லைக்கா நிறுவன உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனத்தின் கீழ் இயங்கும் பெட்கோ நிறுவனம், 5 மில்லியன் டொலரை அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலருக்கு கொடுத்தே, எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் (Edirisinghe Trust Investment-ETI) நிறுவனத்தை கொள்வனவு செய்த தகவலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
தேசிய பொருளாதார சபைக் கூட்டம் நேற்று (26) இடம்பெற்றபோது, ஜனாதிபதி காரசாரமாக இந்த விடயத்தை விமர்சனம் செய்துள்ளார்.
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தை பெட்கோ என்ற நிறுவனத்தின் ஊடாக, சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு கொள்வனவு செய்ய எந்த அடிப்படையில் அதிகாரிகள் அனுமதியளித்தனர், இதற்கான பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது என்று ஆராயப்பட்டதா என சரமாரியான கேள்விகள் எழுப்பியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை முடிக்க, 5 மில்லியன் டொலர் இங்குள்ள சிலருக்கு பகிரப்பட்டுடதையும், இதில் 3 மில்லியன் டொலரை முன்னாள் அரசியல்வாதி ஒருவரும் பெற்ற தகவலையும் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.
ETI நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை 60 மில்லியன் டொலருக்கு செய்ய பெட்கோ நிறுவனம் கேள்விகோரல் மனு சமர்ப்பித்திருந்தது. ஆனால் உள்நாட்டு நிறுவனம் ஒன்று 61 மில்லியன் டொலருக்கு இதனை வாங்க முன்வந்தது. ஆனால் யாருக்கும் தெரியாமல் 75 மில்லியனுக்கு பெட்கோ நிறுவனத்திற்கே அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது எப்படி என ஜனாதிபதி சரமாரி கேள்வியெழுப்பினார்.
சுபாஸ் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் கொடிகட்டி பறப்பதும், தமிழ் சினிமாவில் தற்போது அதிகளவில் முதலிடுவதும் குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடவடிக்கையில் அந்த நிறுவனம் ஈடுபட்டதாக தனியார் உளவு அமைப்பொன்று சில வருடங்களின் முன்னர் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டது.
ஆதவன் ஊடகக்குழுமம் என்ற ஊடக குழுமத்தை இலங்கையில் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.வாங்கியது எப்படி?: கண்டித்த மைத்திரி!
லைக்கா நிறுவன உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனத்தின் கீழ் இயங்கும் பெட்கோ நிறுவனம், 5 மில்லியன் டொலரை அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலருக்கு கொடுத்தே, எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் (Edirisinghe Trust Investment-ETI) நிறுவனத்தை கொள்வனவு செய்த தகவலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
தேசிய பொருளாதார சபைக் கூட்டம் நேற்று (26) இடம்பெற்றபோது, ஜனாதிபதி காரசாரமாக இந்த விடயத்தை விமர்சனம் செய்துள்ளார்.
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான எதிரிசிங்க ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தை பெட்கோ என்ற நிறுவனத்தின் ஊடாக, சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு கொள்வனவு செய்ய எந்த அடிப்படையில் அதிகாரிகள் அனுமதியளித்தனர், இதற்கான பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது என்று ஆராயப்பட்டதா என சரமாரியான கேள்விகள் எழுப்பியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை முடிக்க, 5 மில்லியன் டொலர் இங்குள்ள சிலருக்கு பகிரப்பட்டுடதையும், இதில் 3 மில்லியன் டொலரை முன்னாள் அரசியல்வாதி ஒருவரும் பெற்ற தகவலையும் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.
ETI நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை 60 மில்லியன் டொலருக்கு செய்ய பெட்கோ நிறுவனம் கேள்விகோரல் மனு சமர்ப்பித்திருந்தது. ஆனால் உள்நாட்டு நிறுவனம் ஒன்று 61 மில்லியன் டொலருக்கு இதனை வாங்க முன்வந்தது. ஆனால் யாருக்கும் தெரியாமல் 75 மில்லியனுக்கு பெட்கோ நிறுவனத்திற்கே அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது எப்படி என ஜனாதிபதி சரமாரி கேள்வியெழுப்பினார்.
சுபாஸ் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் கொடிகட்டி பறப்பதும், தமிழ் சினிமாவில் தற்போது அதிகளவில் முதலிடுவதும் குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடவடிக்கையில் அந்த நிறுவனம் ஈடுபட்டதாக தனியார் உளவு அமைப்பொன்று சில வருடங்களின் முன்னர் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக