வெள்ளி, 27 அக்டோபர், 2023

தெஹிவளை படோவிட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேக நபர்கள் கைது!

 


துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 2 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.நேற்று (26) தெஹிவளை படோவிட்ட பிரதேசத்தில் வைத்தே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


19.08.2023 அன்று தெஹிவளை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதுடன், இது தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரும், குற்றத்திற்கு ஆதரவளித்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களிடம் இருந்து வெடிகுண்டு மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட 28 மற்றும் 31 வயதுடைய சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.