வெள்ளி, 22 செப்டம்பர், 2023

வவுனியாவில் கோர விபத்து – குடும்பஸ்தர் தினேசன் பலி!!

 


வவுனியா பறண்நட்டகல் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானார்.ஓமந்தையில் வெதுப்பம் நடத்திவரும் சிவசேகரம் தினேசன் என்பவர் வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தியிருந்த பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் இருந்து வந்த வாகனமொன்று மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் சென்ற சி. தினேசன் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் அவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.