யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி தொழிநுட்ப பீடத்தில் பகடி வதையை தொடா்ந்து இடம் பெற்ற பதற்றமான சூழலினாலேயே பீடத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை புதுமுக மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் பாலியல் ரீதியாக கடுமையான பகிடி வதைக்கு உட்படுத்தியிருக்கின்றனர். சம்பவம் தொடர்பாக புதுமுக மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் பதற்றமடைந்து, பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு அறித்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து உப விடுதிக் காப்பாளர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க முனைந்த போது, சிரேஷ்ட மாணவி ஒருவர் தகாத வார்த்தைகளினால் உப விடுதிக் காப்பாளரை ஏசியதுடன், சம்பவத்தை ஒளிப்பதிவு செய்த தொலைபேசியைப் பறித்துச் சென்றதுடன்,
விடுதியினுள் கலகத்தில் ஈடுபட்டுமுள்ளனர். இதனையடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை பிரதிப்பதிவாளர் ஒருவருமாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முனைந்த போது, பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் மற்றும்
விரிவுரைகளுக்கெதிராக சிரேஷ்ட மாணவர்கள் குழப்பத்திலீடுபட்டனர். நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நேற்று மாலை தொழிநுட்ப பீடத்தில் கல்வி பயிலும் சகல மாணவர்களும் உள் நுழையா வண்ணம் துணைவேந்தரினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பகிடி வதைக்கெதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், யாழ். பல்கலைக்கழகத்தில் இதுவரை காலமும் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை. இம் முறை பகிடி வதைக்கெதிரான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை – சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை
மாணவர்கள் மீதான உள்நுழைவுத் தடை நீக்கப்பட மாட்டாது என அறிய வருகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக