், 2023

திருமலையில் இடம்பெற்ற விபத்தில் 34 வயது கஜரூபன் என்ற ஐயர் பரிதாபமாக உயிரிழப்பு!!

 


திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , நபர் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாகவும் ,
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி பூநகர், 20 ஏக்கர் பகுதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஈச்சிலம்பற்றில் இருந்து சேறுநுவர நோக்கி சென்று கொண்டிருந்தபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.இவ்விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த பூநகர் சிவன்கோயிலில் பூசகராக பணி புரிபவர் எனவும் ஈச்சிலம்பற்று -பூநகர் பகுதியில் வசித்த கே.கஜரூபன் (34வயது) எனவும் தெரியவருகிறது.உயிரிழந்த பூசகரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.