யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் பெண்மணி ஒருவரை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் சகோதரர்கள் இருவர் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரும் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கடந்த 6 மாதத்துக்குள் உரும்பிராய் பகுதியில் வயதான பெண்மணி ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மகனைத் தேடிச் சென்று தாக்குதல் நடத்தியவர்கள் மூதாட்டியை அடித்துக் கொன்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபர்களான மூவரை பொலிஸார் தேடி வந்தனர்.
பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையில், பிரதான சூத்திரதாரிகளான இருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதிக்குள் நடமாடுவதாக மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு இளைஞரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக