செவ்வாய், 31 அக்டோபர், 2023

பொலிசுக்கு சாராயம் கொடுத்து சங்கிலி அறுத்த கில்லாடி!!

 


கொழும்பு பாஸ்டியன் மாவத்தையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் தங்கச் சங்கிலி மற்றும் கையடக்கத்தொலைபேசி ஆகியன கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றும் மிகிந்தலை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

இவர் வழக்கறிஞர் ஒருவரை சந்திப்பதற்காக கொழும்பிற்கு வந்த போது இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தருக்கு இனந்தெரியாத நபர் ஒருவர் மதுபானத்தை வழங்கியுள்ளார். அதனை பருகிய பொலிஸ் உத்தியோகத்தர் போதையான நிலையில், சந்தேக நபர் அவரது பொருட்களை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.